A. Madhavan (ஆ. மாதவன்) was a Tamil writer born and raised in Thiruvananthapuram, Kerala. He was one of the pioneers of realist writing in modern Tamil literature. He has written short stories, novels, essays, and translations and has edited magazines. Furthermore, he was acclaimed by readers and critics alike as the storyteller of the market street, for bringing everyday events of the bazaar he lived in to his literary work.
He was the recipient of the 2016 Sahitya Academy Award for his collection of articles titled Illakkiya Chuvadukal (Literary Traces).
Selected works Punalum Manalum (On a River’s Bank) Krishna Parunthu (Brahmini Kite) Thoovaanam (Drizzle) Kaalai (Bull) Ettavathu Naal (Eighth Day)
Translations from Malayalam: Malayatoor Ramakrishnan’s Yakshi (A Mythical Being) P.K. Balakrishnan’s Ini Gnan Urangatte (And Now, Let Me sleep) Karoor Nilakantapillai’s Sammaanam (Reward)
ஆ. மாதவனை பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால், தமிழில் நவீன சிறுகதையின் முக்கிய ஆளுமைகளில் முக்கியமானவர் என்றும், " இலக்கியச் சுவடுகள்" என்ற கட்டுரைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்றும் அறிந்தேன். இதுவரை எனக்கு அறிமுகமாகாத ஒரு எழுத்தாளனின் படைப்பை படிக்கலாம் என்று தான் "நாணயம்" படிக்க ஆரம்பித்தேன். அவர் கதைகள் என்னை ஏமாற்றவில்லை.
மனிதர்களின் அந்தரங்கங்களையும், பாலுணர்ச்சி உந்துதல்கள் எப்படி மனிதனை ஆட்டிக்குலைக்கும் என்ற உண்மைக்கு அழுத்தம் தருவதை அவர் கதைகளில் காணமுடிகிறது. இவர் உலகின் மனிதர்கள் - உதிரிகள், தரகர்கள், பிச்சைக்காரர்கள், பொறுக்கிகள், திருடர்கள், சட்டம்பிகள், வேசிகள் என்று அடித்தட்டு மக்களாக இருக்கின்றனர். இவர்களின் வாழ்வின் நோக்கம் வாழ்ந்து தீர்ப்பது மட்டுமே. தங்களின் இருப்பிற்காக நாகரிக உலகம் கற்பிப்பதை ஏற்காதவர்கள். இவர்களின் வாழ்க்கையில் நன்மை தீமை எல்லாமே இயல்பு தான். ரஷ்யா எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் சாயல் இவர் கதைகளில் உண்டு.
"தூக்கம் வரவில்லை" - 35 வயது வரை மாடாய் உழைத்த மாடசாமியின் தாய் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். அவள் இருப்பு, தனக்கு தொந்தரவாக இருப்பதாக கருதுகிறான். சாப்பாடுக்கு கூட படாத பாடு படுகிறான். ஒரு கட்டத்தில் தன் தாய்க்கு விஷம் வைத்து கொன்றுவிடுகிறான்.
"தேவதரிசனம்" - பாலியல் தொழில் விட்டு விலகி தனக்கென்ற வாழ்க்கையை நிம்மதியாக வாழும் வசுமதி மீது, கோவில் ஊழியனாக போற்றிக்கு அவள் மேல் தீரா ஆசை. ஒழுங்கீனமாக இருந்தவள் தன் ஆண்மைக்கு அடிபணியவில்லையே என்று காம பசியால் துடிக்கிறான். காதலுக்கும் காமத்துக்கும் இடையிலான ஊசலாட்டத்தையே காட்டுகிறது.
"ஈடு" - மாடசாமி ஒரு குடிகாரன். தனது எட்டு வயது மகன், தார்ப் பீப்பாயில் விழுந்து மரணம் அடைகிறான். இழப்பீடு தொகைக்காக அலைகிறான். பணம் கிடைத்தபின் நண்பர்கள் பங்குகளை பிரிக்க மிச்சமுள்ளதை குடிக்கு சமர்பிக்கிறான். குற்ற உணர்வற்ற ஒருவனின் இயல்பை இந்த கதை மூலம் தெரிகிறது.
இப்படி மரணம் இயல்பானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் 'மோகபல்லவி', 'காமினி மூலம்', 'எட்டாவது நாள்', 'நாயனம்' என்ற கதைகளில் பிரதிபலிக்கின்றன.
Finding humans secrecy and understanding the pulse of a common man's conscience or mind is the secret of A.Madhavans writing. Some stories from this short story collection are simply awesome.