எண்ணம் யாவும் நீயடி! என் நிழலின் பாதி நீயடி! பெண்ணே உன்னை காணவே கண்கள் கொண்டேன் நானடி! உலகத்தின் கடைசி நொடியிலும் உன்னோடு உடனிருப்பேன் நான். நீயில்லா உலகத்தில் நொடி பொழுதில் உயிர் துறப்பேன் நான். யாவும் நீயாக காண்கிறேன், உன்னில் என் நேசம் துளிர்த்தது. நீயே நானாக மாறவே துடிக்கிறது என் நெஞ்சம்.