Jump to ratings and reviews
Rate this book

வெண்முரசு #5

வெண்முரசு – 05 – நூல் ஐந்து – பிரயாகை

Rate this book
www.venmurasu.in
www.jeyamohan.in
http://venmurasudiscussions.blogspot.in

First Chapter -> https://venmurasu.in/2014/10/20/

Preface - முகம் ஐந்துடையாள்
http://www.jeyamohan.in/72760#.WfIdft...
பிரயாகை என்ற இந்நாவல் வெண்முரசு நாவல்வரிசையில் முதற்கனல்,மழைப்பாடல்,வண்ணக்கடல்,நீலம் ஆகியவற்றுக்குப்பின் ஐந்தாவது. ஒரு தனிநாவலாக இது திரௌபதியின் பிறப்பின் பின்னணியையும் அவளுடைய ஆளுமையின் முழுமையையும் சொல்லி முடிகிறது. அதன் ஒழுக்கில் வாழ்க்கையை ஆட்டுவிக்கும் நுண்ணுணர்வுகளை வஞ்சங்களை விழைவுகளை விரித்துரைத்துச் செல்கிறது.
மகாபாரதம் காட்டும் தரிசனங்களில் முக்கியமானது வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் ஒன்றுடன் ஒன்று தொட்டுத்தொட்டுச் சென்று ஒட்டுமொத்தமாக ஒரு முழுமையை உருவாக்கும் விந்தை. தனித்தனியாக நோக்கினால் அவையனைத்தும் தற்செயல்கள் எனத் தோன்றலாம். தொகுத்து நோக்குகையில் பெரும் கோலம் ஒன்று தெளிந்துவரும். இந்நாவல் அளிக்கும் பார்வை அதுதான்
நுண்ணியவற்றில் இருந்து பேருருவங்கள் எழுகின்றன. வஞ்சம் வஞ்சங்களாக விளைகிறது. விழைவு விழைவின் பெருக்காகிறது.ஒன்று பிறிதொன்றை என இங்குள்ளவை அனைத்தும் செயலூக்கம் கொண்டு வாழ்க்கையை சமைப்பதை எழுதவே இந்நூலில் முயன்றிருக்கிறேன்
இந்நூலின் ஓவியங்களை அமைத்த நண்பர் சண்முகவேல் அவர்களுக்கும் உதவிய ஏ.வி.மணிகண்டன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். இந்நூலை ஒவ்வொருநாளும் பிழைதிருத்தி உதவிய ஸ்ரீனிவாசன் சுதா தம்பதியினருக்கும். இணையதளத்தை நடத்தும் ராமச்சந்திர ஷர்மாவுக்கும் நன்றி.
நூலின் பிரதியைச் செம்மையாக்க உதவிய ஹரன் பிரசன்னாவிற்கும் கிழக்குபதிப்பகத்திற்கும் நன்றி.
இந்நூலை இருபதாண்டுகளுக்கும் மேலாக என் நலம்நாடும் மூத்த நண்பராகவும் வழிகாட்டியாகவும் திகழும் அ.முத்துலிங்கம் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
ஜெயமோகன்

1000 pages, Hardcover

First published October 20, 2014

9 people are currently reading
105 people want to read

About the author

Jeyamohan

210 books845 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
81 (81%)
4 stars
17 (17%)
3 stars
2 (2%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Swami Nathan.
99 reviews2 followers
April 15, 2022
சிலபேர் நம் அறிவுக்கு எழுதுவார்கள். சிலர் நம் கற்பனைக்கும், உள்உவகைக்கும் எழுதுவார்கள். ஆனால், இவர் எழுதுவது நம் ஆத்மாவிற்கு.
பொறாமையின் தீப்பொறி விழும் இடத்தில் ஆரம்பித்து அது வாரணாவத்தை உண்டு பசியாறுவது இந்த பகுதியில். இனிமேல் வான்நோக்கி துருவனை பார்க்காமல் இருக்க முடியுமா? பாரதம் இரு ஆண்களின் உறவை பற்றி பல்வேறு பாடங்கள் எடுப்பதுண்டு. தந்தை தனயனாக திருதிராஷ்ட்ரன் துரியோதனன், மாமன் மருமானாக சகுனி துரியோதனன், நட்பார்ந்த ஆசானாக கிருஷ்ணன் அர்ஜுனன்… இன்னும் பல. அதில் மிக முக்கியமானது துருபதன் துரோணர் சார்ந்த பகுதிகள். இங்கு மாயக்கண்ணாடி மூலம் அதை நமக்கு ஜெமோ காட்டுவது வர்ணஜாலம். அப்பப்பஆஅ. அதுவும் துருபதனும் துர்வாசரும் பேசும் பகுதிகள் இன்னொரு கீதை.
அப்பழுக்கில்லாதவர்கள் மேல் நம் மனம் கொள்ளும் வெறுப்பும் சினமும் நம் அகம் அறியமுடியா வினோதம். தருமனை வெறுக்காதவர்கள் யாருண்டு? துர்யோதனனையும் கர்ணணையும் காதலோ கருணாயோ கொண்டு காணாத கண்கள் எங்குண்டு? ஜெயமோ விதிவிலக்கா என்ன!!
பாரதம் பெண்களின் களம். அது சத்யவதியோ குந்தியோ திரௌபதியோ ஏன் சிகண்டியோ. மற்ற தோள்வலிமை பெற்ற அனைத்து பேதை ஆண்மகவுகளுகம் அவ்வளையணிந்த கைகளால் உருட்டப்படும் பகடைகளே
சகுனி, பாலை கடக்கும் போது நிகழும் நிகழ்வுகளால் நமக்கு உணர்த்தப்படுவது - நாம் அனைவரும் பகடைகளே!!! அது நல் ஊழோ தீ ஊழோ என்பதை அவனே அறிவான்
95 reviews6 followers
July 30, 2015
What a fabulous writing.I never read more than 20 pages per day.And I enjoy them.
30 reviews1 follower
July 4, 2020
If bahubali given you some goosebump moments this book will give you 100s of that moments. A must read. Draupathi and Krishnan are the highlights.
Profile Image for Anitha Ponraj.
277 reviews44 followers
December 25, 2024


புத்தகம்: வெண்முரசு -பிரயாகை
ஆசிரியர்: ஜெயமோகன்
வாசித்தது : venmurasu.in
அச்சு புத்தக பக்கங்கள்: 1181

நீலத்தின் தேக்கநிலைக்குப் பின் பிரயாகை அணையற்ற பிரவாகமாக கரைபுரண்டு பாய்ந்தோடிவிட்டது.

பிரயாகை எனும் சமஸ்கிருத மொழி சொல்லிற்கு ஆறுகள் ஒன்று கூடும் இடம் எனப்பொருளாகும். பல கதைக்களங்கள் ஒன்று கூடும் இடம் இந்த புத்தகம் எனவே பெயரும் பொருந்திப் போகிறது.

புத்தகம் துருவனின் கதையில் தொடங்குகிறது.

துருவனுக்கும் மகாபாரதத்துக்கும் என்ன சம்பந்தம் என்று முதல் பக்கத்தில் நமக்கு தோன்றும் கேள்விக்கு, கிட்டத்தட்ட எல்லா காலகட்டத்திலும் வரும் எல்லா கதாப்பாத்திரங்களையும் பல சூழல்களில் துருவனை நோக்கி நிலைக்கச் செய்திருக்கிறார் ஆசிரியர்.

புத்தகம் வாசித்த யாருக்கும் இனி வடதிசையை பார்க்கும் போது துருவனை நினையாமல் இருக்க முடியாது.

துரோணரிடம் குருகுலக் கல்வி கற்று முடிக்கும் அஸ்தினபுரியின் இளையவர்கள் நாடு திரும்பும் முன் இறுதி தேர்வை சந்திக்கிறார்கள்.

அதில் துரோணரின் பகையை தீர்ந்து, துருபதனின் பகையின் மொத்த உருவமாக திரௌபதி வளர்கிறாள். பாரதவர்ஷத்தின் சக்கரவர்த்தினாயாக !

பாரதப் போரின் விதை இந்தப் பகையே.

மறுபுறம் பாரதப் போரின் மற்றுமொரு விதை பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் அரியணைச் சண்டையாக உருவெடுக்கிறது.

லீலைகள் செய்யும் கிருஷ்ணன் அரசியல் மதிசூழும் அரசனாக தலைகாட்டிச் செல்கிறான். ஆனால் அனைவரின் நினைவுகளிலும் தலைதூக்கி நிற்கிறான்.

மாதுலராக அஸ்தினபுரி நீங்கும் சகுனி கணிகரோடு சூழ்ச்சியின் முழு உருவமாக தந்திரங்கள் நிறைந்த நரியாக திரும்பி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக பாண்டவர்கள் கானக வாழ்க்கை எய்க நேருகிறது. அங்கு பீமன் இடும்பியை மணந்து கடோத்கஜன் பிறக்கிறான்.

மீண்டும் நாடு திரும்பும் வாய்ப்பு அவர்களுக்கு திரௌபதியின் சுயம்வரம் மூலமாக கிடைக்கிறது.

ஐவரை மணக்கும் பாஞ்சாலியின் கதையில், நாம் கேட்டறிந்தது போல் அவளை சூழ்நிலைக் கைதியாக காட்டாமல் சொந்த விருப்பமாக காட்டியிருப்பது சிறப்பு. சக்கரவர்த்தினியல்லவா !

அதைவிட பெருஞ்சிறப்பு நன்கு தெரிந்த கதையை இத்தனை ஆர்வமாக வாசிக்க வைத்தது தான்.

அடுத்த பாகத்தில் இன்னும் என்னென்ன வார்த்தை ஜாலங்கள் ஆசான் நிகழ்த்தியிருக்கிறார் என்று வாசிக்கும் ஆர்வத்துடன் பிரயாகை இனிதே நிறைவடைகிறது, வெண் முகில் நகரத்தில் நுழைய மனம் காத்திருக்கிறது.
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.