இலங்கையின் பண்டைய வரலாற்றை கூறும் நூல்களில் மகாவம்த்துக்கு அடுத்ததாக முக்கியம் வாய்ந்த நூல் சூளவம்சமாகும்.இந்நூலும் பிக்குகளால் எழுதப்பட்டமையால் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்துவதுடன் மன்னர்கள் பௌத்த மதத்துக்கு ஆற்றிய சேவைகளைப் பற்றியே அதிகம் விவரிக்கின்றது. பௌத்த மதத்தை தவிர்ந்த ஏனைய மதங்களை பொய்யான மதங்கள் என்றும் தன்னை கடவுளாக பிரகடனப்படுத்த்த புத்த பெருமானை கடவுள்களின் கடவுள் என்றும் குறிப்பிடுவது சூளவம்சத்தின் பக்கச்சார்பினை வெளிப்படையாக காட்டுகின்றது.