எழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். "பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி? பரம(ன்) இரகசியம் நாவல், அறிவார்ந்த ஆன்மிகம் அமானுஷ்யன் நாவல் மற்றும் இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி நாவல் ஆகியவை அச்சு நூல்களாக வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். அதை தினத்தந்தி நூலாக 2016ல் வெளியிட்டுள்ளது.