Jump to ratings and reviews
Rate this book

கண்ணீரைப் பின் தொடர்தல்

Rate this book
கண்ணீரைப் பின் தொடர்தல்

சென்ற அரைநூற்றாண்டாகத் தமிழில் இந்திய இலக்கியங்கள் தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு அவற்றுக்கு மதிப்புரைகள் கூட வருவதில்லை. இந்நூலில் ஜெயமோகன் அவரது மனம் கவர்ந்த இருபத்திரண்டு நாவல்களை நுட்பமாகவும் விரிவாகவும் ஆராய்கிறார். வங்க நாவல்களான ஆரோக்கிய நிகேதனம் (தாராசங்கர் பானர்ஜி), பதேர்பாஞ்சாலி (விபூதிபூஷண் பந்த்யோபாத்யாயா), நீலகண்ட பறவையைத்தேடி (அதீன் பந்த்யோபாத்யாய), கன்னட நாவல்களான மண்ணும் மனிதரும் (சிவராம காரந்த்), ஒரு குடும்பம் சிதைகிறது (எஸ்.எல்.பைரப்பா), உருது நாவலான அக்னி நதி (குர் அதுல் ஐன் ஹைதர்), குஜராத்தி நாவலான வாழ்க்கை ஒரு நாடகம் (பன்னாலால் பட்டேல்) போன்றவற்றை உலகப் பேரிலக்கியங்கள் எதற்கும் நிகரானவை என ஒரு நல்ல வாசகன் சொல்வான்.இந்நூல்கள் பற்றிய ஆய்வுகள் வாசித்தவர்களுக்கு அவற்றின் நுட்பங்களைக் காட்டும், வாசிக்காதவர்களுக்கு அந்நூல்களின் சிறப்பை உணர்த்தும், நாவல்களை வாசிப்பது போன்றே உத்வேகத்துடன் வாசிக்கவைக்கும் மொழிநடை கொண்ட நூல் இது.

216 pages

First published January 1, 2006

2 people are currently reading
25 people want to read

About the author

Jeyamohan

209 books845 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (87%)
4 stars
1 (12%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
October 2, 2023
ஆரோக்ய நிகேதனம்,
நீலகண்ட பறவையைத் தேடி,
பாத்தும்மாவின் ஆடும் இளம்பருவத்தோழியும்,
மண்ணும் மனிதரும்,
பதேர் பாஞ்சாலி,
பன்கர்வாடி,
யயாதி,
வாழ்க்கை ஒரு நாடகம் (மனோதிடம்),
சம்ஸ்காரா,
மீஸான் கற்கள்,
சிக்கவீர ராஜேந்திரன்,
முதலில்லாததும் முடிவில்லாததும்,
கங்கைப் பருந்தின் சிறகுகள்,
ஏணிப்படிகள்,
அண்டை வீட்டார்,
அக்னி நதி,
ஒரு குடும்பம் சிதைகிறது,
சதுரங்கக் குதிரைகள்,
கொல்லப்படுவதில்லை,
தர்பாரி ராகம்,
அற்பஜீவி,
வெண்குருதி

ஆகிய 22 நாவல்கள் பற்றிய ரசனைக் கட்டுரைகள் அடங்கியது இந்நூல். இந்நூல் எனக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமைந்தது. இப்புத்தகத்தின் மூலமாகவே நான் பல அருமையான படைப்புகளை கண்டடைந்தேன். இந்திய இலக்கியத்தின் சிறந்த படைப்புகளை இந்நூல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. தீவிர இலக்கியத்தின் மேல் தீராத பற்றுகொண்டவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய படைப்பு இது.
Profile Image for Shan Sundar.
9 reviews
June 25, 2025
நீண்ட நாட்களாக என்னுடைய "படிக்கப்பட வேண்டிய" பட்டியலிலிருந்த ஒரு புத்தகம்.
தற்செயலாக இன்னும் சில புத்தகங்களோடு சேர்த்து வாங்கினேன். ஜெயமோகன் அவர்களை காணொளி மூலமும் அவரின் வலைத்தளம் மூலமாகவும் பல வருடங்களாக தொடர்ந்து வந்தாலும், இதுவே நான் வாசிக்கும் அவரின் இரண்டாவது புத்தகம். "நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்" மே நான் வாசித்த அவரின் முதல் புத்தகம்.

மிக சிறிய புத்தகமானாலும் இந்த "கண்ணீரைப் பின்தொடர்தல்" எனக்கு ஒரு ஆழ்ந்த வாசிப்பனுவத்தை குடுத்தது. எதோ நானே தேடி சென்று இந்தியா முழுக்க பயணம் சென்று எல்லா பிரதேசங்களின் கவனிக்கத்தக்க நாவல்களை கண்டெடுத்த உணர்வு. எத்தனை விதமான வாழ்க்கைகள், எத்தனை விதமான மனிதர்கள் அவர்களின் உணர்ச்சி கொந்தளிப்புகள், செயலாற்றாமை, அதீத முடிவுகள்.

எனக்கு மனதுக்கு பிடித்த புத்தகங்களை பட்டியலிட்டு ஆர்டர் செய்துவிட்டேன் -

கங்கை பருந்தின் சிறகுகள்
ஆரோக்கிய நிகேதனம்
கொல்லப்படுவதில்லை
நீல கண்டப் பறவையைத் தேடி
வாழ்க்கை ஒரு நாடகம்
மண்ணும் மனிதரும்
யயாதி
ஏணிப்படிகள்
அக்னி நதி

பஷீரின் நாவல்கள் முன்பே வாங்கியிருந்தாலும், இந்த புத்தகத்தில் ஜெயமோகன் அவர்களின் கட்டுரைக்கு பிறகே "பால்யகால சகி" யை மறுவாசிப்பு செய்தேன்.
ஆனால் இந்த நாவலை முதல் முறை படித்தபோதும் மறுவாசிப்பின்போதும் அதை பற்றி எனக்கு பொது அபிப்பிராயங்களுக்கு எதிரான ஒரு வாசிப்பு அனுபவமே கிட்டியது. பால்யகால சகி பற்றிய என்னுடைய நீண்ட விமர்சனத்தை ஏற்கனவே நான் பதிவேற்றியிருக்கிறேன் !

சிக்கவீர ராஜேந்திரன் எனக்கு சில வருடங்கள் முன்பே பரிச்சயம். ஆனாலும் எங்கு தேடியும் பல வருடங்களாக கிடைக்கவில்லை.

இதுபோக இந்நூலில் அறிமுகம் செய்யப்பட்ட ஏனைய நாவல்கள் எனக்கு உவப்பாக இல்லை. என்னை பொறுத்தவரையில் புனைவாகவே இருந்தாலும் கடும் சோகமும் மனிதர்கள் அலைக்கழிக்கப்பட்டு, அவர்களின் பெருமுயற்சிகளையும் மீறியும் தோல்வியுற்று மடியும் கதையாடல்கள் எனக்கு உவப்பதில்லை. ஜெயமோகன் அவர்களின் இன்னும் பிற புத்தகங்களை வாங்க ஆரம்பித்துள்ளேன். அவைகள் நான் புற உலகை முற்றிலும் மறந்து என்னை உள்ளிழுத்துக்கொள்ளும் ஒரு வாசிப்பனுபவமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை !
14 reviews
December 15, 2023
இந்தியாவின் இருபது முக்கியமான நாவல்களை அறிமுகம் செய்யும் நூல்.இதில் உள்ள பெரும்பாலான நாவல்கள் மற்ற தமிழ் எழுத்தாளர்களாலும் பரிந்துரை செய்யப்பட்டவை.கடைசியில் முக்கியமான இந்திய நவீன இலக்கிய நூல்களின் பட்டியல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஜெயமோகனுக்கு நன்றி.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.