வேணாட்டில் வழக்கத்திலிருந்த மண்ணாப்பேடி - புலைப்பேடி எனும் சமூக அவலத்திற்கு எதிரான கலகத்தில் உயிர்நீத்த கேசி சகோதரர்களின் வாழ்வை கூறிடும் கதைப்பாடலே ஆற்றுமாடன் தம்புரான் கதை. கதைப்பாடலின் வரலாற்று பின்புலம் குறித்தும், தம்புரானை குல தெய்வமாக வழிபடும் ஊராளி சமூகத்தினரை குறித்தும் விவரிக்கிறது இந்நூல்.
சஜு (பிறப்பு: பெப்ரவரி 22, 1998) நாட்டாரியல் ஆய்வாளர், கவிஞர். தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் மணவாளகுறிச்சி பகுதியில் நாட்டார் தெய்வம், கலைகள் சார்ந்த ஆய்வுகள் நிகழ்த்தி வருகிறார். நாட்டுப்புறத் தாளவாத்தியக் கலைஞராகவும் செயல்பட்டுவருகிறார்.
விருதுகள் 2025 ஆம் ஆண்டில் ரமேஷ் பிரேதன் நினைவாக வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது