Jump to ratings and reviews
Rate this book

அழிவற்றது [Azhivatradu]

Rate this book
ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் கதைகளும் அயோவாவைக் களமாகக் கொண்ட ஒரு கதையும் இதில் இடம்பெற்றுள்ளன. ஒருவித விலகலுடன் வாழ்க்கையைப் பார்க்கும் அசோகமித்திரன். துல்லியமும் தீவிரமும் குன்றாமல் வாழ்வைப் பதிவுசெய்கிறார். இதுவரை எந்தத் தொகுப்பிலும் இடம்பெறாத இந்த கதைகள் அசோகமித்திரன் கதையுலகின் பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றன.

117 pages, Paperback

Published April 1, 2005

3 people are currently reading
25 people want to read

About the author

Ashokamitthiran

83 books225 followers
1931ம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். தமது இருபத்தொன்றாவது வயதில் (தந்தையின் மறைவுக்குப் பின்) குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறி, ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அகில இந்திய வானொலி நடத்திய ஒரு நாடகப் போட்டிக்காக "அன்பின் பரிசு" என்னும் நாடகத்தை எழுதினார். அதுவே அசோகமித்திரனின் முதல் படைப்பு. 1954ம் ஆண்டு வானொலியில் அந்நாடகம் ஒலிபரப்பானது.

அசோகமித்திரனின் முதல் சிறுகதை "நாடகத்தின் முடிவு". 1957ம் ஆண்டு கலைமகளில் இது பிரசுரமானது. கலைமகளில் அவரது இரண்டாவது சிறுகதை "விபத்து" பிரசுரமானதையடுத்து, மணிக்கொடி கி.ரா. மூலம் ந. பிச்சமூர்த்தியின் அறிமுகமும், அவர் மூலம் "எழுத்து" பத்திரிகைத் தொடர்பும் கிடைத்தது.

சுமார் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழின் மிக முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படும் அசோகமித்திரன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளின் பேரில் இலக்கியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது பல படைப்புகள், பல இந்திய அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அப்பாவின் சிநேகிதர்' என்கிற சிறுகதைத் தொகுப்புக்காக, அசோகமித்திரனுக்கு 1996ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (47%)
4 stars
6 (35%)
3 stars
3 (17%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for இரா  ஏழுமலை .
139 reviews8 followers
March 12, 2025
அசோகமித்திரன் தமிழில் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக எல்லோராலும் அடையாளப்படுத்தப்படுபவர்.அசோகமித்திரன் கதைகள் மிக எளிமையான அன்றாடத்தின் நிகழ்வுகளையும் சாதாரண மனிதர்களின் வாழ்வின் பாடுகளையும் பேசக்கூடிய கதைகள். சென்னையின் அடித்தட்டு மக்களின் வாழ்வை மிக அதிகமாக பதிவு செய்தவர். இவரது கதைகள் உணர்ச்சி கொந்தளிப்பு இல்லாமல் வாழ்வை ஒருவித உலகம் தன்மையோடு கதையாக்குகிறார். இவருடைய கதை என் கருப்பொருள் மிக மிக சிறிய அன்றாட செயல்பாடு ஒன்றாக இருக்கிறது. உதாரணமாக மின்சார துண்டிப்பு தண்ணீர் பிரச்சனை போன்றவை. சென்னையின் தண்ணீர் பிரச்சனையை தண்ணீர் என்ற நாவலாகவே அசோகமித்ரன் எழுதி இருக்கிறார் இதில் ஒரு சிறுகதை இருக்கிறது.(முழு நாள் வேலை) மொத்த வாழ்க்கையையும் நிலை உடைய செய்யும் சம்பவங்கள் உடைய சில கதைகளும் இதில் இருக்கிறது. ( புது மண வாழ்க்கை) எளிமையை இவரின் கதையில் முக்கிய அம்சமாக இருந்தாலும் மிக தீவிரமான கதைகள் எழுதி இருக்கிறார். புது மண வாழ்க்கை என்ற சிறுகதையில் ஒரு ராணுவ வீரன் தன் குழந்தையை ஒரே அடியில் அடித்து கொன்று விடுகிறான் ஆனால் அது குறித்து அவருக்கு எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லை அதேபோல அவன் மனைவிக்கும் அதுகுறித்து எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லை இந்த குழந்தை போனால் என்ன அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற மனநிலையில் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம் சற்று அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு ஈவு இரக்கமற்ற மனிதர்களும் இருப்பார்களா ?
Profile Image for Krishna.
60 reviews9 followers
September 15, 2016
அழிவற்றது கதைகள் உண்மையிலேயே அழிவற்றவை எனவே எண்ணுகிறேன். காரணம், ஒவ்வொரு கதையும் ஒரு வரலாற்றையோ அல்லது நமக்கு நன்கு அறிமுகமான ஆனால்
நாம் கவனம் செலுத்தாத ஏதோ ஒன்றையோ பேசுகின்றன.
கோவிலின் இருண்ட கருவறையில் இருக்கும் இறைவனின் சிலையை மனதார உணர முடிந்தாலும் கண்ணார கண்டு பரவசமடைய காட்டப்படும் தீபம் போன்றதாகவே இக்கதைகளை உணர்கிறேன். இன்றைய Facebook,blog பதிவுகளைப் போன்றதொரு எளிமையான எழுத்து நடை மூலம் கதை சொல்லி தன் கதைகளுக்கான பாதையை வழுவாக கட்டமைத்து நம்மை சிரமமின்றி பயணிக்கச் செய்கிறார்.
Profile Image for Mo.
78 reviews6 followers
February 27, 2021
பக்கங்கள்: 120

எளிய மத்தியதர வர்க்க மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் கையாலாகாத நிலையை, பரிதவிப்பை வெகு இயல்பாக சொல்லிச் செல்வதில் அசோகமித்திரனுக்கு நிகர் யாருமில்லை. இச்சிறுகதைத் தொகுப்பிலும் அத்தகைய கதைகள் உண்டு. கூடுதலாக புராண / மாய எதார்த்த கதைகளையும் முயன்று பார்த்திருக்கிறார். அவரது பதின்கால செகந்தராபாத் அனுபவம், சென்னை தண்ணீர் திண்டாட்டம், இலக்கிய கூட்டத்திற்கு அமெரிக்கா சென்ற அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு முறையே 18ஆம் அட்சக்கோடு, தண்ணீர், ஒற்றன் ஆகிய சிறந்த நாவல்களை படைத்திருக்கிறார். அதன் பாதிப்பில் உருவான சிறுகதைப் பிரதிகளையும் இத்தொகுப்பில் காண முடிகிறது. படிக்கலாம்.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.