ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது. உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றதனை குறைந்தபட்ச வரலாற்று அறிதல் கொண்ட எவரும் உணர முடியும். அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா.
ஐபி எனப்படும் உளவு அமைப்பு ஆங்கிலேயர் காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்தது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. 1962 ல் சீனா மற்றும் 1965 ல் பாகிஸ்தானுடனாக போர்களின் போது சரியான உளவுத்தகவல்களை ஐபியால் திரட்ட முடியாததால் அப்போர்களில் சில பின்னடைவுகள் ஏற்பட்டது.
அதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவு செயல்பாடுகளை பிரித்து தனி அமைப்பினை உருவாக்குவது என்று 1968 ஆம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திரா காந்தி தலைமையிலான அரசால் முடிவு செய்யப்பட்டு ரா உதயமானது. அந்த ராவின் செயல்பாடுகள் முற்றிலும் ரகசியமானவை என்றாலும், அவற்றைப் பற்றிய கடந்த 47 ஆண்டுகால செய்திகளின் அடிப்படையில் ராவின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் போன்றவற்றை இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார் குகன். இந்திய உளவு அமைப்பு மற்ற நாடுகளின் எந்தெந்த நடவடிக்கைகளைக் கவனிக்கிறது, அதற்கான உளவு ஆட்களை எவ்வாறு தேர்வு செய்கிறது, மற்ற நாடுகளின் உளவு நிறுவனங்களோடு எப்படிப்பட்ட உறவைப் பேணுகிறது எனப் பல விவரங்கள் இப்புத்தகத்தில் உள்ளன.
ஆழமான தகவல்கள் இல்லையென்றாலும் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள், வெளிநாட்டு உறவு, வெளிநாட்டு கொள்கைகள், எல்லைப் பாதுகாப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ராவின் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ள ஓர் ஆரம்பப்புள்ளியாக இப்புத்தகத்தை வாசிக்கலாம்.
The book gives an insight on how it all started. It gives a brief overview about the organisation, its achievements and so forth. It’s a good casual read for the people who want to know about the events that led to the creation of the org. Expecting more in-depth detail from a currently active espionage organization is not a good idea.
ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது. உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றதனை குறைந்தபட்ச வரலாற்று அறிதல் கொண்ட எவரும் உணர முடியும். அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா.
ஐபி எனப்படும் உளவு அமைப்பு ஆங்கிலேயர் காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்தது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. 1962 ல் சீனா மற்றும் 1965 ல் பாகிஸ்தானுடனாக போர்களின் போது சரியான உளவுத்தகவல்களை ஐபியால் திரட்ட முடியாததால் அப்போர்களில் சில பின்னடைவுகள் ஏற்பட்டது.
அதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவு செயல்பாடுகளை பிரித்து தனி அமைப்பினை உருவாக்குவது என்று 1968 ஆம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திரா காந்தி தலைமையிலான அரசால் முடிவு செய்யப்பட்டு ரா உதயமானது. அந்த ராவின் செயல்பாடுகள் முற்றிலும் ரகசியமானவை என்றாலும், அவற்றைப் பற்றிய கடந்த 47 ஆண்டுகால செய்திகளின் அடிப்படையில் ராவின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் போன்றவற்றை இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார் குகன். இந்திய உளவு அமைப்பு மற்ற நாடுகளின் எந்தெந்த நடவடிக்கைகளைக் கவனிக்கிறது, அதற்கான உளவு ஆட்களை எவ்வாறு தேர்வு செய்கிறது, மற்ற நாடுகளின் உளவு நிறுவனங்களோடு எப்படிப்பட்ட உறவைப் பேணுகிறது எனப் பல விவரங்கள் இப்புத்தகத்தில் உள்ளன.
ஆழமான தகவல்கள் இல்லையென்றாலும் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள், வெளிநாட்டு உறவு, வெளிநாட்டு கொள்கைகள், எல்லைப் பாதுகாப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ராவின் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ள ஓர் ஆரம்பப்புள்ளியாக இப்புத்தகத்தை வாசிக்கலாம்.
Just a collection of already known and existing information about RAW. Not even any specific victory stories of RAW in detail, like in POHRAN nuclear test RAW played a major role. The details of how they managed to maintain the secret from the world powers is a famous story and even those details werent given. Just collection of the operations which they handled and general overview of RAW.