கணவனுக்கு தெரியாமல் எழுத்தாளராக இருக்கும் மனைவி கிருத்திகா... கதையில் இருந்து ஒரு டீசர் சமையலறை தான் அவள் உலகம்... சமைத்துக் கொண்டே இருந்தாள் கிருத்திகா... காலையில் இருந்து வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டே செய்து கொண்டு இருக்கின்றாள். அது அவளுக்கு பழகியும் விட்டது... ஹாலில் அவளது நாத்தனார் ராஜியோ அலைபேசியையே பார்த்துக் கொண்டு இருந்தாள். " எப்போ பார்த்தலும் ஃபோன் தானா? " என்று திட்டிக் கொண்டே கிருத்திகாவின் கணவன் சந்த்ருவோ ராஜிக்கு அருகே அமர , ராஜியோ , " அண்ணா கதை வாசிச்சுட்டு இருக்கேன்... " என்றாள். அவனோ , " என்னடி எப்போ பார்த்தாலும் கதை கதைன்னே சொல்லிட்டு இருக்க?? " என்று சீறிக் கொண்டே அலைபேசியை பிடுங்க , " ஐயோ கொடுங்க செம்ம இன்டெரெஸ்ட் ஆஹ் இருக்கு "