அன்பை மனம் எப்போதும் சிறு சந்தேகத்துடனே அணுகுகிறது. ஆயிரம் முறை, “உன்னைக் காதலிக்கிறேன்...உன்னைக் காதலிக்கிறேன்” எனச் சொல்லும் போதெல்லாம், “நிஜமா? நிஜமா?” எனக் கேள்விகளில் படரும் மனம் சமாதானித்து ஒப்புக்கொள்ளும். அதே மனம்தான் உன்னைப் பிடிக்கவில்லை என்று சொன்னதும் அதனை உண்மை என்று உடனே நம்பிவிடும், சந்தேகமே படாது. எப்போதும் மனமானது நாம் நிராகரிக்கப்படக் கூடிய இடத்தில்தான் இருக்கிறோம் என்பதைத் தீவிரமாக நம்புகிறது. அந்நம்பிக்கையை அழித்துப் போடுமளவு ஒரு காதலை வழங்குவது அத்தனை எளிதுமல்ல.
உன்னைப் பிடிக்கவில்லை என்றதும், “இல்லை, நீ பொய் சொல்கிறாய்” எனச் சண்டை பிடிக்கும் பிரியத்தைச் சம்பாதிக்க வாழ்வைச் சமர்ப்பி.