Srinivasa Iyer Ramaswamy called as Cho Ramaswamy (Tamil: சோ ராமசுவாமி) is a comedian, editor, political satirist, playwright and lawyer in Tamil Nadu. He is the founder and editor of the Tamil magazine, Thuglak. His popularity in the Tamil Nadu literary circles is mainly due to his impartial assessment of political issues, and the audacity with which he publishes his viewpoints.
"இந்த கதாசிரியனுக்குக் கற்பனை வளம் குறைவு", என்ற பாணியில் ஆரம்பிக்கிறார் சோ. எம்.ஜி.ஆர், KK நகருக்கு "கோமாளி கூத்தன்" என்று விரிவாக்கம் இடுவது, அதனையொட்டி சைதாப்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை ககருணாநிதி பாதயாத்திரை மேர்கொள்ளப்போவது என்று ஒருவரையொருவர மட்டந்தட்டுவதையும், அவ்விருவரையும் கிள்ளுக்கீரையாக பார்க்கும் இந்திரா காந்தி என்று ஆரம்பித்து; முரசொலி, துக்ளக், குங்குமம், ஆனந்த விகடன் என்று எதையும் விட்டுவைக்காமல் 400 பக்கங்களிலும் நையாண்டி நிறைந்திருக்கிறது. "அன்பு உடன்பிறப்புகளே.." என்ற கலைஞர் தமிழும், "சத்த நாழி பொறுங்கோ.." என்ற ஐயர் தமிழும், "பேமானி.. ஊட்ல சொல்டாந்தியா.." என்ற சென்னை செந்தமிழும் குறைவின்றி நிறைந்து வழிகின்றது. இதற்கு நடுவில் ஒளிந்திருக்கும் கதையில் அவ்வப்போது வந்து போகிறார் கந்தசாமியும் ரகுநாத ஐயரும்.
முழு நீள நகைச்சுவை நூல். பேருந்தில் இதைப் படித்து விட்டு நான் விழுந்து விழுந்து சிரித்ததால், எல்லோரும் என்னையே பார்க்கும்படி ஆயிற்று. சோ தன் அரசியல் ஈடுபாடுகளை நிறுத்தி விட்டு, நகைச்சுவை உரையாடல் எழுதுபவராகத் தொடர்ந்திருந்தால், கிரேசி மோகன் போல நமக்கு இன்னும் நிறைய நல்ல படங்களைத் தந்திருக்கலாம்.
செயலலிதா பற்றி ஒரு வரி கூட வரவில்லை. மற்றைய அரசியல் தலைவர்கள் அனைவரும் வந்திருக்கின்றனர். தமிழ்நாட்டு அரசியலில் ஆர்வம் இருப்பவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
சோவின் ட்ரேட்மார்க் நையாண்டி . நல்லா சிரிக்கலாம் . கடைசி 100 பக்கம் கொஞ்சம் தொய்வு.....நிகழ்கால வாழும் அரசியல் பிரபலங்கள் மற்றும் தன்னையும் பாத்திரமாக்கி கேலி செய்வது புதிது ...