சு. வேணுகோபால் (பிறப்பு: மே 20 1967) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கோயம்புத்தூரில் உள்ள குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் எழுதிய “வெண்ணிலை” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
பால்கனிகள் - ஒரு ஆணின் மாற்றம், அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்கிறது..
இழைகள் - ஒரு ஆசிரியர், அவர் கடந்து வந்த பாதையை பதிவு செய்கிறது.. "தனக்கு நிகழும் வரை அத்தனையும் வேடிக்கையே" இந்த வரிகள் தான் நினைவுக்கு வந்தது..
எவ்வளவு தலித் மக்கள் கதைகளை படித்தாலும், அவர்கள் அனுபவித்தக் கொடுமைகளை நமக்கு நடந்திருந்தால் என்று, நம்மால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.. கண்டிப்பாக முடிந்த அளவு, அனைவரிடமும் அன்புடனும், சக மனிதனாக நடக்க முயற்சி செய்ய வேண்டும்.. சாதி, மத, பாலின பேதங்கள் இல்லாமல்..