Complete works of Swami Vivekananda: A Set of 11 Volumes in Tamil.
எழுந்திரு! விழித்திரு! என்பது சுவாமி விவேகானந்தர் தெரிவித்த கருத்துகள் சேர்க்கப்பட்டு தொகுப்பாக தமிழில் வெளியான நூல்கள். இத்தொகுப்பு முதலில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டான 1963 இல் 'ஞானதீபம்' என்ற பெயரில் பத்து சுடர்களாக (பகுதிகளாக) வெளிவந்தது. 25 வருடங்களுக்குப் பின்னர் அதே தொகுப்பு பதினாறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 1987 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
பின்னர் 1997 இல், சுவாமி விவேகானந்தரைப் பற்றி இந்தியாவிலும் அமெரிக்காவிலும் நடைபெற்ற ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கடிதங்கள், சொற்பொழிவுகள், பத்திரிக்கைக் குறிப்புகள் சேர்க்கப்பட்டு, ஞானதீபத்தின் புதிய பதிப்பு பதினோரு சுடர்களாக வெளிவந்தது. 'ஞானதீபம்' என்ற தலைப்பு 'எழுந்திரு! விழித்திரு!' என்று மாற்றப்பட்டு 2006 ஆம் ஆண்டு புதிய பதிப்பாக வெளிவந்தது.