அகத்திலும் புறத்திலும் போர்களும் பிளவுகளும் முரண்பாடுகளும் கூச்சலிடும் ஒரு நூற்றாண்டில் கண்விழித்து, அந்தத் துர்க்கனவின் கோரத் தீண்டலுக்கும் அதனால் ஏற்பட்ட சிதைவுக்கும் உள்ளாகியிருப்பவர்கள் குழந்தைகள்தான்.மத்தியக் கிழக்கிலும் உக்ரைனிலும் வெளிப்படையான போர் என்றால், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வெறுப்பும் சமூகப் பிளவும் அதிகரிக்கும் அகப்போர்கள். இந்த யுத்தங்களின் பின்னணியில் குழந்தைகள் பெரியவர்களாகும் காதைதான் ‘தீக்குடுக்கை’.