பொ. வேல்சாமியின் மூன்றாம் நூல் இது. தமிழக வரலாற்றை மீள் கட்டமைப்பு செய்வதும் புறக்கணிக்கப்பட்டவற்றை முன்னிறுத்திப் புதிய கோணங்களைக் காட்டுவதும் இவரது எழுத்தின் பொதுவியல்பு. மதிப்பீடுகள், ஆளுமைகள் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலிலும் அவ்வியல்பு துலங்குகிறது. நூல் மதிப்புரைகள் ஆய்வுக் கட்டுரைகளாக அமைவதையும் ஆளுமைகளில் தனிமனிதர்களை விமர்சனப்பூர்வமாக வெளிப்படுத்துவதையும் இதில் காணலாம்.