Jump to ratings and reviews
Rate this book

வெண்முரசு #4

வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்

Rate this book
வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம்.

நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச் சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, தோழனை, காதலனை. அவள் கொண்டது அழியாத பிரேமை. மறுபக்கம் கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து மதுரையை வென்றெடுக்கும் கிருஷ்ணனின் கதை.
கம்சனும் ராதை அளவுக்கு கிருஷ்ணனை எண்ணிக் கொண்டிருந்த உபாசகனே. அவன் சென்ற வழி ஒன்று. ராதை சென்ற வழி ஒன்று. இருவழிகளையும் இருவகை யோக மரபுகளுக்கான குறியீடுகளாகவும் இந்நாவல் கையாள்கிறது. ராதாமாதவம் என்னும் ராஸமார்க்கம் என்றும் சொல்லப்படும் கிருஷ்ண உபாசனையை அதை உணரும் வாசகர்களுக்காக முன்வைக்கிறது.

பூத்துக்குலுங்கும் விருந்தவனம், பெருகிச்செல்லும் யமுனை, வேய்குழல் நாதம் என இனிமையை அனைத்து வரிகளிலும் நிறைத்து வைத்திருக்கிறது இந்நாவல். பித்தின் விளிம்பில் நடனமிட்டுச் செல்லும் மொழி. ஒவ்வொரு வரியையும் வாசிக்க வைக்கும் கவித்துவம். கண்ணனை இலக்கியம் வழியாக அணுகிச்செல்லும் ஒரு யோகம் இது.

288 pages, Hardcover

First published August 1, 2014

28 people are currently reading
113 people want to read

About the author

Jeyamohan

210 books846 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
74 (60%)
4 stars
32 (26%)
3 stars
12 (9%)
2 stars
1 (<1%)
1 star
3 (2%)
Displaying 1 - 10 of 10 reviews
7 reviews7 followers
April 27, 2018
கவித்துவமும் பித்தும் களிநடனமிடும் மொழி. ஜெமோ தமிழ்க்களித்த மற்றுமோர் செவ்வியல் உச்சம். நூல் நுழைகையில் அலையலையாய் நானறியா கவின் சொற்கள் தாக்க தடுக்க வலுவின்றி தமிழகராதியிடம் சரண்போந்தேன். நல்வேளை நான் சங்ககாலத்தில் பிறந்தேனில்லை இலையேல் புறமுதுகிட்டதற்காய் வடக்கிருந்து உயிர்விட்டாலும் விட்டிருப்பேன். நூல் முடிக்கையில் கமலஹாசன் சொன்னதை நினைந்துகொண்டேன் "ஒன்று நாம் ஜெமோவை போல் எழுதவேண்டும் இல்லை அவரை கொல்லவேண்டும்".
Profile Image for Anitha Ponraj.
277 reviews44 followers
September 6, 2023


புத்தகம் : வெண்முரசு - நீலம்
ஆசிரியர் : ஜெயமோகன்
வாசித்தது : venmurasu.in
அச்சுப் பதிப்பு பக்கங்கள் : 288

இதுவரை வாசித்த வெண்முரசு புத்தகங்களுக்கு எதுவும் தொடர்பில்லாத ஒரு தனிக்கதை. கண்ணனின் கதை.

ராதையுடன் தொடங்குகிறது. அவளோடே முடிகிறது.

ஆசிரியருக்கு மிக நெருக்கமான புத்தகம் என்று முகவுரையில் குறிப்பிட்டிருப்பார். எனக்கும் கண்ணனை பிடிக்கும். எனவே மிகவும் ஆர்வமாக தொடங்கிய புத்தகம்.

முதல் பாதி மிக அழகாக கண்ணனின் கதையை, லீலைகளை கவிதையாக காளிந்தியாய் வழிந்து சென்ற நீலம் மறுபாதியில் மீள முடியாத தேக்கநிலை.

வர்ணனைகளை அதிகம் எழுதி ஒரு கட்டத்தில் புத்தகம் வாசிப்பதையே வெறுக்கும் நிலைக்கு கொண்டு சென்று விட்டார்.

வர்ணனைகளுக்கு இடையில் கதையை கண்டுபிடிப்பதே கடினமாகிவிட புத்தகம் முடிந்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது சற்று ஏமாற்றத்தையே தந்தது.

இதுவரை வாசித்ததிலே சிறிய புத்தகம் ஆனால் வாசிக்க அதிகம் நாட்கள் எடுத்துக் கொண்டதும் இதுவே.

ஒரு கட்டத்தில் ஷண்முவேல் அவர்களின் ஓவியங்களே சற்று இளைப்பாறல் தந்து அடுத்த பக்கத்தை திருப்ப உந்துதலாக இருந்தது.

நீலம் - பக்கங்கள் அனைத்திலும்
நீளம் - அதன் வர்ணனைகள்
31 reviews1 follower
May 23, 2023
The story evolves in the exploration of the love of krishana and rathai.
Profile Image for Bhuvan.
254 reviews42 followers
October 3, 2024
Kannan as hero.

Contains a lot of poetry.

Loved Raadhai.

Many differences from the actual Mahabharata.

Liked it.
Displaying 1 - 10 of 10 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.