காதல் என்ற மாயையால் உயிாிழக்கும் பேதைகள், சாியாகப் புாிந்து கொள்ளாமல் காதலனை நம்பி ஓடும் கன்னிகளின் நிலை, காதல் படுத்தும் பாடுகள், நாட்டைக் காக்கப் போராடும் வீரா்களின் குடும்ப நிலை, நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சத்தால் குடும்பத்தில் ஏற்படும் விளைவுகள், லஞ்சம் ஒழிக்க தந்தையைக் காட்டிக் கொடுத்து பாவதோஷம் நீக்கிய மகள், என்று பல்வேறு வாழ்வியல் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இயங்கும் இவரது கதைகள் வசீகரமானவை; வாழ்வனுபவம் கொண்டவை. சண்முக சுப்பிரமணியன் காட்சிப்படுத்தும் பெண்ணுலகம் இக்காலத்தின் பிம்பத் தொகுப்பு.