அப்போதுதான் அவளைக் கவனித்தேன். மஞ்சள் பூசிய முகம். கட்டிலில் கால்களை நீட்டி நளினமாக படுத்திருந்தாள். சயன கோலத்தில் இருக்கும் மகா லட்சுமியாக இருந்தாள். ஒரு கையில் வாரமலர் பிடித்திருந்தாள். மெரூன் கலர் சில்க் சாரி அவள் மாநிறத்திற்கு மிகப் பொருத்தமாக இருந்தது. மங்கள கரமாக, தேவதையாக ஜொலித்தாள். இன்று காலையில் தான் யாரோ மாப்பிள்ளை வீட்டார் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அநேகமாக இந்த மாப்பிள்ளைக்குப் பெண் பிடித்துவிடும்; விரைவில் கல்யாணம் இருக்கும் என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தாள்.
நான் அவள் தலைமாட்டில் நின்றுகொண்டிருந்ததால், நான் அவளை ரசிக்கிறேன் என்று அவளுக்குத் தெரியாது. நான் நிற்கிறேன் என்பது மட்டும் தெரியும்.