அவளை நோக்கித் திரும்பி குரலை செருமியவன், “பயப்பட என்ன இருக்கு? அவங்க கண்டிஷன் இப்ப வரை நல்லாதான் இருக்கு. நீ இவ்வளவு பயப்பட தேவையே இல்லை. நம்பிக்கை வைப்பேன் அது இதுன்னு பேசிட்டு இப்படி பயந்தா எப்படி?” அவளுக்கு ஆறுதல் தரும் சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் தன்னையும் மீறி சொல்லியிருந்தான். அறைக்கு செல்லப் போனவள் அவன் குரலில் அவனையே பார்த்தபடி நின்றாள். இந்தமாதிரி வலுவிழந்த நேரத்தில் அவளுக்குத் தேவை இதுபோன்ற ஆறுதல் சொற்கள் தானே! கண்ணில் தேங்கிய நீர் மீண்டும் கன்னத்தில் வழியத் தொடங்க, அதனைத் துடைத்தபடி, “நான் தைரியமா தான் இருக்கேன்” என்றவளின் குரல் உடைந்தது. மனதின் பாரம் தாங்காமல் அவளும் உடைந்து போனாள் என்று தான் சொல்ல ī