Jump to ratings and reviews
Rate this book

Dhik Dhik Kathaigal [Dhik Dhik Stories]

Rate this book
திக் திக் கதைகள் அமரர் ரா கி ரங்கராஜன் அவர்களால் மயிர்கூச்செறியும் சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட சிறு கதைகளின் தொகுப்பு இதிலிருந்து 10 மிகச்சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து ஒலிப்புத்தகமாக வெளிவந்துள்ளது இந்தக் கதைகள் கடைசி வினாடி வரை உங்களின் இதயத் துடிப்பை அதிகரிக்க செய்யும் சஸ்பென்ஸ் திரில்லர் வகையைச் சேர்ந்தவை. ஆங்கிலத்தில் நாம் ஜெஃப்ரி ஆர்ச்சர் மாபசான் ஓஹென்றி போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் படித்து சிலாகித்துள்ளோம் அவர்கள் கடைசி வரிகளில் ஒரு திருப்பம் வைத்து நம்மை பிரம்மிக்க வைப்பார்கள் அந்த வகையில் ரங்கராஜனின் கதை முடிவுகள் நாம் எதிர் பார்க்காத அதிர்ச்சியான திருப்பங்களைக் கொண்டது. பாம்பே கண்ணன் குரலில் வந்துள்ள இந்தக் கதைகள் காட்சிகளாக நம் கண் முன்னே விரிவது உறுதி திக் திக் என்ற இதயத் துடிப்புடன் கேட்டு மகிழுங்கள்.

Please This audiobook is in Tamil.

Audible Audio

Published July 18, 2024

About the author

Ra. Ki. Rangarajan

49 books22 followers
ரங்கராஜன் 5-10-1927-இல் கும்பகோணத்தில் பிறந்தார். இவரது தந்தை மகாமகோபாத்தியாய ஆர். வி. கிருஷ்ணமாச்சாரியார் ஒரு சமசுகிருதப் பண்டிதர். ரங்கராஜன் தன் 16-ஆம் வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-இல் ‘சக்தி’ மாத இதழிலும் ‘காலச்சக்கரம்’ என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-இல் குமுதம் நிறுவனம் சிறிது காலம் நடத்திய ‘ஜிங்லி’ என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, 42 ஆண்டுகள் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.
இவர் பல புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, முள்றி, அவிட்டம்,வினோத் ஆகியவை அவற்றுள் சில. 'நான் கிருஷ்ணதேவராயன்' இவரது குறிப்பிடத்தக்க வரலாற்றுப் புதினம். ஹென்றி ஷாரியரின் பாப்பிலான் (பட்டாம்பூச்சி), சிட்னி ஷெல்டனின் இஃப் டுமாரோ கம்ஸ் (தாரகை), தி ஸ்டார்ஸ் ஷைன் டவுன் (லாரா) மற்றும் ரேஜ் ஆஃப் ஏஞ்சலஸ் (ஜெனிஃபர்); ஜெஃபிரே ஆர்ச்சரின் எ டுவிஸ்ட் இன் தி டேல் (டுவிஸ்ட் கதைகள்) டேனியேல் ஸ்டீலின் காதல் மேல் ஆணை ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள். கிருஷ்ணகுமார் என்ற பெயரில் அமானுட கதைகளும் டி. துரைசாமி என்ற பெயரில் உண்மைக் குற்றங்களின் அடிப்படையில் குற்றக் கதைகள், வினோத் என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட செய்திக் கட்டுரைகள் (லைட்ஸ் ஆன் வினோத்) என பலவித படைப்புகளை எழுதியுள்ளார்.
இவர் 1500-க்கும் மேற்பட்ட கதைகளையும் , 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவற்றுள் பல குமுதம் ஆனந்த விகடன் முதலான இதழ்களில் தொடர்களாக வெளிவந்தன. இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்தன. பல படைப்புகள் சின்னத் திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் அண்ணா நகர் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைத்தொடர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை “நாலு மூலை” என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளன. ”அவன்” என்ற பெயரில் தன் வரலாற்றையும் எழுதியுள்ளார். இளம் எழுத்தாளர்களுக்குக் கதை எழுதும் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் எப்படிக் கதை எழுதுவது? என்ற வகுப்பினையும் தான் ஒருவராகவே நடத்தி வந்தார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.