தஸ்தாவெய்ஸ்கியின் நாவல்களில் வரும் முக்கிய கதாபாத்திரம் ஏதோ ஒரு வகையில் தஸ்தாவெய்ஸ்கியும் கூட.கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் இவான் விஞ்ஞானத்தையும் தத்துவத்தையும் மிகவும் விரும்பி வாசித்து அது முன்வைத்த அனைத்து கோட்பாடுகளின் அடிப்படையில் கடவுளின் இருப்பு குறித்தும் மனித வாழ்வின் அபத்தம் குறித்தும் சிந்தித்து இறுதியில் எந்தவித பற்றும் அற்ற ஒரு தளத்தை அடைகிறான்.தஸ்தாவெய்ஸ்கி விஞ்ஞானத்தையும் தத்துவத்தையும் ஆழ கற்றவர்.அதன் மூலமாக கடவுள் இல்லையென்றால் இந்த உலகில் எல்லாமே சாத்தியமே என்ற உண்மையை அடைந்தவர்.அதுதான் இவான்.குற்றமும் தண்டனையும் நாவலில் அதுவே ரஸ்கோல்நிகோவ் கதாபாத்திரம்.ஆனால் அவர் வாழ்வின் பெரும்பகுதி பைபிளையும் தொடரந்து வாசித்தவர்.இவான் கதாபாத்திரத்திற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் பாதிரியார் ஜோசிமாவின் இளமைப்பருவத்தை பற்றி எழுதியிருப்பார்.அவரின் லட்சிய வடிவமும் நம்பிக்கையும் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் அல்யோஷாதான்.அந்த வடிவமே அவரின் இஷ்டலோகம்.அந்த வடிவம் மிக சிறப்பாக பேதை(தி இடியட்) நாவலில் மிஸ்கின் கதாபாத்திரத்தில் வெளிப்பட்டிருக்கும்.1863முதல் 1871வரை பல காலம் தஸ்தாவெய்ஸ்கி சூதாடியாக இருந்திருக்கிறார்.மேலும் 1846ஆம் ஆண்டு Poor Folk என்ற அவர் எழுதிய முதல் குறுநாவல் வெளிவந்தது.அது அவருக்கு மிகுந்த புகழை அளித்தது.அந்த யதார்த்தவாத வடிவமும் அதன் உள்ளடக்கமாக இருந்த மனிதாபிமானமும் முக்கியமாக பாராட்டப்பட்டன.ஆனால் அடுத்த இரண்டே மாதங்களில் அவர் இரட்டை (The Double) என்ற குறுநாவலை வெளியிட்டார்.அந்த நாவலின் வடிவம் மிகவும் விமர்சிக்கப்பட்டது.அவர் மேலும் தனிமைப்படுத்தப்பட்டார்.ஏதோ ஒரு வகையில் அடுத்தடுத்த நிகழ்ந்த சம்பவங்கள் மூலமாக அவர் 1849ஆம் ஆண்டு சிறை சென்றார்.அவர் தனிமைப்படுத்தப்பட்டதும் சிறை சென்றதற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.அவர் விரும்பியிருந்தால் தொடரந்து யதார்த்தவாத வடிவத்திலான மனிதமாபிமான நாவல்களையே எழுதியிருக்கலாம்.ஆனால் அப்படி இல்லாமல் அவர் வேறு ஒரு வடிவத்தை தேர்ந்ததற்கு முக்கிய காரணம் ஒரு படைப்பாளிக்கே இருக்கும் அதீத விருப்பமும் உந்துதலும் தான்.அவர் இரட்டை நாவல் பற்றி சொல்கையில் அதன் வடிவத்தை தான் கண்டடைந்ததை பற்றி மிகுந்த பரவசம் கொள்கிறார்.அந்த வடிவம்தான் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இவானும் இவானின் வடிவத்திலிருக்கும் சாத்தானுடன் பேசும் வடிவமாக வளர்ந்தது.அத்தகைய எழுத்தை வெளியிடாமல் இருப்பதற்கான எந்த கட்டுப்பாடும் ஒரு நேர்மையான படைப்பாளிக்கு இருக்காது.எழுத்து அளிக்கும் அதீத மகிழ்ச்சியே அவனை தொடர்ந்து எழுத வைக்கிறது.அந்த அதீத விருப்பத்தின் இன்னொரு வடிவமே தஸ்தாவெய்ஸ்கி மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சுற்றுப்பயணம் செய்த ஆண்டுகளில் சூதாடியாக இருந்ததற்குமான காரணங்கள்.அந்த தஸ்தாவெய்ஸ்கியின் வடிவமே கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் திமித்ரி.அதே கதாபாத்திரத்தின் இன்னொரு வடிவேம பேதை நாவலில் வரும் ரோகோஸின்.அதே அதீத விருப்பத்தால் துரத்தப்படும் வடிவத்திலான வேறொரு கதாபாத்திரமே சூதாடி நாவலில் வரும் அலெக்ஸி.
அலெக்ஸி இருபத்தியைந்து வயதான பட்டதாரி இளைஞன்.ஒரு ஜெனரலின் வீட்டில் அவருடைய பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் வேலையில் இருப்பவன்.ஜெர்மனியில் ரெளலட்டன்பர்க் என்ற புனைவு நகருக்கு அவன் வருவதிலிருந்து கதை ஆரம்பமாகிறது.நகரின் பெயரில் இருப்பது போல அது ரெளலட்(Roulette) என்ற சூதாட்ட விளையாட்டு இரவு பன்னிரெண்டு மணிவரை நடக்கும் நகரம்.அலெக்ஸி சுமாராக எழுதக்கூடியவன்.அவன் தன நினைவிலிருந்து எழுதியது போலத்தான் நாவல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.அவன் பொலினா என்ற பெண்னை விரும்புகிறான்.ஜெனரல் பொலினாவின் மாற்றாந்தந்தை.ஆனால் மேலே குறிப்பிட்டது போல தஸ்தாயெவ்ஸ்கியின் மற்ற நாவல்களின் பெண் கதாபாத்திரங்களுக்கும் பொலினாவுக்கும் தொடர்ச்சி உண்டு.கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் கத்ரீனாவை போல புண்படுத்தப்பட்டவளின் கர்வத்தை கொண்டவள் பொலினா.இயல்பில் நண்மையின் இயல்பு கொண்டவளாக இருந்தாலும் வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால் சிலர்முன் அவள் தன் கர்வத்தை இழந்து நிற்க வேண்டியிருக்கிறது.அது அவளை ஆழமாக புண்படுத்துகிறது.வேறு ஒரு வகையில் அந்த புண்படுத்தப்பட்ட கர்வம் சிலரிடம் குரூரமாக வெளிப்படுகிறது.அப்படி அவள் தன் கர்வத்தை சற்று குரூரத்தண்மையுடன் அலெக்ஸியிடம் வெளிப்படுத்துகிறாள்.அவளுக்கு அவன் மீது அன்பு இருக்கிறது.ஆனால் அது வெளிப்படும்போது எப்போதும் கர்வத்தின் நிறப்பரிகையால் சிதறிவிடுகிறது.ஒரு சமயத்தில் பொலினாவிற்கு ஐம்பதாயிரம் பிரஞ்சு பணம் தேவைப்படும் போது முதல்முறையாக ரெளலட்டன்பர்க் நகரில் அலெக்ஸி தனக்காக சூதாடுகிறான்.அவன் மிக அதிக அளவில் வெற்றி பெறுகிறான்.சூதாட்டத்தின் மீதான அதீத விருப்பமும் மயக்கமும் அவனை முதல்முறையாக பற்றிக்கொள்கிறது.அவன் சூதாடி ஆகிறான்.அவன் வெற்றி பெற்ற பணத்தை பொலினாவிடம் அளிக்கும் போது அதை அவள் தன் கர்வத்தின் காரணமாக நிராகரிக்கிறாள்.அவன் சம்பாதித்த பணம் பாரீஸ் பயணத்தில் முழுவதும் செலவாகிவிடுகிறது.அடுத்த எட்டு மாதங்களில் கையில் காசு இல்லாமல் ஹோம்பர்க் என்ற நகரில் தங்கியிருந்து அவ்வப்போது கிடைக்கும் கொஞ்சம் காசை வைத்து சூதாடுகிறான்.தான் ஒரு முறை கண்ட அந்த கடவுளின் கை மறுபடியும் அதே சூதாட்ட காய்களை தான் விரும்பும் வகையில் சூழற்றும் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறான்.நிறைய ஆண்டுகள் சூதாடியபடியிருந்த தஸ்தாவெய்ஸ்கி ஒரு நாள் தன்னை பீடித்துள்ள இந்த எண்ணம் தன்னைவிட்டு விலக வேண்டும் என்று தேவாலயத்தை நோக்கி ஓடுகிறார்.தேவாலயத்திற்கு பதிலாக ஒரு யூத வழிப்பாட்டுத்தலத்தின் முன் மண்டியிட்டு பிராத்திக்கிறார்.பின்னர் அந்த சம்பவத்தை அவர் குறிப்பிடும் போது தன் மீது குளிர்ந்த நீர் ஊற்றப்பட்டது போல இருந்தது என்று சொல்கிறார்.ஆம், அதன் பின் அவர் தன் வாழ்நாளில் சூதாடவில்லை.சூதாட்டமும் வேறு எந்த அதீத விருப்பமும் உந்துதலும் அதற்கான தர்க்கத்தை நம் மனதில் ஏற்படுத்திவிடுகிறது.அந்த மனநிலையில் வேறு எந்த தர்க்கமும் அதீத விருப்பத்தால் உந்தப்படும் தர்...
Works, such as the novels Crime and Punishment (1866), The Idiot (1869), and The Brothers Karamazov (1880), of Russian writer Feodor Mikhailovich Dostoyevsky or Dostoevski combine religious mysticism with profound psychological insight.
Fyodor Mikhailovich Dostoevsky composed short stories, essays, and journals. His literature explores humans in the troubled political, social, and spiritual atmospheres of 19th-century and engages with a variety of philosophies and themes. People most acclaimed his Demons(1872) .
Many literary critics rate him among the greatest authors of world literature and consider multiple books written by him to be highly influential masterpieces. They consider his Notes from Underground of the first existentialist literature. He is also well regarded as a philosopher and theologian.
1866 தஸ்தாயேவ்ஸ்கி எழுதிய நாவல் "சூதாடி". நாவலின் பெயரை கேட்டவுடன் சூதாட்டத்தை பற்றிய புத்தகம் என்று நினைத்தேன். ஆனால் இது அதற்கும் மேல். 256 பக்கம் கொண்ட நாவலை நேயர் விருப்பம் வெளியீடு 99 ரூபாய்க்கு 2024 இல் வெளியிட்டது. மொழிபெயர்ப்பாளர் ரா.கிருஷ்ணய்யா.
இந்நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்ளவே மிகவும் கடினமாக இருந்தது. எந்தப் பெயரும் பரிட்சயம் இல்லாத பெயர்கள். எனவே சில தடுமாற்றங்கள் தடுக்க முடியாதவையாக அமைந்தது.
முதல் சில பக்கங்களுக்கு கதை எனக்கு வேறு ஒரு கண்ணோட்டத்தை கொடுத்தது. சூதாடி என்பவன் பணம் வைத்து விளையாடுபவன் மட்டுமல்ல. தன் வாழ்க்கையை பணயம் வைத்து விளையாடுபவர்களும் சூதாடிகளே என்று தோன்றியது. ஆனால் நாம் சூதாடிகள் என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. எப்பொழுது அதிர்ஷ்டம் அடிக்கும், எப்பொழுது ஜெயித்து பணத்தை எல்லாம் இலக்க நேரிடும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஒரு சூதாடி கடைசி முடியும் தன் அதிர்ஷ்டத்தை பரிசோதித்து பார்ப்பான். அப்படி செய்பவனையே அனைவரும் சூதாடி என்று கூறுவர். அதேபோல் வாழ்வில் எவ்வளவு கஷ்டம் நேர்ந்தாலும் தனது முயற்சியும் உழைப்பும் என்றேனும் ஒரு நாள் வாழ்க்கையை சரியாகிவிடும் என்று இலக்கை நோக்கி ஓடுகிறோம். ஆனால் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இருந்தபோதிலும் இலக்கை அடைந்தால் அத்துடன் நிறுத்திக் கொள்ளும் பழக்கம் இல்லாததால் வாழ்க்கையையும் சூதாட்டத்தையும் இணைத்தே பார்க்கிறேன்.
இக்கதை படித்த சூதாட்டங்கள் மேல் உள்ள அபிமானமே மாறிப் போகின்றது. வெறும் காசுக்காக விளையாடும் விளையாட்டு என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இது வெறும் காசுக்காக விளையாடும் விளையாட்டு இல்லை.
கதையை பொருத்தவரை பாட்டியே என் விருப்பத்திற்குறிய கதாபாத்திரம். வாழ்க்கையில் எந்த நேரத்தில் நாம் சூதாட்டத்தை விட்டு விலக வேண்டும். அப்படி விலகா விட்டால் என்ன நடக்கும் என்று இரு வேறு கதாபாத்திரங்களைப் (அலெக்சை இவான் விட்ச் மற்றும் பாட்டி) பிரித்து புரியும் படியாக கூறி இருக்கிறார்.
மது, மாது, சூது இவற்றில் சூதைப்பற்றி மிக விரிவான குறு நாவல். நிறைய விளையாட்டு பற்றிய கலைச்சொற்கள் அந்நியமாக இருந்தாலும் வெறும் சூது விளையாட்டு என்ற விதத்தில் என்ற விதத்தில் வாசகன் கதையில் ஒன்றமுடிகிறது.
வெறும் ஊழ் மட்டும் இருக்கையில் மனிதனின் குண நலன்களில் அது ஏற்படுத்தும் தாக்கம் என்பது சாதாரணமானது இல்லை என்பது இந்த நாவலின் அடி நாதம்போல் இருக்கிறது. ஒரு மதிப்புமிக்க ஆசிரியர், ஒரு மதிப்பு மிக்க வயது முதிர்ந்த சீமாட்டி எப்படி மாறுகிறார்கள் என்பதை மிக அழகாக எழுதி இருக்கிறார். கடைசியில் வெறும் நிராசை மட்டும் கொள்ளும் ஒரு மனிதனாக இவை வெளிதள்ளுகின்றன போலும் இந்த அனைத்துமே இப்படிதான் தள்ளும்போல....
ஆசிரியர் : பியோடோர் தஸ்தியோவ்ஸ்க்கி நாவல் 250 பக்கங்கள் ருசிய இலக்கியம் வளரி பதிப்பகம்
ருஷ்ய இலக்கியத்தை எனக்கு அறிமுக படுத்தியமைக்கு எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்னன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை கூறிவிட்டு இந்த நாவல் விமர்சனத்திற்குள் செல்கிறேன் . ஒரு கதை ஒரு வாசகனுக்கு ஏன் இப்படி ஒரு ஈர்ப்பை தருகிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால் , ஒரு வாசகன் அவன் வாழ்ந்த , அல்லது வாழ விரும்புகிற ஒரு வாழ்வை எங்கோ கதைகளில் ஒரு கதாபாத்திரம் வாழ்ந்து வருவதை நினைத்து அது தான் தான் என்று உருவகித்துக்கொள்கிறான் . இதனை முறைப்படி செய்யும் கதைகளே காலம் கடந்து நிற்கும் . அப்படி ஒரு கதையே இந்த சூதாடி நாவல் . அதனால் தான் இந்த நாவல் 19 நூற்றாண்டு தொடங்கி இன்று 21 ஆம் நூற்றாண்டு வரை வாசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது .இந்த வித்தையில் பியோடோர் தஸ்தியோவ்ஸ்க்கி வித்தகர் . அவரை போல் மனித மனதையும் அதன் ஆழத்தையும் புரிந்த ஒரு எழுத்தாளரை காண்பது அரிது .தன் எழுத்துக்களில் ஒரு சிறு இடத்தில்கூட சமநிலையையும் . நியாயத்தையும் ,நீதியையும் , உண்மையையும் ,யதார்த்தத்தையும் அவர் மீறியதே இல்லை . ஏனெனில் நிஜ வாழ்க்கையிலும் அவர் அப்படியே . அவர் கதையில் வரும் பெரும்பான்மையான கதை மாந்தர்கள் அவர் நிஜ வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களே. சொல்லப்போனால் பல கதாபாத்திரங்கள் அவரையே பல இடங்களில் பிரதிபலிக்கும் .
ரஷ்யா ஜெனரல் ஒருவர் தன் குடும்பத்துடனும் , காதலியுடனும் , நண்பர்களுடனும் சேர்ந்து தொழில் ரீதியாக ஜெர்மனியில் வசித்து வருகிறார் . இவர்களுடன் ஒரு ஆசிரியனாக இருப்பவன் தான் கதையின் நாயகன் இவானோவிச் . இவருடைய நாட்குறிப்பு தான் இந்த நாவல் . அதனால் பல இடங்களில் பாத்திரங்களுக்கு பதில் அவர்களுடைய விழிகளும் , மனங்களும் மட்டுமே பேசிக்கொள்ளும் . ஜெனெரலுக்கு தன் அயல் நாடு நண்பர் தி கிரியை இடம் ஒரு பெரும் தொகை கடன்பட்டுள்ளார் ,அதனை ஈடுகட்ட ரஷ்யாவில் உள்ள தன் பூர்விக சொத்து தேவைப்படுகிறது .ஆனால் ,அது இவர் கையில் கிடைக்க படுக்கையில் இருக்கும் தன் அன்னை இறக்க வேண்டும் . அந்த இரங்கல் செய்திக்காக , கடிதத்தகிற்காக இங்கு இவர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர் . இதற்கிடையில் இவானோவிச் ஜெனெரலின் தங்கையை மிக ஆழமாக காதலிக்கிறான் . அவளுக்காக தன் உயிரையும் மாய்த்துக்கொள்ள துடிக்கிறான் . இந்நிலையில் ஒரு நாள் அந்த உடல்நலம் குன்றிய பாட்டி ஜெர்மனி வந்து இறங்குகிறாள் இவர்கள் இருப்பிடம் நோக்கி .அதைவிட பேரதிர்ச்சி ,தன் சொத்தில் இருந்தது ஒரு ரூபாயை கூட தன் மகனுக்கு கொடுக்க போவதில்லை என்று கூறுகிறாள் .இந்நிலையில் இவானோவிச் மட்டுமே அந்த பாட்டியிடம் நெருங்கி பழகுகிறான் . அந்த பாட்டியோ அந்த ஊரில் இருக்கும் சூதாட்ட விடுதிக்கு சென்று தான் கொண்டு வந்த அணைத்து செல்வத்தையும் விடாது சூதாடி அழித்துவிட்டு , மேலும் தன் நில பத்திரங்களையும் அடமானம் வைத்து சூதாடி தோற்றுவிடுகிறாள் .இவை அனைத்தும் இவானோவிச் கண்முன்னே நடந்து முடிகிறது .சூதாட்டதில் இவானோவிச்க்கு அனுபவம் இருந்தும் அவன் சொல்லியும் அவள் கேட்கவில்லை . இறுதியில் அவள் ருசியா திரும்பிச்சென்றுவிடுகிறாள் . இந்நிலையில் தன் காதலி பணத்திற்கு ஆசைப்பட்டு தன்னை விட்டு அந்த வெளிநாட்டவருடன் சென்று விடுவாளோ என்று ஐயப்பட்டு இவானோவிச் சூதாட்டத்தில் இறங்குகிறான் . ஒரு பைத்தியக்காரன் போல் சூதாடுகிறான் , இறுதியில் ஒரு பெரும் பணம் எடுத்துக்கொண்டு தன் காதலியிடம் செல்கிறான் ,ஆனால் ,அவளோ இப்படி பணம், சூது என்று மனம் தவறிப்போன இவனொவிச்சிடம் உண்மையான காதல் இருக்காது என்ற��� கூறி விலகிச்செல்கிறாள் . இறுதியில் இவானோவிச் என்ன ஆனான் ? பணம் அவனை என்ன செய்தது ? இந்த உலகம் அவனுக்கு என்ன செய்தது ? என்பதே முடிவு .
சூதாடி - இந்த தலைப்பே நமக்கு இந்த நாவல் யாரை பற்றியது என்ற ஒரு கதையை நாம் வாசிக்கும் முன்னே நமக்கு சொல்லாமல் சொல்லி விடுகிறது .ஆம் , இந்த கதையின் நாயகனான இவானோவிச் ஒரு சூதாடி தான் ,ஆனால் இக்கதை அவனை பற்றியது மட்டுமல்ல .ருஷ்ய மக்களை பிரதானமாக கொண்ட கதையாக இது இருந்தாலும் இக்கதை நிகழும் நிலம் என்னவோ ஜெர்மனியில் .இக்கதையில் ருஷ்ய நாட்டவர் மட்டுமல்லாமல் பிரான்ஸ்,இத்தாலி ,பிரிட்டிஷ் ,போன்ற பல நாட்டவர்கள் கதை நெடுக பயணிக்கின்றனர் தங்களுக்கே உரித்தான குணாதிசயங்களோடு .இதுவே இக்கதையின் பெரும் பலம் . வேறு நாட்டில் வேறு வேறு நாட்டவர் ஒன்றாக தொழில் ரீதியாக வசித்து வந்தாலும் ,அவர்களுடைய நடவடிக்கைகள் தங்கள் நாட்டின் போக்கிற்கு ஏற்ப பல இடங்களில் எட்டிப்பார்க்கின்றன .இதனை மிக அழுத்தமாகவும் , ஆழமாகவும் தன் கதையில் பதிவு செய்திருக்கிறார் தஸ்தியோவ்ஸ்க்கி.