நான் சார்ந்திருக்கும் இந்த தலைமுறையின் தலையாய பிரச்சனை தான் களம். அதைப் பட்டவர்த்தனமாகப் பேசவும் முயல்கிறது நாவல். நாவலின் structure மற்றும் இரண்டு வெவ்வேறு காலகட்டங்கள் சேரும் இடம் யூகிக்க முடிந்தாலும் நன்றாக இருந்தது. சில இடங்கள் உண்மையில் கொஞ்சம் பதற்றமாகவும், சில இடங்கள் குறிப்பாக மானசி பாத்திரம் வரும் சில இடங்கள் முதிர்ச்சியுடன் கையாளப்பட்டிருந்தது. கடைசி அத்தியாயங்களில் நாம் சொனாட்டா தான் வாசிக்கிறோமா அல்ல தமிழ் version of ikigai வாசிக்கிறோமா என்று குழம்பும் அளவிற்கு சுய முன்னேற்ற நூலை வாசிப்பது போலிருந்தது. ஆனால் இந்த களத்திற்கு அந்த முடிவு தான் சரியென்றும் தோன்றுகிறது. எனக்கு அதில் சில ஒவ்வாமைகள் இருப்பினும் முதன்மை பாத்திரத்திற்கு அதுவே தேவை, அதனளவில் கடைசி அத்தியாயங்களுடன் ஒத்துப் போகத் தோன்றுகிறது. பாலுவின் முதல் நாவல் என்கிற அடிப்படையில், a solid debut.