இடதுசாரி இலட்சியவாதம் என நினைக்கும் ஒன்றின் மனிதவடிவமென பவாவை எண்ணிக்கொள்பவன் நான். எந்நிலையிலும் எப்போதும் மனிதர்களுக்கு உதவத் தயாராக இருப்பவர். எங்கும் எதிலும் நல்லதை மட்டும் பார்க்கக்கூடியவர். எந்தக் கர்ன்ஸியை விடவும் நல்லியல்புக்கு செலவாணி அதிகமென பவாவை கொண்டே நான் நம்பிவருகிறேன். ‘அறம்’ வரிசை சிறுகதை கதைமாந்தர்களின் உலகைச் சேர்ந்தவர் அவர்.
பவா செல்லதுரை என்ற பெயர் பரிச்சயமானதுதான் என்றாலும்; அவர் எழுத்தாளரா, கலைஞரா, அல்லது நடிகரா என்று தெரியாமலிருந்தது. Google செய்து பார்த்தபோது அடடே இவரா என்று ஒரு வியப்பு மேலிட்டது.
நாம் அறிந்த பிரபலங்கள் பலரை பற்றியும், அவர் தன் நண்பர்களை பற்றியும் எழுதியிருக்கிறார். ஜெயகாந்தன், மம்முட்டி, பிரபஞ்சன், பால் சக்காரியா, கோணங்கி என நீள்கிறது.
அவரை அலைகழித்த, படிக்கும் நம்மையும் பேச்சற்று நிலைகுலையச் செய்யும் பல சிறுகதைகள் மற்றும் கவிதைகளை இந்நூலில் பதிவிட்டிருக்கிறார்.
உதாரணமாக பால் சாக்காரியா எழுதிய சிறுகதை இப்படி தொடங்குகிறது:
"தன் இரண்டு ஷூ கால்களிலும் தெறித்த குழந்தைகளின் இரத்தக்கறையோடு அப்போர்வீரன் அந்த வேசியின் விடுதிக்கதவைத் தட்டும்போது இரவு கிட்டத்தட்ட பத்து மணியைத் தாண்டியிருந்தது"
மம்முட்டி மிகச்சிறந்த நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். முகம்தெரியாத பெண்மணியை அவர் தன் கைகளில் சுமந்து மருத்துவமனையை நோக்கி நடக்கும்போது நடிகன் என்ற பிம்பம் உடைந்து கருணையுள்ளம் கொண்ட புனிதமான உள்ளம் வெளிப்படுகிறது.
இந்நூலை படிக்கத் தொடங்கியபோது எனை ஆட்கொண்ட ஒரு உணர்ச்சி, படித்து முடித்து வெகு நேரமாகியும் பீடித்திருந்தது.
When I found and started reading this book on Kindle, Bava started narrating these people who met in his life on Youtube ShrutiTV channel during COVID-19 lockdown. The way he explained the people and their specific characters from Megastar Mammooty to Nobody knew characters is fantastic.
பவா செல்லத்துரை - எனக்கு அவரின் youtube - வலையொளி (podcast) மூலம் தான் முதல் அறிமுகம். அவரின் வலை பேச்சும் , கதை சொல்லும் அன்பும் எனது நீண்ட அலுவலக பயணத்தை இனியதே நிறைத்தது.
எல்லா நாளும் கார்த்திகை - பல எழுத்து, சினிமா ஊடக கலைஞர்க்களின் அகம் சார்ந்த ஒரு அன்புமிக்க அறிமுகம். meta-meta data என்று ஒரு கன்னிப்பொறி கூற்று உள்ளது அதுபோல கலைஞர்க்களின் வாழ்வியல் முறை மற்றும் பவாவின் நடப்பு பரிமாற்றம் தான் தொகுப்பு.
மம்மூட்டி/மிஸ்கின்/பாலா/பாலு மகேந்திரா/வைடு அங்கிள் ரவி சங்கர் /பி.சி ஸ்ரீராம்/நாசர்/பாரதிராஜா/லெனின் வண்ண நிலவன்/கோணங்கி/திலகவதி IPS/ஸ்.ராமகிருஷ்னன்/சுந்தரம் ராமமூர்த்தி/ஜெயகாந்தன்/பிரமிளன்/
மற்றும் சிலரின் சொல்லப்படாத முகங்கள் ஒரு சிற்று ஓடையாக
ஒரு கலைஞரின் அறிமுகம்/ஆக்கம்/அதனின் தாக்கம்/பவாவின் கதையாக்கம் தொகுப்பின் கட்டம்மைப்பு எனது நெருக்கத்தை கூட்டியது
புத்தகம் கலைஞர்கலை பற்றியது அவர்களின் படைப்புகளின் விமர்சனமோ பரிந்துரைகளோ கிடையாது
I have been introduced to Bava Chelladurai just few weeks before by my brother. I started viewing his story telling video . It was very enjoyable. Then started searching for his other story telling videos. That lead me to this book in Amazon Kindle. I got the book and read within 2 days. An enjoyable book.
பல்வேறு படைப்பாளிகளை அவர்களுடன் தான் சேகரித்த நினைவுகளை கூறி நமக்கு அறிமுகம் செய்கிறார் பவா அவர்கள். இவ்வளவு படைப்பாளிகளுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பதை எண்ணுகையில் அவர் இந்தப் புத்தகத்தில் எழுதாத பக்கங்கள் தன் மனதுள் எவ்வளவு வைத்திருப்பார் என்று மனம் எண்ணி மலைக்கிறது.