என்னுரை ---------------------------- எனது பள்ளிப் பருவத்திலே இருந்தே கவிதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்தது. அறிமுக எழுத்தாளனாக கல்கி பத்திரிகையில் எனது முதல் சிறுகதை வெளியானது.
எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் கல்கி, குமுதம், குங்குமம், பாக்யா , ராணி, தேவி கணையாழி, பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.
கடந்த கால எண்ணங்கள் எல்லாம் இருட்டுக்குள் தெரியும் வெளிச்சக் கீற்றுக்களாய் தெறித்து வந்து விழுந்த கவிதைகள் எனபதால் இந்தக் கவிதைத் தொகுப்புக்கு ' இருட்டின் வெளிச்சம் ' என்று தலைப்பிட்டுள்ளேன். இவற்றில் பெரும்பாலானவை அழகியசிங்கரின் சொல் புதிது குழுவில் வெளிவந்தவை . அவருக்கு என் நன்றிகள் .
இது 'இருட்டின் வெளிச்சம் - நாகேந்திர பாரதியின் க்விதைகள் - தொகுப்பு 85 '