சென்னையின் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றாம் தேதிக்கும் முப்பதாம் தேதிக்கும் அலாரத்திற்கும் உடல் சோர்வுக்கும் அதட்டல்களுக்கும் கொஞ்சல்களுக்கும் தாயுக்கும் மனைவிக்கும் இடையே போராடிக்கொண்டிருக்கும் பல்லாயிருக்கணக்கானோரை போன்ற ஓர் மனிதி ப்ரியா...
வெறுமையின் வெருட்டல்களுக்கும் ஈ.எம். ஐக்கான ஓட்டங்களுக்கும் இடையே காணாமல் போன தன் வாழ்க்கை,தனக்கான அங்கீகாரம் தனக்கான காதல் தனக்கானத்தான்...இவையெல்லாவற்றையும் கொண்டு ஓர் உலகம் உயிரில்லா ஓர் எலக்ட்ரானிக் சாதனம் மூலம் அவளுக்கு கிடைக்க...அதற்காக அவள் தனக்கான புது அடையாளத்தை உருவாக்கி கொள்ள இறுதியில் அந்த அடையாளம் அவளை எங்கு இழுத்து சென்றது...அவள் வாழ்க்கையை என்ன செய்தது...