சென்னை நகரம் நானூறு ஆண்டு வரலாறு கொண்டது. ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் சென்னையில் நடந்த மாற்றங்கள் மகத்தானவை. நகரத்தின் முகம் நாகரிகமாக மாறியதும் இந்த பொன் விழா காலங்களில்தான். சாலைகளின் நடுவே பாலங்கள் உருவாகின, மின்சார ரயில்கள் நகரத்தை வளர்த்தன, டி.வி வந்தது, செல்போன் வந்தது....சினிமாவில் நல்ல தமிழ் வந்தது எல்லாம் நிகழ்ந்தன. சாமானியர்களும் கல்லூரி படிப்பை எட்டினர். ஆட்சி மாற்றம் ஒரு சமூக மாற்றமாகவும் இருந்தது. மூர்மார்க்கெட், அதனருகே இருந்த மிருகக் காட்சிசாலை எல்லாம் கண்முன்னாலே காணாமல் போயின. ப்ராம் வண்டி நிலையம் பெரியார் திடலாகவும் தினத்தந்தி அலுவலகமாகவும் மாறியது. இந்த மாற்றங்களினூடாக சென்னையின் பல்வேறு முகங்களை இந்த நூல் பேசுகிறது.
தமிழ்மகன் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இயற்பெயர் வெங்கடேசன். வளவன், தேனீ ஆகியவை பிற புனைப் பெயர்கள். இதுவரை ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார். திரைப்படம் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார். இவர் எழுதிய மானுடப் பண்ணை எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1994 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டிலும் “எட்டாயிரம் தலைமுறை” எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.
A little gem which takes us on a time machine to Madras of a different era when bus rates were counted in Paise and atleast one Jallikattu happened in Chennai. The author is highly inspired from Sujatha's style of writing.
அருமையான பதிவு பல தெரியாத தகவல்கள் பதிவு செய்ய பட்டதற்கு மிக்க நன்றி.பொக்கிஷம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகம் புத்தக பிரியர்களுக்கு அறிவு பசி உள்ள புத்தகம்