அடுத்த பத்து தலைமுறைகளை அழிக்க காரணமாக இருந்த தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் என்ற ஊரில் இருந்து இதை கனத்த மனதோடு எழுதுகின்றேன். கடந்த 20 வருடங்களாக இங்குள்ள ஆய்த்த ஆடைகள் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு இன்று உயர்ந்த பதவிக்கு வந்து இருந்த போதிலும் மனதிற்குள் இருக்கும் கோபமும், இயலாமையும் எழுத்தில் எழுத இயலாத அளவிற்கு கடந்து போய்விட்டது.
2013 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் தலைசிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாக விகடன் குழுமம் இந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்து உள்ளனர்.
கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - கட்டுரைத் தொகுப்பிலிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தே தொடங்கினேன். மக்கள் அறிய வேண்டிய சில வரலாற்றுக்கூறுகள் இருக்கின்றன. இதில் திருப்பூர் ஆடை தொழிற்சாலைகள், அரிசி ஆலைகள், விவசாயம் போன்ற அத்தியாவசிய பொருட்களை சார்ந்து முதல் பாதி உள்ளது. மீதம் பாதி பக்கங்கள், மரபணு மாற்றுப் பயிர்கள் விளைப் பொருட்கள் பற்றி பேசுகிறது.
ஆசிரியர் விரிவாய்க் கூறுவதாய் நினைவில் மட்டும் எடுத்துக்கொள்கிறார். முழுமையாக இருக்கவில்லை என்பது என்னுடைய கருத்து. எனினும், இந்த புத்தகம் நினைவுக்கூர்ந்திருக்கும் பல தலைப்புகளை தனியே எடுத்து தீர வாசிக்க வேண்டும்.