பராக்குப் பார்ப்பது என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் குறிப்பாக மனிதர்களுக்கு ஒரு அத்யாவசியமான குணம். அதிலும், பத்திரிகையாளர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும், கலைஞர்களுக்கும் இது கூடுதல் தகுதி. வெவ்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற சிவாஜி கணேசன் சந்திக்கிறவர்களிடமிருந்து ஏதாவது ஒரு அம்சத்தை எடுத்துக் கொண்டு விடுவார். அதை உருவேற்றி, மெருகேற்றி வெள்ளித்திரையில் நிலைபெற்றிடச் செய்திடுவார் என்று சொல்கிறார்கள். ரஷ்யாவின் மகோன்னதமான எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியிடம் “எழுத்தாளனுக்கான குணாம்சம் என்ன, ஒரு வரியில் சொல்ல முடியுமா?” என்று கேட்டார்கள். “ஒரு வரியில் அல்ல, ஒரு வார்த்தையில் சொல்கிறேன். அது கவனம்” என்றார் அவர்.
Pretty nice collection of articles by the author written in various newspapers and periodicals. Interesting information not popularly known that appeared in dailies. However, the book's title based on a bland comedy could have been better, though there is an article written to explain and relate to that comedy. Overall a nice read!