செறிவு மிகுந்த இலக்கணக் கூறுகளை இனிமையும் எளிமையும் ததும்ப எடுத்துரைக்கும் தொகை நூல் இது. ஒவ்வொரு சொல்லுக்கும் அடியில் எத்தகைய ஆணிவேர்த் தன்மை உள்ளது என்பதை இந்நூல் விளக்குகின்றது.தற்காலத் தமிழ்நடையில் காணப்படுகின்ற எண்ணற்ற பிழைகளைக் களையும் வழிகளைக் கற்றுக் கொடுக்கிறது. நம் மொழியின் உண்மையான அழகையும் நுட்பத்தையும் யாவர்க்கும் புரிகின்ற வகையில் எடுத்தியம்புகிற வகையில் இந்நூல் தொகுப்பு உள்ளது