ஏறத்தாழ நூறு வருட இடைவெளியில் வாழ்ந்த, நாடு,மொழி மற்றும் கலாச்சார ரீதியில் வேறுபட்ட இரு கவிஞர்களின் கவிதைகளில் ஒற்றுமையை காண்பது இலகுவான விடயமல்ல.எனினும் இந் நூலாசிரியர் இரு கவிஞர்களினதும் கணிசமான அளவு கவிதைகளை ஆய்ந்து குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளை எடுத்துக்காட்டியிருக்கின்றார்.ஆனால் மீண்டும் மீண்டும் உதாரணமாய் காட்டப்படும் சில வரிகள்,மீண்டும் மீண்டும் இடம்பெறும் நீண்ட புகழுரைகள் சலிப்பூட்டுகின்றன.அத்துடன் கவிதை வரிகளின் இலக்கியச் சிறப்புகளை ஆராயாது, பல்வேறு இடங்களில் அவ் வரிகள் மூலம் இவ்விரு கவிஞர்களையும் மகாத்மாக்கள் ரேஞ்சில் சித்தரிப்பது தேவையற்ற விடயமாகவே எனக்குத் தோன்றுகிறது.