‘விடிய விடியப் பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாம தனியாகவே வண்டியை ஓட்டிட்டு வந்துட்டானா?’ என எண்ணிப் பார்க்கவே அவளுக்கு மலைப்பாக இருந்தது. அயர்ந்து உறங்குபவனை எழுப்பக் கொஞ்சமும் மனம் வரவில்லை.
தன் மீதிருந்த போர்வையை அப்பொழுதே கவனித்தவள் யோசனையாக அதனையும் அவனையும் மாறி மாறி பார்க்க, அந்த வயதுக்குரிய சிலிர்ப்பு அவளுள்! மனம் மலர் சேர்ந்த பட்டாம்பூச்சியின் படபடப்பைத் தத்தெடுத்துக் கொள்ள, இதழ்களை வேகமாக தன் பற்களால் சிறைபிடித்துக் கொண்டாள்.
சில நொடிகளில் தன்னை மீட்டு அவசரமாகப் போர்வையை மடித்து பின் சீட்டில் போடப் போனவள், அதைப் போடாமல் நிறுத்தி மீண்டுமொருமுறை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டாள். உடலும் மனதும் அடைமழையில் நனைந்தது போல சில