எந்தக் கைவிரல்கள் மாயத்தின் சாயத்தைக் குழைத்துக் கொண்டதோ எந்தக் கனவுகள் காலத்தின் பழுப்பில் மிதந்தலைந்ததோ எந்த ஆன்மா துயரத்தையும் ஆனந்தத்தையும் மொழியின் ஒளி பிடித்து நகர்ந்ததோ அந்த ஒன்றே கவிதையாக எங்கோ நிகழ்கிறது உள்ளும் புறமும் வெளியெங்கும் சதாநித்ய காலமும் கவிதை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது அதன் மாயத் திரியில் சில கணங்கள் எதோ சில விரல்கள் ஜோதியைக் கூட்டுகிறது அந்தக் கைவிரல்கள் யாருடையது என்பதல்ல அந்தக் கணம் நித்யத்திலிருந்தது அதன் ஸ்பரிசத்தை தொட்டு எழுதியவனுக்கும் ஒரு பெயர் இருந்தது ஆயினும் அவன் தன் பெயரில் எழுதவில்லை நித்ய கணத்திலமர்ந்து கவிதையின் தோலில் எழுதினான் அக்கவிதை கண