நம் பயன்பாட்டிற்குப் பிறகு ஞெகிழிப் பொருட்கள் என்னவாகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் வீட்டிலிருந்து (அ) தெருவிலிருந்து குப்பைகளை அகற்றும்போது பார்த்திருக்கிறீர்களா? பொதுவாக அவற்றைப்பற்றி நாம் சிந்திப்பதே இல்லை, இன்னும் சொல்லப்போனால் கழிவுப்பொருட்கள் குறித்து நாம் போதிய கவனம் செலுத்துவதில்லை என்பதுதான் இனறைய நிலை, நம் வீட்டைவிட்டு குப்பைகள் அகன்றால் போதும் என்ற மனநிலை இருப்பதால்தான் நாம் தூக்கி எறியும் பொருட்களில் ஞெகிழிப்பொருட்கள் எவ்வுளவு அதனால் நமக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து நாம் கவலைப்படுவதில்லை.