Jump to ratings and reviews
Rate this book

அ'னா ஆவன்னா

Rate this book
வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும், சம்பவமும் ஒரு படம்போல நம்மோடு தங்கிவிடுகின்றன. மனித உறவுகள் என்பதே கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுதானோ என்ற திகைக்க வைக்கும் அளவுக்கு நா.முத்துக்குமார் இக்கவிதைகளில் அன்றாட வாழ்வின் உயிர்த் துடிப்புள்ள சித்திரங்களை உருவாக்குகிறார். குமுதத்தில் தொடராக வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்ற கவிதைகள் இவை

96 pages, Paperback

First published December 1, 2005

9 people are currently reading
241 people want to read

About the author

Na. Muthukumar

15 books328 followers
Nagarajan Muthukumar (12 July 1975 – 14 August 2016) was a Tamil poet, lyricist, and author. Best known for his Tamil language film songs, he received the most Filmfare Awards for Best Lyricist in Tamil and was a two-time recipient of the National Film Award for Best Lyrics for his works in Thanga Meenkal (2013) and Saivam (2014).

Muthukumar grew up in Kannikapuram village in Kancheepuram, India in a middle-class family. He has a brother Ramesh Kumar. At the age of six and a half, he lost his mother. At a young age, he acquired an interest in reading. He began his career working under Balu Mahendra for four years. He was later offered to write lyrics in the film Veera Nadai, directed by Seeman. He has been credited as a dialogue writer in a few films, including Kireedam (2007) and Vaaranam Aayiram (2008). His last movie as a lyricist is Sarvam Thaala Mayam with A.R. Rahman.

Na. Muthukumar was born at Kannikapuram, Kancheepuram on 12 July 1975. He did his graduation in Physics at Kancheepuram Pachaippa college. He pursued his master's degree in Tamil at Chennai Pachaippa college. With the aim of becoming a director, he joined as an assistant director to the legendary Balumahendra. His Poem 'Thoor' took him to great heights. On 14 June 2006, he married Jeevalakshmi in Vadapalani, Chennai.

Muthukumar, who had been suffering from jaundice for a long time, died on the morning of 14 August 2016, at his Chennai residence, of cardiac arrest. He is survived by his wife, son and daughter.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
75 (58%)
4 stars
44 (34%)
3 stars
7 (5%)
2 stars
1 (<1%)
1 star
1 (<1%)
Displaying 1 - 18 of 18 reviews
Profile Image for Gowtham.
249 reviews50 followers
December 17, 2019
புத்தகங்கள் திறக்கயில் நான் அமைதி அடைகிறேன்.
புத்தரின் சீடனா முத்துக்குமார் ⭐🖤
99 reviews
September 5, 2020
நாம்  வாழ்வில் அன்றாடம் நடக்கும் செயல்களை மற்றும்  நாம் பழகும் மனிதர்களை, பார்க்கும் அல்லது போகும் இடங்கள்  பற்றி கவிதை வடிவில் கேலி செய்துள்ளார்/ கேள்வி கேட்டுள்ளார் .  பல முறை படிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகங்களை
 சரியாக  விமர்ச்சிப்பது
 கரையான்கள் மட்டுமே 
சில  புத்தகங்களை 
கரைத்து குடிக்கின்றன, 
சில  புத்தகங்களை கடித்து குதறுகின்றன.

 இங்கு பெரும்பாலும் 
கல்யாணத்தை மட்டுமல்ல,
கல்யாணத்தில்
 கலந்து கொள்வதைக்கூட 
நகைகள்தான்  தீர்மானிக்கின்றன  
255 reviews32 followers
March 1, 2024
புத்தகம்: அ'னா ஆ'வன்னா
எழுத்தாளர்: நா. முத்துக்குமார்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள்: 104
நூலங்காடி: Bookwards
விலை: 120

💫 மண்ணை விட்டு பிரிந்தாலும் நம் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ள கவிஞரின் மற்றொரு மகத்தான படைப்பு.

💫 தான் பிறந்து வளர்ந்த கிராமம், அங்குள்ள மக்கள், தன் நண்பர்கள் என அனைத்து தலைப்புகளிலும் எழுதியுள்ளார்.


💫 அனைத்து கவிதைகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

💫 சிறு வயதில் படம் வரையச் சொன்னால் ஒரு ரோடு, 2 முக்கோணம் போட்டு ( மலை என்று) நடுவில் சூரியன் வரைந்து, அருகில் ஒரு சிறு வீடு வரைவோமே அது போல - எம்ப்ராய்டரி போட ஆரம்பித்ததும் 2 வாத்துகளை போடாமல் பெண்கள் இருந்ததில்லை.

"வாத்துகள் ரெக்கைகள் இருந்தும் அதிக நேரம் பறப்பதில்லை. பிறந்த வீடு, புகுந்த வீடு என பெண்களைப்போலவே தண்ணீருக்கும் தரைக்கும் அலைபாய்வதே வாத்துகளின் வாழ்க்கை "

💫 புத்த(க)யா - புத்தக வாசிப்பு மற்றும் நூலகத்தின் அவசியத்தைக் கூறும் கவிதை. தனக்கு புத்தகம் எடுத்தாலே தூக்கம் வருது என்று சொல்கிறவர்கள் தங்களுக்கான புத்தகத்தை இன்னும் எடுக்கவில்லை என்று அர்த்தம் - எங்கோ படித்தது.

"ஒரு புத்தகத்தைத் திறக்கிறபோது
ஒரு உலகம் திறந்து கொள்கிறது
ஒரு புத்தகம் எரிகிறபோது
ஒரு அனுபவம் எரிகிறது."

💫 என்றும் எங்கள் நினைவில் நீங்கள் இருப்பீர்கள்.

புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .


சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
Profile Image for Anitha Ponraj.
280 reviews45 followers
July 8, 2022
புத்தகம் : அ'னா ஆ' வன்னா
கவிஞர் : நா. முத்துக்குமார்
பக்கங்கள் :104
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்

நா. முத்துக்குமார் என்றதும் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது "ஆனந்த யாழை" பாடல் தான். அழகு தமிழும், எதார்த்தமும் கொட்டிக் கிடக்கும் அவர் பாடல்கள் இதமான மயிலிறகின் வருடல்.

பாடலாசிரியரான அவரை பாடல்கள் அறிமுகம் செய்ய, அவரின் புத்தகங்களை எனக்கு அறிமுகம் செய்தது என் சக புத்தக வாசிப்பு நண்பர் ஒருவர் தான்.

இந்த கவிதைத்தொகுப்பு அவர் பாடல்கள் போலவே யதார்த்தமும், தமிழ் அழகும் கொண்டு மிளிர்கிறது.

இந்த புத்தகத்தில் எல்லா கவிதைகளையும் நான் ரசித்திருந்தாலும், சிலவற்றை இங்கு பகிர்கிறேன்.

"உங்கள் பால்ய வயது ஞாபகத்தில்
இளமையான அப்பாவின் முகம் எவராலும் திருட முடியாமல்
இன்னமும் அப்படியே
இருக்கிறது."

"நீ பார்த்த கண்ணாடிகளில் உன் பிம்பங்கள் உயிர்வாழ்கின்றன."

"குழந்தைகளுடன் பேசுகையில் பிரபஞ்சத்தில் நம் இருப்பு ஒரு புள்ளியென சுருங்கிவிடுகிறது."

"மனம் என்பது
பைத்திய எண்ணங்களின் தொகுப்பு.
காற்றில் மிதக்கும் தூசிகளுக்கு திசை என்பது இல்லை!"

"புத்தகங்களை சரியாக விமர்சிப்பது கறையான்கள் மட்டுமே. சில புத்தகங்களை கரைத்துக் குடிக்கின்றன, சில புத்தகங்களை கடித்துக் குதறுகின்றன."

இத்தனை அருமையான கற்பனை வளம் மிகு‌ந்த படைப்பாளியை இத்தனை சீக்கிரம் காலம் அழைத்துக் கொண்டதே என்று மனம் ஒருபுறம் வருந்த, காலத்தை தாண்டி வாழப்போகும் அவர் படைப்புகளும், ஒலிக்கும் பாடல்களும் ஒரு சின்ன ஆறுதல்.
Profile Image for Swetha vasu.
1 review
Read
January 21, 2026
I am new to reading tamil poems and this gave me a different feeling. Especially author's way of writing is easy to understand at first but make us deeply think about things that we miss to notice at our everyday life. I am excited to read his other books also
Profile Image for Gayathri (books_and_lits).
113 reviews2 followers
February 28, 2025
புதுமைப்பித்தனை தினமும் படிப்பதாலோ என்னவோ parallel reading செய்யும் நா.முத்துக்குமாரிடமும் வண்ணநிலவனிடமும் அவரைக் கண்டேன்!அது சரி,ஆக்ரோஷம் கலந்த சமூக அக்கறையும் நக்கலான நடையும் கண்டால் அவரைத் தவிர வேறு யார் என்று சொல்லுமளவல்லவா தன் முத்திரையை ஆழப் பதித்துள்ளார்!!!ஆனால் பதிவு அவருடைய புத்தகத்தைப் பற்றி அல்ல😅

42 கவிதைகள் கொண்ட நா.முத்துக்குமாரின் அ’னா ஆ‘வன்னா கவிதைத் தொகுப்பில் புதுமைப்பித்தனை பார்ப்பதை என்னால் தவிர்க்க இயலவில்லை!சில வரிகளைப் படித்த போது,”இது புதுமைப்பித்தன் சாயல்” என்று புத்தகத்தில் பதிவு செய்யாமல் இருக்கமுடியவில்லை!புத்தகத்தின் பெரும்பான்மையான கவிதைகள் பெண்களின் சுதந்திரம் என்பதை விட பெண்களின் வாழ்க்கை நிலையைக் கண்டு மனம் நொந்து விரக்தியில் வந்து விழுந்த வார்த்தைகளாக இருந்தன.இவையே இன்னும் சற்று காட்டமான நக்கலுடன் இருந்திருந்தால்…அது தான் புதுமைப்பித்தன்!!!

Read more…

https://www.instagram.com/p/DGnR3MrzW...
Profile Image for Swetha.
41 reviews25 followers
February 26, 2017
//கண்ணதாசன் காலம்போல் இல்லைஇப்ப பாட்டுன்னு அண்ணாத்த எங்களை சொல்றீங்க தென்னைமர வேருக்குப் பக்கம் வளர்கிற சின்னஞ்செடி நாளைக்கு மேலே வரும் - ஒப்புதல் வாக்குமூலம்//

//உணவின் ருசி, உணவில் இல்லை. புறக்கணிப்பின் கசப்பிலும்
குற்றவுணர்ச்சியின் காரத்திலும்
அது ஒளிந்திருக்கிறது - முனியாண்டி விலாஸ்//

//மாநகரத்துத் தட்டில் விழும் ஒவ்வோர் அரிசியிலும் ஒளிந்திருக்கின்றன லாரிச் சக்கரத்தின் தடயங்கள் - வயலும் வாழ்வும்//

//குற்றவுணர்ச்சியின் படிக்கட்டில் கால் வைக்காமல் புத்தகம் திருடுவது பெரிய கலை. மாற்றான் அலமாரிப் புத்தகத்திற்கு மணம் அதிகம் - புத்த(க)யா//
Profile Image for Dineshsanth S.
193 reviews42 followers
October 22, 2016
அன்றாட வாழ்வில் சந்திக்கும் நப���்கள் முதல் கடவுள் வரை வந்து போகின்றார்கள் இத் தொகுப்பில் உள்ள கவிதைகளில்.ஆங்காங்கே இழையோடும் மெல்லிய நகையுணர்வையும் அங்கதச் சுவையையும் விட என்னை அதிகம் கவர்ந்தது என்னவோ கவிதைகளின் எளிமையும் அவற்றின் இயல்பான தன்மையும் தான்.
49 reviews3 followers
January 1, 2025
பூக்கடைக்கு விளம்பரம் செய்ய வந்துள்ளேன். நா.முத்துக்குமார் என்ற பூக்கடையில் பெற்ற 42 பூக்களும் 103 பக்க இதழும் கொண்ட பூங்கொத்து இந்தப் புத்தகம். பெயர் நினைந்த அளவிலேயே மனதில் மணங்கமழும் பூக்கடையில் நான் நயந்தவை கூறுகிறேன்

குழந்தைகளிடம் இனிப் பேசுகையில் கடவுளிடம் பேசுகிறேன் என்ற இவர் கருத்தை நினைவுகூர்வேன் கண்ணாடி பார்க்கையிலும். தவழுங்குழந்தை வடிவை Lorry கொண்டிருப்பதை இவர் வரிகளே காட்டின. யானைகட்டிப் போரடித்த காலம் போய் நெற்கதிர்களில் Lorry ஏறப் பரப்பிவைக்கும் காலத்தின் மாற்றம் ஏற்றமா இறக்கமா?

ஆசை காட்டி ஏமாற்றாமல்
என் சம்பளம் ஆயிரம் தான்
அதுக்குள்ள வாழலாம் வா
என்று குறும் தொகையை வெளிப்படையாகக் கூறும் குறுந்தொகை எனும் படைப்பு நறும்பூந்தொகையாய் மணக்கிறது. குறுமிளகைக் கடித்த குழந்தையின் அலறலையும் முதிர்ந்த முருகக் கடவுள் படத்தையும் இதுவரை கற்பனை கூட செய்ததில்லை

கற்பனைக்குதிரைக்குக் கண்ணால் கண்ட காட்சிகளைக் கடிவாளமாக்கிச் சொற்சாலையில் செலுத்துகிறார் நா.மு.

பிறர் புறக்கண்ணால் கண்டு அகக்கண்ணால் காணாதவற்றைக் கண்டு சொல்வதே படைப்பு எனினும் அதை வாழைப்பழத்தில் ஊசி நுழைப்பதுபோல் தடையின்றிப் புகுத்துவது இவர்போல யாருக்கு வாய்க்கும் இனி

இப்பூங்கொத்தில் உள்ள பெரும்பாலான பூக்கள் வலியோடு மணக்கின்றன. மனத்தை வெற்றிடமாக்கி வானில் ஏற்றிப் பறக்க வைத்து அவ்வெற்றிடத்தில் தான் ஏறி அமர்ந்து அழுத்துகின்றன. மனம் பறக்கவும் இயலாமல் தரையிறங்கவும் இயலாமல் இடையில் மிதந்தலைந்து திசைமறந்து வலம்வருகிறது காற்றிலலையும் துகள் போல

துயருற்றவன் குடிக்கும் மது போன்றன இவர் படைப்பில் பல. துயரிலிருந்து மீண்டு வர விரும்பினும் அறிந்தும் அறியாமலும் அத்துயரில் மூழ்கி மூழ்கி எழுந்தமிழும் குடிகாரன் போலானேன். ஆனால் குடியைக் கெடுக்கும் குடியன்று இது. குடி போற்றித் தமிழ் வடித்தவன் கொடுத்த சொற்கள். ஆம் கள் இவன் சொல்

கள்ளுண்ட மயக்கத்தில் தள்ளாடித் தடுமாறி ஒருவாறு தெளிவுற்று இளைப்பாறி நிலைபெற்று நின்றபின் அறிந்தேன் கல்வெட்டாய்த் தன் சொல்லை மனதில் பதித்துவிட்டான் என்று

ஐயன் திருவள்ளுவர் சொன்னார் கள் உண்டாரைத் தான் மயக்குமாம் ஆனால் காமம் கண்டாரையே மயக்குமாம் ஆதலால் கள்ளினும் காமம் பெரிதன்றோ

எனின் ஒருமுறை உண்டு அதன்பின் நினைக்கும் பொழுதெல்லாம் மனத்தை மயக்கும் நா.மு.வின் சொற்கள் காமத்தினும் பெரிதன்றோ. காலம் கடந்து வாழும் கலைஞன் நா.மு. பற்றி நாளெலாம் நயந்தாலும் நாள் போதாது

நயந்தவையும் நல்லவையும் பலபயந்த பாவலனைப் பார் சுமக்க வலியிழந்து பாதிவழியில் நாம் நிற்கிறோம்!
1 review
Want to read
April 26, 2020
Someone please explain how to read this book..
November 23, 2020
மனதை துளைத்த வரிகள் "அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் நிலா இருக்கிறது சோறு இருக்கிறது ஊட்டுவதற்க்கு தாயில்லை"..
Profile Image for Vengatesh.
7 reviews1 follower
May 29, 2022
GOOD BOOKS teach some lessons,One of the good books for teaching 👍 👌
Profile Image for Ajeeth.
6 reviews
February 14, 2023
சிறுவன் ஆனேன் மீண்டும்
Profile Image for Janany.
35 reviews5 followers
August 2, 2025
4.5⭐️

“அணுசக்தி விஞ்ஞானியாவேன்” என்ற நான், அ’னா ஆ’வான்னா எழுதி கொண்டு இருக்கிறேன்
~ நா.முத்துக்குமார்

அணிலாடும் முன்றில் தான் இவர் எழுத்தில் நான் வாசித்த முதல் புத்தகம். அதிலேயே அவரின் பாடல் வரிகளை ரசித்த நான் அவரின் எழுத்தின் மீதும் காதல் வயப்பட்டு ரசிகை ஆனேன். அதன் பிறகு அவரின் எழுத்தில் வெளிவந்த அனைத்து புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் என நினைத்து வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.

இந்த புத்தகத்தை கடந்த வருடம் வாசித்து இந்த வருடமும் மீள்வாசிப்பு செய்தேன். ஒரு புத்தகத்தை நாம் ஒரு முறைக்கு மேல் வாசிக்கும் பொழுதுதான் முதல் தடவை கவனிக்க ரசிக்க தவறிய பலதை கவனிப்போம். அப்படி ரசிக்க ஒரு புததகமே இது.

இவரின் புத்தகத்தை review செய்ய எதுவும் இல்லை. கவிதை பிடிக்குமா? வாசியுங்கள். நல்ல வரிகளை ராசிக்க தெரியுமா? வாசியுங்கள். இலகு தமிழில் 1 மணித்தியாலத்துக்குள் வாசித்து முடிக்க கூடிய புத்தகம். ஆனால் வாழ்நாள் முழுவதும் திரும்ப திரும்ப எடுத்து வாசித்து ரசிக்க கூடிய புத்தகம்.

“யார் சாமி நீ? இப்பிடி எழுதி இருக்க?” அப்பிடி நினைக்க தக்க வரிகள். என்னால் குறிப்பிட்டு இது அழகு அது அழகு இது பிடித்த வரி என தெரிவு செய்ய முடியவில்லை.
Displaying 1 - 18 of 18 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.