ஏற்காட்டில் 1985ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வரும் ஏற்காடு இளங்கோ அவர்கள் அறிவியல் புத்தகங்களை எழுதி வருகிறார். தமிழ் மொழியில் நல்ல அறிவியல் நூல்கள் இல்லாத குறையைக் களைவதில் ஏற்காடு இளங்கோ முக்கிய பங்காற்றுகிறார். 2000ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது முதல் நூல் அதிசய தாவரங்கள் அன்றிலிருந்து 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து பல நூல்களை எளிய தமிழில் எழுதி வருகிறார்.
• தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட உதவிச் செயலாளராக 12 ஆண்டுகளும், மாவட்டச் செயலாளராக 8 ஆண்டுகளும் பணிபுரிந்துள்ளார். • தற்போது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கிய காரணியாக உள்ளார். • இவருடைய பழங்கள் மற்றும் செவ்வாய் கிரகமும், செவ்வாய் தோஷமும் ஆகிய இரண்டு நூல்கள் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற அமைப்பின் சார்பாக 38000 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. • தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிடும் துளிர் அறிவியல் மாத இதழின் ஆசிரியர் குழுவில் முக்கியமானவர். • எழுத்துச்சிற்பி, அறிவியல் மாமணி, வல்லமைமிகு எழுத்தாளர், உழைப்பாளர் பதக்கம் ஆகிய விருதுகளால் கௌரவிக்கப்பட்டார். • தம் இறப்பிற்கு பிறகு தம் உடலை மருத்துவ ஆய்வுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று தம் விருப்ப ஆவணத்தில் பதிவு செய்துள்ளார். • 1992ஆம் ஆண்டு ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரியில் மண்டிக் கிடந்த ஆகாயத்தாமரைகளை மாணவர்கள், தொண்டு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக, நீக்கி ஏரியைத் துப்புரவு செய்தார். • பார்த்தீனியம் செடிகளை அப்புறப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். • தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் பொது இடங்களில் எச்சி துப்புதல் கூடாது என்பதற்கான விழிப்புணர்வை சேலம் மாவட்டத்தில் ஏற்படுத்தி வருகிறார். • ஏற்காடு மலையில் உள்ள தாவரங்களை வகைப்படுத்தி, பெயரிட்டு அதன் புகைப்படங்களை விக்கிமீடியாவின் பொதுவகத்தில் 650 தாவரங்களின்1500 படங்ககளுக்கு மேல் இணைத்துள்ளார். • சிறிய அளவிலும், பெரிய அளவிலும் 74 புத்தகங்கள் இதுவரை எழுதியுள்ளார். மேலும், தொடர்ந்து அறிவியல் நூல்களை எழுதி வருகிறார்
Short book. Although most of the information is familiar, its still a good refresher. This book is free to download on http://freetamilebooks.com website under creative commons license.