நம் நிலம் எல்லா மாற்றங்களையும் தாண்டி எந்த காலத்திலுமே சாதியத்தை வேரோடு பற்றியிருக்கிறது என்பதைப் பேசும் இக்கதை, கூர்மையான பெண் கதாப்பாத்திரங்கள் வழி ஒரு தட்டையான சமூகத்தை உட்புறம் நின்று அவலத்தை உணரும்படியான வாசிப்பைக் கோரும் நாவல் இது.
மயிலன் ஜி சின்னப்பன் (மயிலன் சின்னப்பன்) (ஜூன் 12, 1986) தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர். மருத்துவராகப் பணிபுரிகிறார். தமிழ் வரலாற்றில் இருந்தும் மருத்துவத்துறையில் இருந்தும் உளவியல் கோணத்தில் புதிய கருக்களை எடுத்து சிறுகதைகள் எழுதிவருபவர்.