Jump to ratings and reviews

Ezham Suvai

கீரையத் தொட்டுக்க... உடம்புக்கு குளிர்ச்சி!’, ‘‘எதுக்கு கறிவேப்பிலைய எல்லாம் தூக்கிப் போடுற... நல்லா மென்னு தின்னு. உடம்புக்கு அவ்வளவு நல்லது’, ‘‘பெரண்டை தொவையலைத் தொட்டுக்க, வவுத்துக்கு நல்ல மருந்து’ &உணவையே பிணி தீர்க்கும் வழியாகக் கடைபிடித்த நம் முந்தைய தலைமுறையின் நினைவுகள் மட்டுமே நம்மிடம் மிச்சம் இருக்கின்றன. சேர்ந்து சாப்பிடும் வழக்கமே மறைந்துவிட்ட இந்தக் காலச்சக்கர ஓட்டத்தில் எது நல்ல உணவு, எது உடலுக்கு உகந்தது என்பதை எல்லாம் அறிவதற்கே நேரம் இல்லை. சளிப் பிடித்தால் தூதுவளை ரசம், சிறுநீரகப் பிரச்னைக்கு வாழைத்தண்டு கூட்டு, உடல் உறுதிக்கு முருங்கைக் கீரை என நம் உடல் சம்பந்தமான தேவைகளுக்கு ஏற்ற உணவைத் தேர்தெடுத்து உண்ண, இப்போது எத்தனை பேரால் முடிகிறது? கால்களில் சக்கரம் கட்டாத குறையாகச் சுழலும் இன்றைய உலகம், ‘கிடைத்ததை உண்போம்’ என்கிற மனப்போக்குக்கு வந்துவிட்டது. தேர்ந்தெடுத்து உண்ணும் ஒரு சிலரும் சுவையை மட்டுமே மனதில் கொள்கிறார்களே தவிர, உடல் நலனை அல்ல! பருவநிலை, பாதிப்பு, தேவை ஆகியவற்றைப் பட்டியலிட்டு அதற்குத் தகுந்த உணவுகளை இந்த நூலில் வகைப்படுத்திக் காட்டுகிறார் மருத்துவர் சிவராமன். நெல்லிக்கனி, முட்டைக்கோஸ், முருங்கைக் கீரை, கொத்தமல்லிக் கீரைகளில் உடலை வனப்பாக்கும் அதிசயங்கள் நிறைந்திருக்கின்றன. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வெந்தயம், இதயத்தைக் காக்கும் பூண்டு, மலச்சிக்கலைத் தீர்க்கும் பிடிகருணை என உணவின் மருத்துவ மகத்துவங்களை நூல் ஆசிரியர் சிவராமன் அற்புதமாக எழுதி இருக்கிறார். பாரம்பரிய வாழ்வியலையும், இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு உணவு விஷயத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய நல்லன எல்லாவற்றையும் சொல்லும் மகத்தான நூல் இது. ஒரு மருத்துவராக மட்டும் அல்லாமல், இன்றைய சூழல் மீது அக்கறை கொண்டவராக, இளைய தலைமுறை மீது மாறாத நம்பிக்கைக் கொண்டவராக சிவராமன் எழுதி இருக்கும் இந்த நூல், உணவு தொடங்கி உள்ளம் வரையிலான பலவிதத் தெளிவுகளையும் நமக்குள் ஏற்படுத்தும்.

104 pages, Paperback

First published January 1, 2014

Loading...
Loading...

About the author

K. Sivaraman

17 books38 followers

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
39 (53%)
4 stars
26 (35%)
3 stars
6 (8%)
2 stars
0 (0%)
1 star
2 (2%)
Displaying 1 - 4 of 4 reviews
180 reviews3 followers
July 31, 2017
Importance of six tastes and how food should be taken , which should come first and which last exlained in detail and how our ancestors maintained health and made this proper way of eating in day to day life
Profile Image for Prabhu R..
Author 3 books34 followers
June 29, 2015
In the same spirit as his other two books I have read Aaram Thinai - Part 1 and Aaram Thinai - Part 2, Dr. Sivaraman has really created the awareness that we are losing about the rich nutritious food that our forefathers had in practice. We are being attracted by the corporate fancy statements about the food we eat and we have already started to despise the food that has kept us healthy for so many generations. More importantly, the preparation and inclusion of those food items that kept out health in balance is mostly ignored or forgotten by the arrival of packed foods that have nothing but attractive labelling for the most part.
37 reviews
Read
June 9, 2016
நாம் சமையல் செய்ய பயன்படுத்தும் கீரை ,காய் , கறி மற்றும் பழங்கள் பற்றிய அருமையான அறிமுகமும், அவற்றின் மருத்துவ குணங்களும் பற்றி விளக்கும் அருமையான ,ஆரோகிய உணவு வழிகாட்டி புத்தகம்.
Displaying 1 - 4 of 4 reviews