பாவை சந்திரன் எழுதிய "ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு" பகுதி 1 மற்றும் 2, 2010ஆம் ஆண்டு வெளியானது. சுமார் 30 ஆண்டுகள் நீடித்து, 2009இல் முடிவடைந்த இலங்கை உள்நாட்டு போரின் கொடூரமான நிகழ்வுகளை துல்லியமாக பதிவு செய்துள்ள இந்நூல், அதிர்ச்சி தரும் நிகழ்வுகளின் தொகுப்பாகும்.
சிங்களர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான பதட்டம் மற்றும் மோதல்களிலிருந்து உருவான இந்த இரத்தமோதலில் பிறந்த கதைகளைக் கொண்டு, நூல் போரின் உண்மை நிலையை வெளிச்சமிடுகிறது. போரின் பாதிப்புகளையும் அதன் பின் நிகழ்ச்சிகளையும் விரிவாக பதிவு செய்கிறது. இப்போர் மற்றும் பெருமளவு உயிரிழப்புகளால், நாடும் மக்களும் எவ்வாறு மாற்றத்திற்குள்ளாகினர் என்பதை இந்நூல் ஆழமாக ஆராய்கிறது.
Eezha Thamizharin Poraatta Varalaru Part II, written by Pavaichandran S and published in the year 2010, is a hard-hitting compilation of the brutal Sri Lankan Civil War, which lasted nearly 30 years and ended in 2009. The book brings out stories born in a bloody conflict from the tension between minority Tamil groups and the Sinhalese. The book recounts the war and its aftermath, exploring how war and mass death changed the country and its people.
இந்த வரலாற்று வலிமைமிக்க நூலில் மேதகு பிரபாகரன் அவர்கள் எவ்வாறு இயக்கத்தை உருவாக்கி, தமிழ்மக்களை இனவெறி கொண்ட சிங்களரிடமிருந்து காக்க ஆயுதப் போராட்டத்தில் இறங்கினார் என்பதை ஆசிரியர் பாவை சந்திரன் ஆதாரப்பூர்வமாக விரிவாகச் சுட்டுகிறார். குறிப்பாக, ராஜீவ் அரசாங்கம் மேதகுவை தில்லிக்குச் சந்திப்பிற்காக அழைத்து வந்து, ஒரு நட்சத்திர விடுதியில் சிறைபோல் தங்கவைத்து, அதேவேளை இலங்கையுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்ட அதிர்ச்சி நிகழ்வை தெளிவாகச் சொல்லியிருப்பது வாசகரின் மனதை உலுக்கும்.
ஒவ்வொரு கட்டப் போர்களின் முன்னேற்றமும், அக்காலங்களில் தமிழ்நாட்டில் யார் யார் ஈழத்தமிழருக்காக குரல் எழுப்பினர் என்பதும் தெளிவாக அறிய முடிகிறது. இலங்கையில் அதிபர்கள் மாறிக்கொண்டே இருந்தபோதிலும், தமிழர் எதிர்ப்பு கொள்கையில் அவர்களின் உறுதி ஒருபோதும் தளராததை இந்நூல் வெளிப்படுத்துகிறது.
இந்தியப் படை "அமைதிப்படை" எனப்படும் பெயருக்குள், ஈழத்தில் தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்திய கொடுஞ்செயல்கள் அனைத்தையும், அந்தப் படையின் தளபதி ஒருவர் எழுதிய நூலின் சான்றுகளோடு ஆசிரியர் விளக்குகிறார். அவற்றைப் படிக்கும் போது, இந்தியப் படைக்கும் ராஜீவ் அரசிற்கும் எதிரான வெறுப்பு மேலும் தீவிரமடைகிறது. அதோடு, அக்காலத்தில் தமிழ்நாட்டில் பெரும் போராட்ட அலைகள் எழாததற்குக் காரணம் அப்போதைய ஆட்சியே என்பது வெளிச்சத்துக்கு வருகிறது.
நூலில் பல வீரத்தியாகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக திலீபன் மற்றும் அன்னை பூபதி, அமைதிப் பாதையைத் தேர்ந்து போராடியபோதும், அவர்களின் உயிரிழப்புக்குக் காரணம் இந்திய அரசே என்பதை ஆசிரியர் வலியுறுத்துகிறார். மேலும், மேதகு பிரபாகரன் அவர்கள் இடைக்கால அரசை நிறுவி, அதனை முழுமையாகத் தமிழில் செயல்படுத்திய விதம், தமிழருக்கு ஒரு பெருமைமிகு அரசியல் வரலாற்றுச் சின்னமாக அமைந்துள்ளது.
போரைக் தவிர்க்க உலக நாடுகளோடு இடையறாது பேச்சுவார்த்தை நடத்திய மேதகு, அப்போதும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி, ஈழத்தமிழரை வஞ்சித்த விதத்தை அறியலாம். நூலின் இறுதியில், 2008ஆம் ஆண்டு மேதகு பிரபாகரன் அவர்கள் நிகழ்த்திய மாவீரர் நாள் உரை முழுமையாக இடம் பெற்றுள்ளது. அந்த உரையின் ஒவ்வொரு சொற்றொடரும் இதயத்தை உருக்கி, அவரின் உயர்ந்த சிந்தனையையும் மனநிலையையும் வெளிப்படுத்துகிறது.
இந்த மாமனிதரின் உரையுடன் நூல் நிறைவுறுகிறது. பல அரிய புகைப்படங்களோடு, இது ஓர் உயிர்மூச்சுள்ள வரலாற்றுச் சாசனமாக திகழ்கிறது. அனைத்து மானத்தமிழர்களும் கட்டாயம் வாசித்து, நமது இனம் எவ்வாறு உலக சக்திகளின் துணையோடு அழிக்கப்பட்டது என்பதையும், மேதகு பிரபாகரனின் வீரமும் மானத்தமிழரின் தியாகமும் எவ்வாறு எதிர்கால சந்ததிகளுக்கு கடத்தப்பட வேண்டும் என்பதையும் உணர வேண்டிய நூல் இது. இறுதியில், இதை மூடும் போது மனம் கனத்துவிடுகிறது.