காந்தியின் மரணத்தையும், அதற்கான ஆயத்தங்களையும் , அவரைக் கொலை செய்த செய்யக் காத்திருந்த கூட்டத்தைப் பற்றியும், அவரது கொலைக்குப் பிந்தைய காலத்தையும் சிறிதளவேனும் அலசும் புத்தகம். சிறிய புத்தகமானாலும் பல கருத்துகள் ஆழமாக யோசிக்க வைக்கக் கூடியவை. பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். இந்த புத்தகத்தைப் படித்த பின் ஹே ராம் திரைப்படத்தைப் பார்த்தேன். புத்தகத்தில் உள்ள எல்லா தரப்புகளையும் படத்தில் கொண்டு கொஞ்சமேனும் புனைவு கதை மெருகேற்றிய சிறந்த படமாகத் தெரிந்தது.