கதைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் வாசகனுக்கான உரையாடல்களை சாத்தியமாக்கியிருக்கின்றன. தீர்ப்பையோ, முற்போக்கையோ, பிற்போக்கையோ முன்வைப்பதில்லை. ஆனால் நாம் நிறைய பேச இந்த கதைகள் தன் எல்லா சாளரங்களையும் திறந்து வைக்கின்றன. நவீனின் கதைகள் எனக்கு மிக நெருக்கமான உறவைத் தருகின்றன. வாசகர்களுக்கும் நிச்சயம் தரும். இந்த நெருக்கம் மாந்தர்களின் மனக்கண்களை சகல திசைகளிலும் திறந்து வைப்பதால் உண்டாகிறது. கூச்சத்தை தூக்கி தூர எறிந்தாலும் அவரது கவனமெல்லாம் பேசப்படும் விசயம் இலக்கியமாக வேண்டும் என்பதில்தான் இருக்கிறது. காமத்திலிருந்து காமத்தை கடக்கிற இடம்; சாதியிலிருந்து சாதியை கடக்கிற இடம்; இப்படி சொல்லமுடியும். இளைஞர் கூட்டத்திலிருந்து நவீன் வேறுபடு&