B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
வாசித்தது:venmurasu.in அச்சு புத்தக பக்கங்கள்: 1066
வெண்முகில் நகரம் என்பது முகில்கலால் சூழப்பட்ட இந்திரபிரஸ்தம். அது எப்படி உருவாகப் போகிறது என்பதன் ஒவ்வொரு படிநிலை தான் இந்த புத்தகம்.
திரௌபதி சுயம்வரத்தில் முடியும் முந்தைய பாகம், பாண்டவர்கள் ஐவருடன் அவள் எப்படி தன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளப் போகிறாள் என்பதில் தொடங்குகிறது.
கதைக்குள் கதைகள் நிறைந்த வெண்முரசின் இந்த பகுதியிலும் வழக்கம் போல கதைகளுக்கு பஞ்சம் இல்லை.
ஐவருக்குமான கோட்பாடுகள் விளக்கப்படுகிறது, கதைகளாக. பின் ஒவ்வோருவருக்கும் தனித்தனியாக வேறு கதைகள் வேறு சொல்லப்படுகிறது,சூட்சமமாக அவர்கள் புரிந்து கொள்வதற்காக.
ஐவரின் குணநலன்களுக்கு ஏற்றவாறு பொருத்திப் போகிறாள். அவர்கள் பள்ளியறையில் எட்டிப் பார்க்காமல் கதைக்குள் போவோம்.
பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் தற்காலிகமாக காம்பில்யத்தில் வாழ்கிறார்கள். ஆனால் சக்ரவர்த்தினி அதில் அமைதி கொள்வாளா?
அடுத்து சில கதைமாந்தர்கள் அறிமுகம். மகாபாரதம் கதையில் நான் கேட்டறிந்திராத பூரிசிரவஸ், சாத்யகி.
கதையில் அவர்கள் பங்கு என்ன என்றே அதிகம் பேசப்படாதவர்களுக்கு முக்கிய கதாப்பாத்திரங்களின் அளவுக்கு பாத்திரப் படைப்பு செய்து, விரித்து எழுதி அசத்தியிருக்கிறார் ஆசான்.
பால்ஹிகக் கூட்டமைப்பை இணைக்க,குல மூத்தவரான பிதாமகர் பால்ஹிகரைக் கொண்டு பால்ஹிகக் குடிகளை ஒன்று திரட்டும் பொருட்டு பணிக்கப்படுகிறான் பூரிசிரவஸ்.
அதற்காக சிபி நாட்டுக்கு பயணப்படும் பூரிக்கு, பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் போல செல்லும் இடமெங்கும் பெண் விசிறிகள். வாசகிகளும் அதில் அடக்கம் !!!
மானாவாரியாக காதலில் விழுகிறான். மணந்து கொள்வதாக வாக்கும் அளிக்கிறான். காடு மலை என எல்லா இடத்துப் பெண்களுமே திரௌபதியையே அவனிடம் விசாரிக்கிறார்கள்.
இதற்கிடையில் முதலில் தொட்டில் போல கட்டி தூக்கிவரப்பட்ட பால்ஹிகர் சொந்த மண் மீண்ட முறுக்கில் பூரியையே மிஞ்கிறார்.
இளமை திரும்புதே என்று வேட்டையனாகி, இளம் பெண்ணை மணந்து அவளுக்கு குழந்தை கொடுக்கும் அளவுக்கு தெம்பாகிவிடுகிறார்.
அவரைத் தேடிப் போன இடத்தில் பூரியும் மலைமகள் ஒருத்தியை திருமணம் செய்து கொள்கிறான். மலைமகனாக இல்லாமல் தனக்கென்று அரசமைத்து கோட்டை கட்டி வாழும் கனவு காண்கிறான்.
பால்ஹிகரின் வருகையால் அவர்கள் எதிர்பார்தத்தது போல் ஒன்றிணைகிறது பால்ஹிக கூட்டமைப்பு. அவர்கள் சார்பில் பேச அஸ்தினபுரம் செல்கிறான்.
அங்கே துரியோதனனின் அன்பிற்கு பாத்திரமாகிறான். கௌரவர்களும் கர்ணனும் அவனை தங்களுள் ஒருவனான காணத் தொடங்குகிறார்கள். அவர்கள் சார்பில் தூது செல்கிறான். கௌரவர்கள் கதை அதன் பின்னர் பூரியின் பார்வையில் விரிகிறது.
அஸ்தினபுரியில் மீண்டும் ஒரு காதல், துச்சளையுடன்.
நான்கு பேர் நான்கு காதல் என்று பூரி ஒருபுறம் இருக்க, மறுபுறம் உயிரும் உடலும் கிருஷ்ணனுக்கே என்று சாத்யகி.
தங்கள் வருங்காலத்தை மேம்படுத்த துவாரகைக்கு பயணப்படும் பல யாதவ இளைஞர்கள் போல் கிருஷ்ணனுக்காக தன் உயிரையும் துறக்க சித்தமாகி அடிமைக் குறி பெற்று நகர் நுழைகிறான்.
துவாரகையின் பிரம்மாண்டத்தை கதை மாந்தர்களின் கண்ணோட்டத்தில் விவரிக்கும் பகுதி இது. கிருஷ்ணனின் மருகன் அடிமைக்கூட்டத்தில் நிற்பதைக் கண்டுகொண்ட அமைச்சன் அவனை அழைத்து சென்று இராஜ்யத்து பொறுப்புகளை அளிக்கிறான்.
கிருஷ்ணனுக்கு மிக அணுக்கமானவனாக மாறிவிடும் அவன் பார்வையில் பாண்டவர்கள் பக்கத்து கதை அதற்குப் பிறகு சொல்லப்படுகிறது.
வழக்கம் போல் எல்லா பெண்கள் மனதையும் கவர்ந்து கொள்கிறான் மாயக்கண்ணன். பீஷ்மர் நாடு திரும்ப வழிவகுக்கிறான். அவனின் சதுரங்கத்தில் அனைவரும் காய்கள் ஆகிறார்கள்.
தன் மைந்தர்கள் பாண்டவர்களுக்கு எதிராக அவர் அறியாமல் சதி செய்ததை எப்படியோ உய்த்துணர்ந்து, மதவேளமாக மாறும் திருதராஷ்ட்டிரர் துரியன், துச்சாதனனை பிளந்து கட்டுகிறார். இதில் இடையில் வந்த கர்ணனுக்கும் ரெண்டு இடி. சகுனிக்கும், கணிகருக்கும் ரெண்டு கிடைத்திருந்தால் வாசகர்கள் மகிழ்ந்திருப்பார்கள்.
அஸ்தினபுரத்திற்கு பாண்டவர்கள் சார்பாக தூதுவனாக கிருஷ்ணன் புறப்படுகிறான். குந்தியிடமிருந்தும்,திரௌபதியிடமிருந்து பாகப்பிரிவினைக்கான குறிப்புகளோடு செல்கிறான்.
துவாரகைக்கு நிகரான ஒரு நகரத்தை உருவாக்க விளையும் தன் கனவை கிருஷ்ணனிடம் சொல்லி அவனிடமே உதவியும் கேட்கிறாள் பாஞ்சாலி.
அவள் கனவு நகரம் தான் இந்திரபிரஸ்தம் !
இந்த பாகத்துக்கு வெண் முகில் நகரம் என்று பெயர் வைத்ததுக்கு பதிலாக கல்யாண மாலை என்று பெயர் வைத்திருக்கலாம்.
அத்தனை திருமணங்கள்!!!
பாண்டவர்கள் திருமணம் முடிந்தால் கௌரவர்கள் சும்மா இருப்பார்களா? போட்டி போட்டுக்கொண்டு நாடு முழுவதும் இருந்து மணமகள் வேட்டையாடுகிறார்கள்.
கௌரவர்கள் நூற்றுவர் பெயரையே முழுவதும் அறியாத நம்மை, அவர்கள் மனைவிமார்கள் பெயர் வரை மனப்பாடம் சொய்யாமல் ஆசான் விடுவதாக இல்லை.
ஆனால் அந்ந களேபாரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது நம்ம பூரிதான். அவன் நேசித்த இரு பெண்கள் பாண்டவர்கள் மனைவியாகிறார்கள். துரியோதனன் தங்கையை சூழ்நிலை காரணமாக அவன் மணக்க முடியாமல் போகிறது.
பானுமதி துரியனின் காதல் அழகு. ஒரு மாறுபட்ட துரியன் மனதுக்கு இனியவனாக தோன்றுகிறார்.
இராஜ மரியாதையுடன் அஸ்தினபுரிக்கு வரவேற்க்கப்படுகிறான் கிருஷ்ணன். ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று பாண்டவர்களும் கௌரவர்களும் கொஞ்சிக குலாவிக் கொள்ள, பாரதம் தெரியாதவர்கள் வாசித்தால் அப்படி ஒரு போர் வருமா என்று கேள்வி எழுப்ப வைக்கும் அளவுக்கு எழுதியுள்ளார்.
இந்த கதையை ஆசான் இன்னும் எப்படியெல்லாம் மாற்றப் போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இறுதியில் பாஞ்சாலியின் நகர் நுழைவு ஆரவாரமாக நிகழ்கிறது. பூரிசிரவஸும் சாத்யகியும் நதிக்கரையில் சந்தித்துக் கொள்வதோடு பாகம் முடிவு பெறுகிறது.
நட்பாக பிரியும் அவர்கள் போரில் எப்படி மீண்டும் சந்திப்பார்கள் என்று தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
மூன்று மாதங்கள் போனது தெரியாமல் போகிற அளவுக்கு இந்த பெரிய பாகம் விறுவிறுப்பாக சென்றது. இந்திரநீலத்துக்குள் நுழைய மணம் காத்துக் கொண்டிருக்கிறது.
Parallel tracks, a common thread that binds the whole story, taking us deep into the foundation of Dwaraka and Indraprastha......the mindset of the two people who dreamed about them - Draupadi and Krishna - two contrasting characters.....and two diametrical opposite characters in Satyagi and Purikravasu.....thrilling..
ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு நாவல்களின் ஒட்டுமொத்த சித்திரம் எவ்வகையிலும் எதனுடனும் நிகரற்றது. என்னால் இதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. இதை ஒரு மனிதன் எழுதினான் என்பதே காலத்தில் மிகப்பெரிய ஆச்சரியமாக நிச்சயம் நிலைகொள்ளும். எழுதிச் செல்லும் இறையின் கைகளே கருவியைத் தேர்ந்தெடுக்கின்றன என்று தத்துவத்தின் வழியே ஜெயமோகன் மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுவார்.
இதை எத்தனை பேர் உணர்ந்துகொண்டு படிக்கப் போகிறார்கள் என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும், அனைவரும் படிக்கவேண்டுமே என்ற ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்நாவலைப் படித்துமுடித்த இந்நேரத்தில் இந்நாவல் தந்த நிறைவும் ஆச்சரியமும் முக்கியமானதாகத் தோன்றுகிறது. உள்ளமெல்லாம் வெண்முகில் நகரத்தில் பாத்திரங்கள் நிறைத்திருக்கின்றன.
சாத்யகியும் பூர்சிவரஸ்ஸும் கொண்ட எழுச்சி மிக்க சித்திரம் நான் கொஞ்சம் எதிர்பார்க்காதது. அதுவும் இறுதியில் அவர்களை சந்திக்க வைத்ததெல்லாம் நான் கொஞ்சம் கூட யோசிக்காதது. களத்தில் இரண்டு பேரும் முட்டிக்கொண்டு சாத்யகியால் கொல்லப்படப்போகும் பூர்சிவரஸ், முன்னர் ஒருமுறை சாத்யகியைக் கட்டித் தழுவியிருக்கிறான் என்பதே, சந்தேகமே அன்றி அசையச்செய்யும் உருவாக்கமே. இவையேதான் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே மிக ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்றாலும், யாரென்றே தெரியாமல் போயிருக்கவேண்டிய இருவர் வரலாற்றின் சித்திரத்தில் இப்படி நிற்கும் காட்சி தரும் நிறைவை, ஒரு வகை அதிர்ச்சியை என்னால் சொல்ல முடியவில்லை.
திருதராஷ்டிரன் முன்னர் பாண்டவ கௌரவர்கள் கிருஷ்ணன் முன்னிலையில் சந்தித்துக் கொள்ளும் காட்சி, உணர்ச்சிமயத்தின் உச்சம்.
முதற்கனல் தொடங்கி மழைப்பாடல் பிரயாகை எனப் பல்வேறு நாவல்களில் வரும் காட்சிகள் இந்நாவலில் சிறிய நீட்சியென பேசப்படுவதும், அன்றைய நிகழ்வுகள் இன்றைய புராணமாக எப்படி மையத்தைத் தாண்டிய அல்லது மையத்தை முற்றிலுமே இழந்துவிட்ட காவியமாக நிலைபெறுகிறது என்றெல்லாம் தொடர்ச்சியாகப் பார்ப்பதும் மிகவும் அற்புதமாகவே இருக்கிறது. ஏதோ நாம் காலத்தில் மகாபாரதத்தில் வாழ்ந்துகொண்டிருப்பது போல.
என்னளவில் பிரயாகையில் கொஞ்சம் நலிந்திருந்த நகைச்சுவை சார்ந்த பகுதிகள் இந்நாவலில் – மிக்குறைந்த அளவே வந்தாலும் – மிகக் கச்சிதமாக உள்ளன. அதிலும் த்ரௌபதி ‘ஆறாவது இளவரசனைப் பார்க்கிறேன் எனக்குத்தான்’ என்று சொல்லும் இடத்தில் – ஜெயமோகன் எழுதுவது போல – வெடித்துச் சிரித்துவிட்டேன்.
கிருஷ்ணரும் பலராமரும் வருவதற்காக ஏற்பாடு செய்யும் நூற்றுவனின் அத்தியாயம் முழுக்க நல்ல நகைச்சுவை. இதுவும் ஒரு காவியத்தின் முக்கியமான சுவையே என்று ஜெயமோகன் முன்பிருந்தே சொல்லி வருவதை நினைத்துக்கொண்டேன்.
பல வகைகளில் அடுத்து வரப்போகும் களங்களுக்கான காட்சிகளை மிக ஆழமாகத் திறந்து வைத்திருக்கிறது வெண்முகில் நகரம். பால்ஹிக நாட்டையும், சிபி நாட்டையும் விவிரித்த விதமெல்லாம் அட்டகாசம். படைப்பூக்கத்தில் உச்சத்தில் இப்படி ஒருவரால் தொடர்ந்து நிற்கமுடியும் என்பதே அசரடிக்கிறது.
நீண்ட நாவல். சில வருட இடைவெளியில் படித்து முடித்தேன். பாண்டவர்கள் திரௌபதியை திருமணம் செய்வதில் தொடங்கி திரௌபதி அஸ்தினபுரம் நுழைவதுவரை நடக்கும் பல நிகழ்வுகளை இது சித்தரிக்கிறது. மலைநாடுகளின் அரசியல் நிகழ்வுகள் பூரிசிரவஸின் வாயிலாக அவன் காதல் அனுபவங்களூடாக விரிவாக சொல்லப்படுகிறது. துவாரகையின் எழுச்சி, கிருஷ்ணனின் மாண்புகள் சாத்யகியின் கண்கள் மூலமாக காட்சிப்படுத்தப்படுகிறது. பூரிசிரவசும்,சாத்யகியும் மிக நெருக்கமானவர்களாகிறார்கள். பாஞ்சாலப்போர் சித்திரம் மூலம் நாமடையும் விரைவு இனிவரும் பாரதப்போர் குறித்த எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரிக்கவே செய்கிறது. துரியோதனின் மென்மனமும், அவன் பானுமதியின்பால் கொள்ளும் ஆழ்ந்த காதலும் அதனால் அவன் பிற பெண்களை விரும்பவே இயலாதென்றும் கூறுவதும் என் மனதில் அவனை மிக உயர்ந்த இடத்தில் நிறுத்துகின்றன. சம்படை அன்னையின் மரணம் ஒரு புரியாத குறியீடாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாக வெண்முகில் நகரம் எனக்குரைப்பது இதுவே - “மகாபாரதம் என்பது வெறும் நல்லவருக்கும் தீயவருக்கும் இடையே நடந்த போரல்ல. இதில் நல்லவரென்றும் தீயவரென்றும் எவருமில்லை. இருபக்கமும் இருப்பது விழைவுகள் மட்டுமே”.