நாவல் என்றால் என்ன? கதை, சிறுகதை, நெடுங்கதை, நாவல் - இவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம்? தமிழில் எழுதப்பட்ட ‘நாவல்கள்’ என்று சொல்லப்படுபவை உண்மையிலேயே நாவல்கள்தானா? இதுபோன்ற கேள்விகளை எழுப்பும் ஜெயமோகன் அந்தக் கேள்விகளுக்கு, தெளிவான, தருக்கபூர்வமான பதில்களை நிறுவுகிறார்.இந்நூல் ஜெயமோகன் எழுதிய முதல் திறனாய்வு நூல். வெளியான காலத்தில் பல சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கினாலும், சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு நூலாகவே இருந்துள்ளது.ஒரு தேர்ந்த வாசகனது ரசனையை மேம்படுத்துவதில் இந்த நூல் வெற்றி அடைகிறது என்றே சொல்ல வேண்டும்.
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
பள்ளிக்காலங்களில் பாடநூலில் ஏதேனும் ஒரு கோட்பாடு விளங்கவில்லையென்றால் அடுத்தடுத்த கோட்பாடுகள் குழம்பிவிடும். மனப்பாடம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளிவிடும். வெகுநாட்கள் கழித்து இப்புத்தகத்தை வாசிக்கும்போது பள்ளி மாணவனாக உணர்ந்தேன்.
பல வாக்கியங்களை, பத்திகளை அடிக்கோடிட்டு பயின்றேன். சில கோட்பாட்டம்சங்கள் இன்னும் முழுமையாக விளங்கவில்லை. தேர்ந்த மூத்த வாசகர்களின் நட்பு கிடைப்பின் கேட்டு விளங்கிக்கொள்ள வேண்டும்.
இந்நூலிலிருந்து கற்றுக்கொண்ட கோட்பாடுகள்:
நாவல் என்பது வாழ்வின் முழுமையைச் சித்தரிக்க வேண்டிய ஒரு இலக்கிய வடிவம். வாழ்வின் முழுமையென்றால் என்ன? வாசிப்பவனுக்கு ஒரு முழுவாழ்க்கையை வாழ்ந்த அனுபவத்தை கொடுப்பதை அப்படி கூறுகிறார் என நம்புகிறேன்.
நமக்கு வாழ்க்கையில் நடக்கும் ஒரு அனுபவத்தை மட்டும் குறிப்பால் உணர்த்தி கலையாக்குவது சிறுகதை, கவிதையின் இலக்கணம். மொத்த வாழ்க்கையையும் தொகுத்து கலையாக்குவது நாவலின் இலக்கணம்.
வாசகர் குறிக்கீடு: ஒரு இலக்கிய படைப்பில் சில மெளனங்கள் இருக்கும். அதனை வாசகன் தன் கற்பனையால் நிரப்ப வேண்டும். கவிதையின் மெளனங்கள் சொற்களின் இடைவேளையில் உள்ளது. சிறுகதையின் மெளனம் அதன் முடிவில் (ட்விஸ்டில்) உள்ளது. அங்கிருந்து இன்னொரு கதை தொடங்கும் பிரஞ்கை உள்ளது.
நாவலில் மெளனம் இடைவேளிகளாக இருக்கும். அதனை வாசகன் நிரப்பும்போது பிரம்மாண்ட வாழ்க்கைச் சித்திரம் கிடைக்கும்.
ஒரு நாவல் எங்கும் தொடங்காது, எங்கும் முடியாது. அதனால், காலப்பிரஞையை உடைத்துவிடும். எக்காலத்திலும் அதன் தரிசங்களை வாசகன் பொருத்திப்பார்த்துக்கொள்ள முடியும். வரலாறு, தொன்மங்களின் மூலம் நாவல்கள் காலத்தை உடைக்கின்றன.
கதை : தனக்கு நடந்த அனுபவத்தை பிரக்ஞையின் மூலம் தொகுத்துக்கொடுப்பது. சிறுகதை : ஒரு கதை அதன் முடிவில் திருப்பத்தை கொண்டிருப்பது. புனைவுத்தருக்கம் : Plot : ஒவ்வொரு கதையும் இரண்டு இழைகளைக்கொண்டிருக்கும். அவ்விரண்டு இழைகளின் முரண்களும் உறவுகளுமே புனைவுத்தருக்கம். நீள்கதை : ஒரு மையத்தை நோக்கி எழுதப்படும் கதை, அம்மையத்தை அடைந்தபின் அடுத்த மையத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும்.
தத்துவ நெறிகளை தருக்கத்தால் தொகுத்து காவியங்கள் நமக்களித்தன. ஒரு பண்பாட்டின் ஒட்டுமொத்த விழுமியங்களையும் ஒரு காவியம் கொண்டிருந்தால், அது மகாகாவியமாகிறது. கம்பராமாயணம் ஒரு மகாகாவியம். தமிழ் இனம் அழிந்துவிட்டால், அவ்வொரு நூலினைக்கொண்டு மீண்டும் தமிழ் பண்பாட்டை புத்தியிருக்க வைத்துவிடலாம்!
தத்துவ நெறிகள் ஒரு பண்பாட்டின் ஒழுங்கிற்கும் செயல்பாட்டிற்கும் அவசியம்.
19ம் நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்பு நாவல் எனும் கலை. அதுவரை காவியங்கள் பாடிய நெறிகளை விவாதத்திற்கு உட்படுத்துவதே நாவலின் வேலை. காவியங்களின் நேரெதிர் நாவல்கள். ஒரு மையத்தரிசனத்தை அளிக்காமல் ஒரு தரிசனத்தை எடுத்துக்கொண்டு வரலாற்றின்முன் நிறுத்தி பல்வேறு கோணங்களின் அதை பரிசீலிக்கிறது. வாசகனிடம் அதன் முடிவை விடுகிறது.
ருஷ்ய நாவல்களே இதன் இலக்கணத்தை கட்டமைத்த முன்னோடிகள். இந்நாவல்களை வாசிக்கும்போது சலிப்படைய காரணம், அவை ஒருமைக்கொண்டிருக்காது. இடைவேளிகளுடன் இருக்கும். அதை வாசகன் நிரப்ப வேண்டும்.
உணர்ச்சிக்கதைகள் : நாவல்களை காவியங்களின் ‘எதிர்பிம்பம்’ என்றால் உணர்ச்சிக்கதைகளை அதன் ‘நிழல்’ எனலாம். Fake Epic.
காவியங்களின் விழுமியங்களை உணர்ச்சிப்பொங்க மீண்டும் கொடுப்பதே இதன் வேலை. பொன்னியின் செல்வன், மாபிடிக், கேம் ஆஃப் த்ரோன்ஸ். சினிமா திரைக்கதைகளுக்கு ஏற்ற வடிவம் இதுவே.
குறுநாவல்கள் : சிறுகதைகளைப் போல ஒருமைக்கொண்டிருக்காது. சில இடைவேளிகள் இருக்கும். ஆனால், காலத்தை உடைத்து விழுமியங்களை வரலாறின் முன்நிறுத்தி பார்க்காது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அடைந்துவிட்டிருக்கும். தன் தரிசனத்தை முக்காலத்திற்கும் அளிக்காமல், குறிப்பிட்ட கதையுலகத்திற்க்கும் மாந்தர்களுக்கும் மட்டும் ஏதுவாக அமைத்துவிடும். உதா: அம்மா வந்தாள்
ஒவ்வொரு இலக்கிய வடிவத்திலிருந்தும் என்ன எதிர்ப்பார்க்கலாம்? அதன் அழகியல் கோட்பாடுகளை தெரிந்துக்கொள்ள மிகப்பயன் உள்ளதாக இருக்கிறது இப்புத்தகம்.
நாவல் மற்றும் கதைவழியில் தோன்றும் எழுத்து ரீதியான அத்தனை வடிவங்களுக்கான ஒரு அறிமுகமாக இந்நூல் திகழ்கிறது. சிறுகதை எது? நீள்கதை எது? குறுநாவல் எது? நாவல் எது? என்று வாசகன் அறிந்துகொள்ள வேண்டும் என்ற முனைப்பில் முன்னேறுகிறது, சில உதாரணங்களுடன். இந்நூல் எழுத்தாளர் சொற்றமைப்புகள் சில இடங்களில் - ஆரம்பக்கட்ட வாசகனாக எனக்கு - குழப்பத்தை அளிக்கிறது. சரியாகக் கூற வேண்டுமென்றால் சிரமத்தை அளிக்கிறது. மற்றபடி அனைவரும் ஒருமுறை படித்தாக வேண்டிய நூல்தான் இந்த 'நாவல் கோட்பாடு'
An interesting book delineating what is a novel? - Why the author says that in Tamil there is no book that can be said to be a novel. He gave examples of some books and explained why they can not be called novels.