ஜி. நாகராஜன் (G. Nagarajan) தமிழ் எழுத்தாளர். நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். பாலியல் தொழிலாளர்கள், குற்றவாளிகள் ஆகியோரின் அடித்தள உலகை சித்தரிப்பவை இவருடைய எழுத்துக்கள். மனிதாபிமானநோக்கோ விமர்சனப்பார்வையோ இல்லாமல் அங்கதப்பார்வையுடன் அவ்வுலகை உருவாக்கிக் காட்டுபவை. கட்டற்ற வாழ்க்கைமுறை கொண்டவர் என்பதனாலும் ஒரு தீவிரமான ஆளுமைப்பிம்பம் இவருக்கு உள்ளது.
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த நபர்
ஆசிரியர் - ஜி நாகராஜன் சிறுகதை தொகுப்பு காலச்சுவடு பதிப்பகம் 150 பக்கங்கள்
ஜி நாகராஜனை ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும் அவருடைய தனி உலகத்துக்குள் நாமும் பிரவேசித்து வெளி வருவது போன்ற ஒரு உணர்வே தோன்றுகிறது. அவரை தவிற அந்த ஒரு உலகத்தை தைரியமாக பேசுவதற்கும், தர்க்கிப்பதற்கும் வெகு சிலரே நம் இலக்கியத்தில் உள்ளனர். அதுவும் அவர் எழுதிய காலகட்டத்தில் இன்னும் கடினம். அவர் கதைகளின் வழியே எழுத்தின் வழியே ஒன்று மட்டும் நிச்சயமாக புரிந்து கொள்ள முடிகிறது, அவர் யாரையும், எதையும் நம்பியோ எதிர்பார்த்தோ தன் கதைகளை எழுதவில்லை. இந்த உலகிற்கு தான் கூற விரும்பிய தான் பார்த்த உண்மைகளை தன் கதைகளின் வழியே பதிவு செய்ய மட்டுமே நினைத்தார் என்பது தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. அந்த நிழல் உலகத்தில் ஒளி படராத தெருக்களிலும், வீடுகளிலும், உடலாலும் உள்ளத்தாலும் உருக்குலைந்த உன்னதமான பெண்கள் மீதும் தன் இலக்கியத்தின் வழியே ஒரு பெரும் ஒளி கீற்றை வாரி இறைத்து இந்த உலகின் முன்னால் " இதோ பாருங்கள் உங்கள் நவ நாகரீக உலகின் உத்தமர்களின் லட்சணம் " என்று பெரும் கேள்விக்குறியை வீசியெரிகிறார் ஜி நாகராஜன்.
ஒரு சிறுகதை தொகுப்பில் எத்தனை கதைகள் இருந்தாலும், எத்தனை பக்கங்கள் அவை கணத்தாலும், அந்த கதைகளுள் எங்கோ மூலையில் பதுங்கியிருக்கும் ஒரு கதையோ, கதை மாந்தரோ, வரியோ, சொல்லோ நம் மீது ஒரு மௌனமான போரை நிகழ்த்தி நம்மை சரித்துவிடும். அப்படி ஒரு இடத்தை நோக்கிய தேடல் என்னை இந்த புத்தகத்திலும் இரண்டு கதைகளிடம் கூட்டி சென்றது. " போலியும் அசலும் " " துக்க விசாரணை " இவை இரண்டு கதைகளே. இந்த தொகுப்பில் மிக சிறிய கதைகளாக இவை இரண்டும் இருந்தாலும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் என்பது வெகு ஆழமானது. இப்படி ஒரு கேடு கேட்ட ஒரு ஆண் பிறவியாக நாம் பிறந்து விட்டு எத்தனை இடங்களில் நான் ஒரு ஆண் என்ற கர்வத்துடன் என் தலையும் தோளும் உயர்ந்த தருணங்கள் இன்று என்னை தலை குனிய வைக்கின்றன.
ஒரு பெண்ணின் மனதை ஒரு பெண் தான் புரிந்துகொள்ள முடியும் என்ற வாக்கியத்தை சொல்லி சொல்லி இந்த சமூகம் பெண்ணை புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டது. அப்படி இந்த சமூகம் கைவிட்ட ஒரு பெண் தான் "கல்லுப் பாட்டி" யாக வரும் கல்யாணி. கல்யாணியின் உணர்வுகள் எப்படி எனக்கு புரிந்தது? கடைசி வரிகளில் அவள் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்க்கையில் அந்த அறையில் என்னால் எப்படி நுழைய முடிந்தது? அவள் இழந்து தவித்த அவளுடைய அந்த இளமை காலங்கள் என் நினைவுகளில் எப்படி நிரப்பியது? அந்த கண்ணாடி முன் சேதமடைந்த ஒரு இந்திய சிற்ப கலை மாதிரி நின்ற கல்யாணியின் உச்ச நிலையை குலைத்த அந்த நெய்க்காரியின் வருகை எதார்த்தத்தின் உச்சம். என்ன செய்வது? எல்லா சந்தோஷமான பூரிப்பான தருணங்களும் எங்கோ ஒரு நொடியில் முடியத்தானே போகிறது.
துக்க விசாரணை - துக்கம் பகிரப்படும் நேரம் சுமை குறையும் என்பார்கள், ஆனால் ஏனோ இந்த ஒரு துக்க விசாரணை நம் மனதில் பாரத்தை சற்று கூட்டி விடுகிறது. இந்த கதையில் எனக்கு ரோகிணி யை தவிற வேறு யாருமே கண்ணில் பட வில்லை. கதை முடிந்த பிறகும் ரோகிணி ரோகினி என்று எனக்குள் ஒரு குரல் கூவிக்கொண்டே இருந்தது. ரோகிணி ஒரு வேசியாக இருந்தாலும், தவறு வேசியாக ஆக்கப்பட்டிருந்தாலும் என்னை பொறுத்தவரை அவள் ஒரு பெண் தேவதை. எல்லா தேவதைகளும் வானில் இருந்து மட்டுமே வருவதில்லை, இப்படி குறுக்கு சந்தில், மூலை வீட்டில், மங்கிய வெளிச்சத்திலும் இருப்பார்கள். எல்லா தேவதைகளுக்கும் வெண்ணிற இறக்கைகள் இருப்பதில்லை, இதோ இந்த ரோகிணி போல ஒரு சாதாரண வேசியாக கூட ஒரு தேவதை இருக்க முடியும். தேவதைகள் கூட வேசியாக தான் பிழைக்க வேண்டிய ஒரு கட்டாயம் உள்ள ஒரு சமூகம் தான் நம்முடையது. நம்மால் என்ன செய்ய முடியும்? ரோகிணி போன்ற தேவதை மேல் செருப்பை எடுத்து வீசதான் தெரியும். " தற்கொலையில் அர்த்தமில்லை " என்றவுடன் " வேறு எதில்? " என்று கேட்டுவிட்டு கேட்டவரின் கன்னத்தில் முத்தமிடும் ரோகிணியை நான் இத்தனை முறை தேவதை என்று அழைத்ததில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறேன். அவள் உடல் நோயினாலோ, ரயில் ஏறியோ இறந்திருக்கலாம், ஆனால் அந்த தேவதையின் உள்ளத்தை ஒவ்வொரு நாளும் ஈவு இறக்குமின்றி இந்த சமூகம் காவு வாங்கியதை நினைக்கையில், அவள் நிச்சயமாக ஒரு தேவதை தான்.
Subject : G. Nagarajan has written 35 short stories and 2 novel. This book has selective short stories from 35. This book has 17/35 stories.
Maximum stories speaking about 1950’s sex workers.
Worth to read, some impressive dialogue from the stories,
அவர்கள் எல்லாம் சிகரெட்டு, பீடி, சாராயம் குடிக்கக் கூடாது என்ற கட்சியைச் சேர்ந்தவர்கள்.பொதுவாக எதையுமே குடிப்பதை எதிர்ப்பவர்களை எனக்குப் பிடிக்காது. குடிப்பதைக் குடிக்கத்தான் முடியும். அதை வைத்துக்கொண்டு வேறென்ன செய்யமுடியும் என்பது என் வாதம்.
- நான் புரிந்த நற்செயல்கள்
இந்த மானம் பாத்த பூமிலே, மானங் கெட்டு பூமியெச் சொரண்டிட்டிருக்கிற எவனுக்கும் எம் மவளெத் தரமாட்டேங்கறான் பொண்ணு வூட்டுகாரன்.
- யாரோ முட்டாள் சொன்ன கதை
அவங் கைலெ நாலுகாசு இருக்கு. அவன் ‘டே’னா ‘என்னாங்க’ங்க நாலு ஆளு இருக்கு.
- யாரோ முட்டாள் சொன்ன கதை
“பீடி, சிகரெட் ஒடம்பெக் கெடுக்குதே?”
“போடா பைத்தியக்காரா. இன்னைக்கு கெடுதிம்பான், நாளெக்கு நல்லதும்பான் இந்த டாக்டர் பசங்க.
“ இந்த குடிப் பளக்கத்தெ நிறுத்திரு. எல்லாம் சரியாயிடும்.”
“ போடா கபோதிப் பயலே”
- யாரோ முட்டாள் சொன்ன கதை
“அடி சக்கை, மாப்ளே சிஞ்ஜர் குடிப்பானா?”
“டவுன்காரராச்சே! பட்டைக்கு எங்கே போவாரு?”
-பூவும் சந்தனமும்
எங்கள் ஊருக்கு நீங்கள் வரவேண்டும் கடற்கரைப்பக்கம் சென்று குச்சிக்காலுடன் நெடிது வளர்ந்து,பழுப்பும் பச்சையுமாய்விட்ட தங்களது கைகளைக் காற்றுப் போனபடி அலைக்கும் அந்ததென்னை மரங்களையும்முடிவிலாது விரிந்து கிடக்கும் கடலையும் பார்த்துவிட்டால் எங்கள் ஊரைவிட்டுப் போக உங்களுக்கு மனமேவராது.
முற்றிலும் வேறு கண்களில் மனிதர்களைப் பார்க்க வைக்கும்படியான புத்தகம். குடிகாரர்களும் பாலியல் தொழிலாளர்களும் திருடர்களுமே பெரும்பாலும் கதைமாந்தர்களாய் இருக்கிறார்கள். அவர்களின் மூலம் நாம் பார்த்திடாத ஒரு புது உலகமே நம் கண்முன் விரிகிறது. இவையாவும் உலகத்தரம் வாய்ந்த கதைகள் என்றே சொல்ல வேண்டும்.
Nice short stories - very different from main stream tamil short stories - but all the stories depict the hard part of under privileged people in the society.