Jump to ratings and reviews
Rate this book

உயிர்விளையும் நிலங்கள்

Rate this book
மக்கள் தொகைப் பெருக்கக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தெளிவாக அலசுகிறது இக்கட்டுரை நூல். சமூக அக்கறை கொண்ட திருமதி. ராஜம் கிருஷ்ணன் இந்நூலில் குடும்பக் கட்டுப்பாட்டு நடைமுறை களைப் பெண்நோக்கு விமர்சனமாகத் துல்லியமாகத் தருகிறார். 25 கட்டுரைகளும் தெளிவான தடம் காட்டு கின்றன. கணவன்-மனைவி, குடும்பம், அரசு, அரசியல், சமூகம், ஊடகம் என்று அனைத்து அமைப்புகளிலும் பெண் எப்படி உரிமைப் பறித்தலுக்கு உட்பட வேண்டியுள்ளது என்பதும் அதிலிருந்து மீள்வதற்கு உரிய வழியும் காட்டப்பெறுகிறது இந்நூலில். தமது கருத்துக்களோடு, மருத்துவர் ஆலோசனை, அறிவுசார் அமைப்புகள், இதழாளர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி ஆதாரபூர்வத் தகவல், தரவĬ

176 pages, Paperback

Published January 1, 2005

5 people want to read

About the author

Rajam Krishnan

30 books15 followers
ராஜம் கிருஷ்ணன் (பிறப்பு: 5/11/1925) மூத்த தமிழக எழுத்தாளர். சென்ற தலைமுறை எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன், தன் கதை, கட்டுரைகளால் அன்றைய வாசகர் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர். பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்த போராளி.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். 15 வயதில் கிருஷ்ணன் என்பவருக்கு மணம் செய்விக்கப்பட்டார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.

ஒரு நாவலுக்கான பொருளை முன்பே திட்டமிட்டு, சம்பந்தப்பட்ட இடங்களில் பிரயாணம் செய்து, மக்களின் வாழ்வைக் கண்டறிய அங்கேயே தங்கி உய்த்துணர்ந்த பின்னரே நாவலை எழுதுவார். இதுவே இவரது தனிச் சிறப்பாகும்.

1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார்.

பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர், அதன் விளைவாக 'முள்ளும் மலர்ந்தது' என்ற நாவலை எழுதினார். திருமதி ராஜம் கிருஷ்ணன் 'முள்ளும் மலர்ந்தது' நாவலை எழுதச் சம்பல் பள்ளத்தாக்குகளுக்கு நேரில் செல்லத் தீர்மானித்ததும், அவரது கணவர் தமது உத்தியோகத்தையே ராஜினாமா செய்துவிட்டு உடன் புறப்பட்டார். எத்தனை பேர்களால் இப்படிப்பட்ட தியாகங்களை, இலக்கிய ஆர்வத்தை முன்னிட்டுச் செய்ய முடியும்? அப்படி அங்கு அவர் தங்கியிருந்த போது மாபெரும் கொள்ளையன் மான்சிங்கின் மகன் தாசில்தார் சிங் என்பவனுடன் பேச சுமார் அரைமணி நேரம் பொறுமையாக அவனெதிரே இவர் அமர, அந்த மீசைக்கார கொள்ளையனோ, ஒரு தினசரியால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, அப்படியே இழுத்தடித்துக் கொண்டிருந்தானாம்! ராஜம் அம்மாவின் பொறுமையைக் கண்டு, பின்னர் மனம் திறந்த அவன், நான்கு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தானாம்! இவன் சுமார் 400 கொலைகள் செய்தவன் என்பது குறிப்பிடத் தக்கது!

இந்த 'முள்ளும் மலர்ந்தது' புத்தகத்திற்கு முன்னுரை எழுத திரு. ஜெயப்ரகாஷ் நாராயணணை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும், அவரைச் சுற்றி இருந்தவர் இவரை அருகிலேயே அண்ட விடவில்லை. சரி, வினோபா பாவேயிடம், சென்று வாங்கிலாம் என்றால், புத்தகத்தை (தமிழ்) முழுதும் பார்த்த அவர், தமிழிலேயே, "நான் சந்நியாசம் வாங்கிக் கொண்டவன். எனவே, என்னால் எந்த முன்னுரையும் தரலாகாது," என்றாராம்! ராஜம் அம்மாவோ, அங்கேயே சத்தியாக்ரகம் செய்து, "நீங்கள் தரும் வரை நான் இங்கேயே அமர்வேன்," என்று சொல்லி இருந்த இடத்தை விட்டு நகரவில்லையாம்! மனம் நெகிழ்ந்த பாபா (வினோபா பாவேயை அப்படித்தான் அழைத்தர்களாம்), "ஆசீர்வாதங்கள். அன்புடன், பாபா," என்று தமிழிலேயே எழுதி கையெழுத்திடாராம்! ஆனால் அந்தப் புத்தகம் எங்கோ போய்விட்டதுதான் மிகவும் வருத்தமான விஷயம்.


டாக்டர் ரெங்காச்சாரியின் சுய சரிதை எழுதுகையில், அவர் தொழில் புரிந்த எத்தனையோ ஊர்களுக்கு சென்று பயனுற்றவர்களை பேட்டி எடுத்துள்ளார். அதிகாலை நடை செல்லும் போது இவர் பிரசவம் பார்த்த ஆடு மேய்க்கும் பெண்ணையும் பார்த்து அவளைப் பேட்டி எடுத்துள்ளார். டாக்டர் ரெங்காச்சாரி வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்ப்பாராம். எனினும் ஒரு மருத்துவ கருத்தரங்கத்துக்கு செல்ல நேரிட்டபோது, உடன் சென்ற அவரது நண்பர் மட்டுமே இவர் பேசியதைப் பதிவு செய்திருந்தாராம். படுத்த படுக்கையாய் இருந்த அநத நண்பரைப் பேட்டி காண ராஜம் அம்மா, செல்கையில், டாக்டரின் பெயரைக் குறிப்பிடதுமே, 'இரு, நான் சொல்கிறேன்' என்று அந்த நிலையிலும், விரிவாக செய்திகளைப் பகிர்ந்து கொண்டாராம். (நண்பர் கஸ்தூரி ஸ்ரீநிவாசன்?) மறுநாள் பத்திரிகையை பிரித்த ராஜம் கிருஷ்ணனுக்கு தூக்கிவாரிப் போட்டதாம்! அந்த நண்பரின் மரணச் செய்தியைக் கண்டு!

திரு. கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம் வயதில் 2002ல் அவர் இயற்கை எய்தினர். ராஜம் - கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. அதன் பிறகு தனது உறவுக்காரர்கள் சிலரை நம்பி தன்னிடமிருந்த பணத்தையும் சொத்துக்களையும் விட்டு வைத்தார் ராஜம் கிருஷ்ணன். ஆனால் அவர்களோ இவரை ஏமாற்றிவிட, 83 வயதில் நிர்க்கதியாய நிற்க வேண்டிய நிலை. அவரது நண்பர்களும், ஒரு சகோதரரும் உதவி செய்து அவரை பாலவாக்கம் விச்ராந்தி முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.

ஆனால் யாரும் தன்னைப் பார்த்து இரக்கப்படுவதை இந்த நிலையிலும் விரும்பாத ராஜம் கிருஷ்ணன் இப்போதும் அதே உற்சாகத்துடன் எழுத்துப் பணியைத் தொடர்கிறார். இவரது கடைசி புத்தகம் ‘உயிர் விளையும் நிலங்கள்'. குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அதை பெண்கள் எதிர்நோக்கும் விதங்கள் குறித்து 25க்கும் மேற்பட்ட கட்டுரைகளோடு கூடிய இந்தப் புத்தகம் பெண்களுக்கு புதிய விழிப்பை உண்டாக்கும் முயற்சி.

முதுமையில் தற்போது பொருளாதார கஷ்டத்தினாலும் உடல்நலிவினாலும் கஷ்

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
2 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Karthick.
371 reviews124 followers
April 8, 2024
* கடைசியாக நான் எழுதிய புத்தகப்பதிவு கடந்த வருடம் பிப்ரவரி மாதம். ஓராண்டிற்கு பிறகு நண்பர்களை காண்பதில் மகிழ்ச்சி 🙂 *

இந்த வருடம் நான் படிக்க ஆரம்பித்த புத்தகம் இது. ராஜம் கிருஷ்ணன் அனைவரும் அறிந்திருப்பீர்களா என்று தெரியாது. தமிழ்நாட்டின் முக்கிய பெண்ணிய எழுத்தாளர்களில் ஒருவர்.

எளிய மனித வாழ்க்கையின் பல்வேறு சிக்கல்களையும், பிரச்சனைகளையும், அவர்களின் உழைப்பு சுரண்ட படுவதையும், குறிப்பாக பெண்களின் துயரங்கள், அவலங்கள், போராட்டங்களை அரசியல், சமூக, பொருளாதார களத்தில் கையாண்ட ஆளுமை இவர்.
"உயிர் விளையும் நிலங்கள்" - ஹிந்து மத புராணங்களில் பெண்களின் நிலைகளை பேச ஆரம்பித்து, மக்கள் தொகைப் பெருக்கக் கட்டுப்பாட்டில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், திருமணம், குடும்பம், அரசியல், சமூகம் என்ற பெயரால் அவர்களின் உரிமை பறிக்கப்படுவதையும் தெளிவாக அலசுகிறது.

ஒரு பெண்ணின் தாய்மை, மகப்பேறு அடைவது, கற்பு, கருத்தடை என்று அனைத்தும் ஆணாதிக்க கோட்பாட்டில் அவர்கள் அடிமையாக்கப்படுவதை பற்றி பேசுகிறார்.
ஒரு பெண் பூப்படைந்து முதல் மாதவிடாய் முதல் குழந்தை பிறப்பு வரை அனுபவிக்கும் வலிகளையும், அவள் கருவுறாமலோ / வேண்டாம் என கலைக்கும் போது இந்த சமூகம், அவளின் நடத்தையை எப்படி மதிப்பீடு செய்கிறது என்பதை வலியுடன் விவரிக்கிறார்.

அன்றும் இன்றும் இந்திய பெண்களின் நிலையை அறிய, பெண்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.