கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை ஜப்பானை ஆண்ட அரசர்கள், அரசியர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், அரசவைப் புலவர்கள், மதகுருமார்கள் உள்ளிட்ட 100 பேரின் மிகச்சிறந்த பாடல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஃபுஜிவாரா தெய்க்கா என்பவர் கி.பி. 1235 百人一首 (Hyaku nin isshu Verses from Hundred people) என்ற பெயரில் பதிப்பித்தார். நம் சங்க இலக்கியங்களில் அகத்திணை புறத்திணை என வகுத்திருப்பதுபோல் அல்லாமல் ஜப்பானிய இலக்கியங்களில் எல்லா இலக்கியங்களிலும் வீரம் தவிர்த்துக் காதல், இயற்கை வர்ணனைகள், வாழ்வியல் சிக்கல்கள் ஆகியவற்றைப் பொதுவான கருக்களாகக் கொண்டு செய்யுள்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. தான்கா என்னும் ஐந்தடிச் செய்யுள்களாக அமைந்துள்ள இவற்றின் தமிழ்வடிவம் வெண்பாவாக இந்நூலில் தரப்பட்டுள்ளது. ஆசிரியர் குறிப்பும் அருஞ்சொற்பொருளுடன் கூடிய விளக்கவுரையும் இந்த ஜப்பானிய இலக்கியத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.