பொதுவாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளவை கதம்பம் போன்று இருந்தாலும் அவ்வெழுத்துக்களை இணைப்பதற்க்குத் தொல்லியல், வைதீக எதிர்ப்பு, சங்கராச்சாரியர் பற்றிய கட்டுரை, நமது பண்பாட்டில் மருத்துவம், திராவிட இயக்கச் சார்பு, நாட்டார் வழக்காற்றியல் ஆகிய புரிகளைக் கொண்ட நூல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உ.வே.சா. அவர்களின் சங்க இலக்கிய மீள் கண்டுபிடிப்பே வைதீகத்துக்கு மாற்றான ஒரு பெரும் பண்பாடு தென்னிதியாவில் பிறந்து வளர்ந்த வரலாற்று உன்மையினைத் தமிழ்நாட்டுக்கு எடுத்துக் காட்டியது அதுவே தமிழ்த் தேசிய இன அடையாளத்தைக் கண்டது. திராவிட இயக்கத்தார்க்கும் முற்போக்கு இயக்கத்தார்க்கும் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கான திசையினையும் காட்டியது என்று இந்நூளில் தொ.ப. மதிப்பிடுவது கவனத்துக்குரியது
Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.
Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.
பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.
அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.
உரைகல், தொ.ப வின் மற்றும் ஒரு அருமையான கட்டுரை, அணிந்துரை தொகுப்பு . நூலை படித்துமுடிக்கும் பொழுது நூறுக்கும் மேற்பட்ட வரிகளை அடிக்கோடிட்டு இருந்தேன் . அவ்வளவு செய்திகள் , நுண்ணறிவு ஆராய்ச்சிகள் , கூர்மையான மற்றும் வேறுகோண உட்பார்வை. "மொழிக்கல்வியும் மதிப்பீடுகளும்" எனக்கு பிடித்த கேள்வி பதில் கட்டுரை. படித்து முடிக்கையில் இதுவரை நான் கேட்டேயிராத பல தமிழ் வரலாற்று ஆசிரியர்களை தொ.ப அவர்கள் அறிமுகப்படுத்துகிறார் . , சிந்திக்கவைத்த சில மேற்கோள்கள் . 1. பேசுகிற மனிதனே மொழிக்கு அதிகாரி 2.தூய்மைவாதம் எல்லாமே ஒரு எல்லைக்குமேல் பாசிசசமாகத்தான் முடியும் 3. எந்த மொழியும் மாறும் தன்மை அற்றது அல்ல .அது மாறுவதனால்தான் உயிரோடு இருக்கிறது . 4. நாட்டார் தெய்வங்களைப் பின்வருமாறு விளக்குகிறார் ."நான் என்ன உடுப்பேனோ அதுதான் என் கடவுளின் உடை ,என் தெய்வத்திற்கு என்ன உணவு என்று நான் தீர்மானிக்கிறேன் .என்னுடைய கடவுள் என்னைப்போல் மீசை வைத்திருக்கும்.என்னுடைய குலதெய்வமாகிய அம்மன் நான் இறந்துபோனால் கடவைமூடி உண்ணாமல் இருப்பாள்.என்னுடைய பிணம் அந்த வழியாக போனபிறகுதான் குளித்துவிட்டு சாப்பிடுவாள் .
கண்டிப்பாக வாசிக்க மற்றும் சேகரிக்கவேண்டிய தொ.ப நூல்.
இப்புத்தகம் தொ.பரமசிவன் ஐயா அவர்களுடைய கட்டுரைகள், சொற்பொழிவுகள், நேர்காணல்கள், தன் நண்பர்களின் புத்தகத்திற்கான அவர் எழுதிய அணிந்துரைகள் என்று நிறைந்திருக்கிறது. இத்தொகுப்பில் என்னை மிகவும் ஈர்த்த இரண்டு கட்டுரைகள்: 'படைப்பிலக்கியங்களும் பண்பாட்டு வெளிப்பாடும்' மற்றும் 'குடும்ப விளக்கு அறிமுகம்'
படைப்பிலக்கியங்களும் பண்பாட்டு வெளிப்பாடும்: "பண்பாடு என்பது பழமையைக் கொண்டாடுவது அன்று உயிர் உள்ள வேர்களை மட்டும் அடையாளம் கண்டு பாதுகாப்பதாகும்" என்பது ஆசிரியரின் கூற்று. ஒரு நிலத்தின் தன்மை அங்கு வாழும் மக்களின் பழக்கவழக்கங்களைப் பிரதிபலிக்கும் படைப்பிலக்கியங்களின் தேவையினை இந்தக் கட்டுரையில் விளக்கியுள்ளார். பெரியாழ்வார் தொடங்கி எழுத்தாளர் கி.ரா வரையிலும் அவரவர் படைப்புகளில் எப்படி அவர்கள் வாழ்ந்த அந்த நிலத்தின் பண்பாட்டினை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதனை எடுத்துக்காட்டோடு நாம் இந்தக் கட்டுரையில் அறியலாம்.
குடும்ப விளக்கு அறிமுகம்: பாரதிதாசனின் குடும்ப விளக்கை வாசிப்பதற்கு முன் தொ.ப.வின் இந்த அறிமுகம் வாசிப்போருக்கு உதவியாக இருக்கும். ரௌத்திரம் பொங்கும் எழுத்துக்களால் அறியப்பட்ட பாரதிதாசனை மெல்லிய தென்றல் போல அறிமுகப்படுத்தும் அவரது படைப்பான குடும்ப விளக்கு என்று கூறுகிறார் தொ.ப. பாரதியாரை தன் குருவாக ஏற்றுக் கொண்ட பாரதிதாசனின் வாழ்வானது பாரதியை போல் இல்லாமல் திருமணம், மக்கட்பேறு என்ற குடும்ப வாழ்விற்கான அத்தனை இன்பங்களையும் முழுமையாக அனுபவித்த காரணத்தால் குடும்ப விளக்கு என்ற படைப்பினை அவரால் இயற்ற முடிந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
பெரியார் வழியில் தானும் ஒரு நாத்திகன் என்று வெளிப்படையாக அறிவித்த பாரதிதாசனால் அதற்கேற்ற அரசியலில் முழுதாகத் தன்னை ஈடுபடுத்த முடியாததற்கு அவருடைய வாழ்க்கை போராட்டமும் வறுமையும் எவ்வளவு பெரிய காரணங்களாக அமைந்தது என்பதை தொ.ப. வருத்தத்துடன் பகிர்கிறார்.
மொழிக் கல்வியானது எப்படி அமைய வேண்டும், அதைக் கற்பிக்க வேண்டியதன் தேவை போன்றவற்றை மொழிக் கல்வியும் மதிப்பீடுகளும் எனும் நேர்காணல் கட்டுரையில் நாம் அறியலாம். மொழிக் கல்வியின் வளர்ச்சியானது பள்ளிகளை விட, நம் வீடுகளில் புழங்கும் சொற்களின் வளமையைச் சார்ந்திருக்கிறது என்று ஆசிரியர் கூறியிருப்பது நம் வீடுகளில் பிள்ளைகளிடம் ஆங்கிலத்தை விடுத்து தத்தம் தாய்மொழியில் உரையாடுவதின் முக்கியத்துவத்தை உணர்த்தும். நாம் எழுத்தறிவிற்கு முன் வாழ்க்கையை இசைபட வாழக் கற்றுக்கொண்டவர்கள். ஆக இசையோடு மொழிக்கல்வியை கற்கும்பொழுது பிள்ளைகளின் அறிவானது விரிவடையும் என்று தொ.ப. கூறியிருப்பதை மறுக்கமுடியவில்லை.
திருவள்ளுவரை ஒரு புரட்சியாளராக அணுகச் சொல்கிறது தொ.ப. ஐயா எழுதிய ஜி.யு.போப் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்திற்கான முன்னுரை. உ.வே.சா, நா. வானமாமலை, சி.வை தாமோதரன் பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டின்மேல் தொ.ப. ஐயா கொண்டிருக்கும் மதிப்பினை இப்புத்தகத்தில் தொக்குக்குப்பட்டிருக்கும் சில புத்தகத்திற்கான தொ.ப. ஐயாவின் அணிந்துரைகள் மற்றும் கட்டுரைகளை வாசித்த பொழுது அந்த அறிஞர்களின் படைப்புகளை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது.
மொத்தத்தில் தொ.ப. ஐயா கொண்டிருந்த கருத்தியல் தளத்தை வெவ்வேறு பாணியில்: கட்டுரைகளாகவும், அணிந்துரைகளாகவும், சொற்பொழிவாகவும், நேர்காணலாகவும் நாம் ஒரே நேரத்தில் அறிந்து கொள்ள வாசிக்க வேண்டிய ஓர் அருமையான புத்தகம் 'உரைகல்'
Highly recommend.தொ.ப வின் பல முக்கிய கட்டுரை ,பேச்சு, மதிப்பீடு தொகைத்து உள்ளது.எனது வாசிப்பு அனுபவித்தில் இந்த புத்கம் புதுமையானது ஒரே genre போன்றல்லாது பல்வேறு கலவைகளின் தொகுப்பு அந்த புத்தகம்.ஆசிரியரை ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் ,ஆசிரியர் ஒவ்வோர் மேல் உள்ள கண்ணோட்டத்தையும் கண் முடிகிறது உ.வே.சா அவர் பற்றிய கட்டுரை ,திருக்குறள் அறிமுகவுரை எல்லாம் சிறந்தவை .