நாயகன் : ஆதித்யா தேவராஜ் ராஜ் இன்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தின் முடி சூடா மன்னன். யாருக்கும் அடங்காதவன், தான் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் போக கூடியவன்.
நாயகி : நிலா ஆதித்யா வீட்டில் வேலை செய்பவளின் பேத்தி. அடக்கமும் அமைதியும் ஒருங்கே பெற்றவள். தேவராஜின் அதிகார நிழலில் தினம் தனம் அல்லாடி தவிப்பவள்.
அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான போர்க்களத்தில், ஆதி எப்படித் தன்னவளைக் கரம்பிடிக்கிறான், எப்படி அவளுடன் எல்லாத் தடைகளையும் தாண்டி சந்தோஷமாக வாழ்கிறான் என்பதே இந்த "நெஞ்சமெல்லாம் நேசமாகும்" கதையின் கருவாகும்.