Jump to ratings and reviews
Rate this book

இந்திய வரலாறு

Rate this book
இந்தியாவில் ஏற்பட்ட மாறுதல்கள், பேர்கள், சமுதாய அமைப்பின் பிரத்யேக தன்மை ஆகியவற்றை மார்க்சிய ஆய்வுநோக்கில் கூறுகிறது இந்நூல்.

143 pages, Paperback

16 people want to read

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (60%)
4 stars
1 (20%)
3 stars
1 (20%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for மகிழ்நன்.
45 reviews4 followers
November 15, 2020
ஆரியர்கள் வருகை முதலாக இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசு கேரளத்தில் அமைந்தது வரையிலான இந்திய வரலாற்றை மார்க்சிய நோக்கில் விவரிக்கும் நூல். கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் முதலமைச்சரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்களால் எழுதப்பெற்றது. எழுதப்பெற்ற ஆண்டு 1977. கிட்டத்தட்ட 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நுழையும் ஆரியர்கள் இங்கு வாழ்ந்து வரும் சிந்து சமவெளி மக்களை வென்று தங்கள் ஆட்சியைத் தொடங்குகிறார்கள். அக்காலக் கட்டத்திலேயே ரிக் வேதம் இயற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மெளரியர்கள்,குப்தர்கள், சுல்தான்கள், மொகலாயர்கள் என வேவ்வேறு பகுதிகளை ஆள்கின்றனர். இவ்வாறு பல்வேறு இனக்குழுக்களால் ஆளப்பட்டுக்கொண்டிருக்கும் இந்நிலத்தின் எல்லை தொடர்ச்சியான மாறிக்கொண்டே இருக்கிறது.

1700 களில் இந்தியாவிற்கு வரும் வெள்ளையர்கள், பின்னர் இந்நிலத்தினை பல்வேறு சிறு அரசுகள் ஆள்வதைக்கண்டு படிப்படியாக அரசியலில் ஈடுபட்டு அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றுகின்றனர். அதனைத் தொடர்ந்து ஏற்படும் போராட்டங்களின் விளைவாக இந்தியா விடுதலை அடைகிறது.

மார்க்சிய நோக்கில் எழுதப்பெற்ற நூலாதலால் முதலாளித்துவத்தின் தீமைகள் விரிவாக விவாதிக்கப்படுகிறது. அதே காலகட்டத்தில் நடந்த மற்ற முக்கிய நிகழ்வுகள் தவிர்க்கப்படுகிறது. மற்ற ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மை குறைவாக விவாதிக்கப்படுகிறது.

வாசிக்க வேண்டிய புத்தகம்.


Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.