அடக்குமுறையை எதிர்த்து கிளம்பிய பல இலட்ச மக்களின் கோபங்களும், பல ஆயிர முதலாளிகளின் பேராசைகளுமே முதலாம் உலகப் போரின் நுனியை இழுத்துவிட்ட நிகழ்வாகிறது.
1914 ல் தொடங்கிய முதலாம் உலகப் போர் தேவைப்படாத ஒன்று என்ற கருத்துக்கள் நிலவினாலும் அது நாடுகளுக்கிடையே எவன் பெரியவன் என்ற போட்டியினாலும் முதலாளித்துவத்தின் கைகளால் மக்களை வஞ்சித்து அவர்களின் மென்னியை பிடித்து ஆட்டியதன் பலன் தான் இப்போரின் காரணம் என்பதை உணர முடிகிறது.
ஜரோப்பியர்களின் பேராசையே மனித குலத்திற்குத் தீரா ரணத்தை உண்டாக்கியிருக்கிறது. நாகரீக வளர்ச்சிக்கு அவர்களின் ஆசைகளும் ஒரு காரணம் என்றாலும் அதை ரத்தத்தால் எழுதப்படும் போது வலியே எஞ்சி நிற்கிறது.
நான்கு பாகமாகப் பிரித்து எழுதப்பட்ட இப்புத்தகத்தில் முதலாம் உலகப் போர் துவங்குவதற்கு எது அடித்தளம் இட்டது என்பதை ஐரோப்பியர்களின் நில ஆக்கிரமிப்பு ஆசைகளும், நிர்வாகச் சீர்கேடுகளும், மனிதனை மனிதனாக நடத்தாத அடிமையாட்சியின் வழியாக எழுதப்பட்டிருக்கிறது.
போருக்கு காரணமான பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி நாடுகளின் நிலப்பரப்பையும், ஆட்சியாளர்களின் மீதான மக்களின் கோபங்களையும் போர் என்ற வடிவத்தை அடைவதற்கு முன் வைக்கப்பட்ட முதல் அடிகளையும் தேவைப்படும் அளவிற்குச் சொல்லி இரண்டாம் பாகத்தை நோக்கி நகர்கிறது.
போரை தொடங்குவதற்குப் பொதுவெளியில் ஒரு காரணத்தைச் சொல்ல வேண்டும் இல்லையா, ஆஸ்திரியா இளவரசரை படுகொலை செய்த சம்பவத்தைத் தொடக்கப் பிரச்சனையாகக் கொண்டு ஐரோப்பிய நாடுகள் இருபிரிவாகப் பிரிந்து கொத்துக் கொத்தாக மக்களைப் பலி கொடுப்பதற்குச் செய்யும் ஏற்பாடுகளை இரண்டாவது பாகம் விவரிக்கிறது.
ஜெர்மன் ஆட்சியாளர்களை எதை வெற்றிகொள்ள இந்தப் போரை தொடங்கினார்களோ என்பது ஒரு குழப்பத்தையே அளிக்கிறது. அருகில் இருக்கும் நாடுகளைப் பயப்படுத்தவும் தன்னை வலிமையானவனாகக் காட்டவும் இந்தப் போரை ஜெர்மனி முன்னெடுத்து சென்றதை உணரமுடிகிறது.
இருபிரிவாகப் பிரிந்திருந்த நாடுகளின் இராணுவ வலிமையையும், வீரர்களைத் திரட்டும் முறையையும் சொல்லும் பகுதியில் தேசபக்தி என்ற பெயரை ஆட்சியாளர்கள் மக்களின் மனதில் எப்படி ஆழஉணர்ச்சியைத் தூண்டும் காரணியாக்கினார்கள் என்பதையும் அறிய முடிகிறது. தேசபக்தி என்ற பெயரில் தற்போது நம்நாட்டிலே நடக்கும் கூத்தை தான் நேரடியாகப் பார்க்கின்றோமே.
போர் காட்சிகளும், இருபிரிவாகப் பிரிந்த நாடுகள் எப்படி மாறி மாறி நிலப்பரப்பை ஆக்கிரமிக்க, மக்களின் ரத்தத்தை ஆறாக ஓட விட்ட தீராத ரணத்தையும் வலிகளையும் முற்றாக விவரிக்கிறது மூன்றாம் பாகத்தில்.
இந்தப் போரை காரணமாக்கி ஐரோப்பாவிற்கு அப்பால் இருக்கும் காலனியின் ஆதிக்கத்தைக் கைப்பற்ற முயல்வதும், நேச நாடுகளின் அணியில் கடைசியாக அமெரிக்கா இணைந்தது பலமாக மாறி ஜெர்மனியை சமாதான பக்கத்திற்கு இழுத்து வருவதையும், இந்தச் சமாதான உடன்படிக்கை எதனால் முன்மொழியப்பட்டது என்பதற்குப் பின்னால் இருக்கும் தொடர் தோல்விகளும் இலட்ச கணக்கான ஜெர்மனிய மக்களின் உயிர் இழப்பும், நாட்டை உலுக்கும் பொருளாதார வீழ்ச்சியும் என்று பல காரணங்கள் குவிகிறது.
புத்தகத்தில் கொடுக்கப்பட்ட கணக்குகளைப் பார்க்கும் போது துண்டு நிலத்திற்கா இவ்வளவு உயிர்களின் இழப்பு என்றாகிறது.
போருக்குப் பின்பான காலகட்டத்தைப் பற்றி விவரிக்கிறது நான்காம் பாகம். போரில் ஈடுபட்ட அனைத்து நாடுகளும் குற்றங்களிலிருந்து தப்பி ஜெர்மனி மட்டுமே இப்போரை தொடங்கியது என்ற பிம்பத்தை நிலைநிறுத்தி மொத்த பழியையும் அதன் மீது திணித்ததே இரண்டாம் போருக்கான பாதையை வடிவமைத்துவிடுகிறது. இப்போரினால் பலன் அடைந்தது என்னவோ அமெரிக்கா.
ஆட்சியாளர்களின் ஏதேச்சை முடிவு, முதலாளித்துவத்தின் உச்சம் என்று சுழலும் அந்த நேரத்தில் ரஷ்யாவில் லெனின் எழுச்சியும், காலனி நாடுகளை எல்லாம் இப்போருக்கு எப்படி உபயோகப்படுத்திக் கொண்டார்கள் என்பதைச் சொல்லிக் கொண்டே இழப்புகளின் பட்டியலை நீட்டும் போது அதிர்வு தான் உண்டாகிறது.
வரலாறு என்றுமே சுவராசியமான ஒரு பகுதி... அவை கேட்டாலும் சரி,பார்த்தாலும் சரி, அல்லது படித்தாலும் சரி,அவற்றுக்கு முடிவேயில்லை... ஒரு நொடி முடிந்தவுடன் அது வரலாறாக மாறுகிறது.அப்படி ஒவ்வொரு நொடியாக இல்லாமல் நான்கு வருட வரலாற்றை 328பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமாக நமக்கு தந்துள்ளார் திரு. மருதன் அவர்கள். நான்கு வருடம் நடந்த ஒரு கேலிக்கூத்தான முதலாம் உலக போரை மிகவும் எளிமையாகவும், சுவாரசியமாகவும் தந்துள்ளார் திரு. மருதன். இப்புத்தகத்தை படிக்கும்போதே என்னுள்ளேயும் தேச உணர்சிகள் மேலோங்கி எழுகின்றன.துப்பாக்கியை தூக்கிக்கொண்டு நாமும் போருக்கு போவதுபோல ஒரு உணர்வு. உண்மையில் முதலாம் உலகப் போர் ஒரு சோகமான நினைவே(பொதுமக்களுக்கு). அதற்கான காரணத்தை யோசித்தால் அவை கேலிக்கூத்தாக தான் இருக்கிறது. இப்புத்தகம் அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. முதலாம் உலகப்போரை படித்த முடித்த உடன் இதன் தொடர்ச்சியான இரண்டாம் உலகப்போரையும்(நிஜத்திலும் தொடர்ச்சியே) படிக்கத் தூண்டுகிறது.
இந்த நூலை வாசிக்கும் முன்பு வரை, முதல் உலக போருக்கு காரணம், ஆஸ்திரிய இளவரசரை, செரிபியா தீவிரவாதி கொன்றது தான் என்றே நினைத்திருந்தேன். ஆனால், அந்த நிகழ்வு ஒரு trigger மட்டுமே என்பதும், அதற்கு முன்பே பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகள் போருக்கு தயாராக இருந்ததும், இந்த நாடுகளுக்குள் இருந்த நட்பும், பகைமையும் இந்த நூலில் விரிவாக விளக்கப்பட்டு உள்ளது.
நூலை 4 பகுதிகளாக பிரித்துள்ளார் ஆசிரியர். முதல் பாகம் இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பியாவின் முக்கிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி, அஸ்திரியா-ஹங்கேரி ஆகிய நாடுகளை பற்றியது. ஒவ்வொரு அத்தியாயமும், இந்த ஒவ்வொரு நாட்டின் அன்றைய பொருளாதாரம், அரசியல், ராணுவ பலம் ஆகியவற்றை நமக்கு சொல்கிறது. இந்த விரிவான அறிமுகமே மிக முக்கியம். அன்றைய ஐரோப்பியவை புரிந்து கொள்ளாமல் முதல் உலகப் போரை புரிந்துகொள்ள முடியாது.
இரண்டாம் பாகம் முழுக்க போருக்கான காரணங்கள், பல்வேறு ஒப்பந்தங்கள், ஒவ்வொரு நாட்டின் முன்தயாரிப்புகள் அனைத்தையும் விளக்குவதோடு, அஸ்திரிய இளவரசர் படுகொலையையும் சொல்கிறது.
மூன்றாம் பாகம் முழுக்க போர்க்களம் பற்றியது. 1914 தொடக்கம் முதல் 1918 போர் இறுதி வரை நடந்த பல்வேறு போர்களையும், அதன் விளைவுகளையும், இழப்புகளையும் அலசுகிறது. மேற்கு முனை போர்கள், கிழக்கு முனை போர்கள், கடல் போர்கள் இந்த போர்க்களின் வெற்றி தோல்வியும் இந்த பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
நான்காம் பாகத்தில், முதல் உலக போரில் இந்தியாவின் பங்கு, அமெரிக்காவின் பங்கு, போரின் முடிவு, அதனால் ஏற்பட்ட இழப்பு, ராணுவம��� & மக்களின் துயரம், உயிரிழப்பு கணக்குகள், பொருளாதார இழப்புகள் அனைத்தும் அடங்கி உள்ளது.
முதல் உலகப்போர் கிழக்கு ஐரோப்பாவில் ஒரு சி���ு தீப்பொறியாக பிறந்தது. பிறகு ஐரோப்பா முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. அந்த வகையில், முதல் உலகப் போர் என்பது பெருமளவில் ஐரோப்பிய போர். மைய நாடுகளும், நேச நாடுகளும் அணி பிரிந்து கிழக்கு முனையிலும், மேற்கு முனையிலும் தொடுத்துக்கொண்ட போர். தங்கள் பிரதேசங்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றவும், புதிய பிரதேசங்களை கைப்பற்றுவும், அவர்கள் போரிட்டனர். ஐரோப்பிய நாடுகள் அதிகம் குவிந்து போரிட்டது மேற்கு முனையில் பிறகு கிழக்கு முனையில்.
ஒரு நாளைக்கு 5,600 சிப்பாய்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும். 1914-ல் தொடங்கி 1918 வரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 லட்சம். 86 லட்சம் மரணங்கள்.
உலகின் முதன்மை சக்தியாகத் தன்னை மாற்றிக் கொள்ள விரும்பியது ஜெர்மனி. ஏற்கெனவே அந்த இடத்தை வகித்து வந்த பிரிட்டன் இந்தச் சவாலை முறியடிக்க நினைத்தது. ஜெர்மனியைப் பழிவாங்க விரும்பியது பிரான்ஸ். பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் ஜெர்மனியின் பிரதேசங்கள் வேண்டும். செர்பியர்களுக்குத் தனி நாடு வேண்டும் ஆஸ்திரியாஹங்கேரிக்கு பால்கன் பிரதேசத்தை ஆள வேண்டும். ரஷ்யாவுக்கும். கூடுதலாக, ஜெர்மனியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். தனது இழந்து அதிகாரத்தைத் திரும்பப்பெற்றாகவேண்டிய அவசியத்தில் இருந்தது ஒட்டமான் சாம்ராஜ்ஜியம். ஆனால் போரின் முடிவில், எந்தவொரு நோக்கமும் நிறைவேறவில்லை.
முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போரை கொண்டு வந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால், 1914 தொடங்கி 1945 வரை ஒரே ஒரு உலகப் போர்தான் நிகழ்த்தப்பட்டது. மத்தியில் சில ஆண்டுகள் இடைவேளையுடன்.
இரண்டாம் உலகப் போருக்கான காரணமாக ஹிட்லரை சுட்டிக் காட்டியதைப் போன்று முதல் உலகப் போருக்கான காரணமாக ஒரு தனி நபரையோ அல்லது தனி ஒரு நாட்டையோ குறிப்பிட்டு சொல்ல முடியாது என்பதோடு "முதல் உலகப் போர்" புத்தகம் தொடங்குகிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கிடையே "மௌனமாக" நிலவி வந்த யார் பெரியவன் என்ற போட்டியும், மற்ற நாடுகளை காலனியக்கி கொள்வதின் மூலம் தனது நாட்டின் பொருளாதாரத்தை பெருக்கி கொள்ளும் திட்டமும் முதல் உலகப் போருக்காக எல்லா நாடுகளையும் தயார்படுத்தி இருந்தன.
300-க்கும் மேலான அரசாங்கங்களாக பிளவுண்டு கிடந்த ஜெர்மன் அரசாங்கம் மற்ற ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்தும் மற்ற சிறு சிறு ஜெர்மன் அரசாங்கங்களின் கலவரங்களில் இருந்தும் தன்னை பாதுகாத்து கொள்ள நினைத்தது. நெப்போலியன் தலைமையில் வலிமையாக இருந்த பிரான்ஸை ஜெர்மனின் ஒரு பகுதியான பிரஷ்யா எதிர்க்க, நெப்போலியனின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத பிரிட்டனும் ஜெர்மனின் மற்ற அரசாங்கங்களும் பிரஷ்யாவிற்கு உதவ 1815ஆம் ஆண்டு நெப்போலியன் போரில் தோற்கடிக்கப்படுகிறார். இதனால் ஜெர்மன் அரசாங்கங்களில் மிகவும் வலிமை பெற்ற அரசாங்கமாக பிரஷ்யா மாறுகிறது. 39 அரசாங்கங்களை கொண்ட தேசமாக ஒன்றுபட்ட ஜெர்மனி பிரஷ்யாவின் தலைமையில் உருவாகிறது.
1862 ஆம் ஆண்டு பிரஷ்யாவின் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பிஸ்மார்க் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியை வலுவான, பொருளாதாரமிக்க நாடாக மாற்றினார். ஆனால் அதற்கு தடையாக இருந்த ஜனநாயகத்தை வெறுத்தார். பிரான்சின் ஐரோப்பிய ஆதிக்கத்தை முறியடிக்க நினைத்த பிஸ்மார்க், முதல் அடியை பிரான்ஸ் எடுத்து வைக்கட்டும் என்று காத்திருக்க, பிரஷ்யாவின் (ஜெர்மனியின்) வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ளாத பிரான்சும் பிரஷ்யா மீது போர் தொடங்கியது. அதற்காகவே காத்திருந்த பிஸ்மார்க், பிரான்சின் வட கிழக்குப் பகுதியில் படைகளைத் திரட்டி பிரான்ஸை முறியடித்து, பிரான்சின் முடியாட்சியை முடித்து வைத்தார். பிரான்சில் புதிதாக ஆட்சியில் அமர்ந்த ஜனநாயக அரசு போரை நிறுத்திக் கொள்ளுமாறு பிஸ்மார்க்கை கேட்க அதற்கு அவர் சில நிபந்தனைகள் விதித்தார். முதலில் அதனை ஏற்க மறுத்த பிரான்ஸ், போரை தொடர்ந்து சமாளிக்க முடியாமல் மாபெரும் தொகையை இழப்பீடாகவும் இருநூறு ஆண்டுகளாக பிரான்சின் ஆதிக்கத்தில் இருந்த ஆல்சேஸ்லோரெயின் பகுதிகளை பிரஷ்யாவிற்கு விட்டுக்கொடுக்க சம்மதித்தது. பிஸ்மார்க்கின் இந்த ஆக்கிரமிப்பு முதல் உலகப் போருக்கான காரணங்களில் முக்கியமான ஒன்று.
ஆஸ்திரிய-ஹங்கேரியின் சாம்ராஜ்யத்தில் இருந்த பல மொழி பேசும் மக்கள் போராட்டத்தில் குதிக்க எவற்றை அதிகார பூர்வ மொழியாக தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்க முடியாமல் திணறினார் ஆஸ்திரிய-ஹங்கேரியை ஆட்சி செய்த பிரான்ஸ் ஜோசப். இது பால்கன் மொழிப் பிரச்சனை என அழைக்கப்படுகிறது. முதல் உலகப் போருக்கான காரணங்களில் முக்கியமான ஒன்று இது.
ஆஸ்திரியாவால் பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்ட போஸ்னியா-ஹெர்சகோவ்னியா பகுதியின் தலைநகர் சரஜேவோவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார் ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸ் பெர்டினான்ட் மற்றும் அவரது மனைவி. ஆஸ்திரியா மீது கடும் கோபத்தில் இருந்தார்கள் செர்பிய மக்கள். ஒரு புரட்சி குழுவை சேர்ந்த ஒரு இளைஞன் இளவரசரையும் அவரது மனைவியையும் காரில் ஊர்வலமாக வரும் போது படுகொலை செய்ய பற்றிக் கொண்டது முதல் உலகப் போருக்கான தீ.
செர்பியா மீது ஆஸ்திரிய-ஹங்கேரி போர் தொடுக்க, ஜெர்மனி அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க, ரஷ்யா ஆஸ்திரிய-ஹங்கேரியின் ஆக்கிரமிப்பை தடுக்க அப்படியே பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, துருக்கி, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என ஒவ்வொரு நாடாக ஒவ்வொரு காரணங்களுக்காக முதல் உலகப் போரில் பங்கு கொள்ளத் தொடங்கின.
1914 தொடங்கி மாபெரும் உயிர் சேதத்தையும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்திய முதல் உலகப் போர் 1918 நவம்பர் 11 ஜெர்மனி நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி நாடுகளிடம் சரணடைந்தது. ஆனால் ஜெர்மனியின் மீது பல வித கட்டுபாடுகளும் பல குற்றச்சாட்டுகளும் நேச நாடுகளால் வைக்கப்பட்டன. 1919 ஜூன் 28-ல் வெர்சைல்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்ட ஜெர்மனி மாபெரும் தொகையை இழப்பீடாக நேச நாடுகளுக்கு கொடுக்க வேண்டும் எனவும், தனது ராணுவத்தை அதிகரிக்க கூடாது எனவும் பல நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது. ஜெர்மனியின் வரலாற்றில் மாபெரும் கரும்புள்ளியாக இந்த வெர்சைல்ஸ் ஒப்பந்தம் கருதப்பட்டது. ஜெர்மனிக்கு நிகழ்ந்த இந்த அவமானமே இரண்டாம் உலகப் போருக்கான முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது.
முதல் உலகப்போர் ஒரு தலைமுறை இளைஞர்களை அடியோடு அழித்தொழித்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கோடி பேரை போர்க்களத்தில் புதைத்திருக்கிறது. பல கோடி பேரை நேரடியாக பாதித்திருக்கிறது.
எதற்காக இப்போர் மூண்டது என்பதற்கு இன்றளவும் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தங்களில் யார் சிறந்தவர் என்பதைக் காட்டிக்கொள்வதற்காகவும், யாருடைய அதிகாரம் உலகை ஆள வேண்டும் என்கிற ஆதிக்க எதேச்சதிகார பகட்டின் பலனாகவும்தான் இந்த யுத்தம் தொடங்கியிருக்கிறது என்பதை கண்கூடாக காண இயலுகிறது.
ஆஸ்திரிய இளவரசர் கொல்லப்பட்டதை எரிகிற தீயில் எண்ணெயின் தூண்டுகோலாக எடுத்துக்கொண்டு தொடங்கப்பட்ட இப்போரின் முந்தைய சூழலையும், கலந்துகொண்ட ஒவ்வொரு நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் புரட்சி மனோநிலைகளையும் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார் மருதன்.
இப்போரில் முதன்முதலாக நச்சுவாயு அறிமுகம் செய்யப்பட்டது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு குருதி வழிந்தபடி வீரர்கள் ச��ருண்டு விழுந்தார்கள். மனதை உலுக்கும் கோரசம்பவங்கள் அரங்கேறின. கூர்வாள் துப்பாக்கியில் ஏன் என்பதற்கு விளக்கம் தரப்பட்டது. எந்திரத் துப்பாக்கிகளும் டாங்கிகளும் கொத்து கொத்தாக மனிதர்களைக் கொன்றன.
அதிகார மையங்களும், தலைமைகளும் வழக்கம்போல் திட்டங்கள் தீட்டுவதும் பார்வை செய்வதுமாய் இருந்தன. அப்பாவி மக்களும், சிப்பாய்களும் அங்கே சின்னாபின்னமாகிப் போனார்கள்.
போர்க்களத்தைவிட ஒளிந்துகொண்டு தாக்கும் பதுங்குக்குழிகள் எவ்வளவு மோசமானதாக இருந்திருக்கின்றன! அங்கே பெரிய எலிகள் காயப்பட்ட வீரர்களைத் துண்டாடியிருக்கின்றன. கண்முன்னே நண்பர்களின் குடும்பத்தாரின் உடல்களை குதறிக் கிழித்தன. நிம்மதியாக உறங்கமுடியாமல், மூட்டைப் பூச்சிகளின் மத்தியில் மர்மக்காய்ச்சலின் பிடியில் .. பரிதாபம் !!
போர் முடிந்தபோதும்கூட சிறைக்கைதிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். வதைக்கப்பட்டார்கள். பலர் வாழ்நாள் சிறையில் அடிமைத் தொழில் செய்து அங்கேயே மடிந்தார்கள். இறுதிச் சடங்குக்காகக்கூட உடல்களைத் தேட முடியாமல் காண முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார்கள்!
நெஞ்சை உலுக்கும் சம்பவங்களின் தொகுப்பாகவும், ஆரம்பப் புள்ளி முதல் இறுதிக்கட்டம் வரை நடந்த செய்திகளின் வரலாற்றுத் தொகுப்பாகவும் இந்நூல் விளங்கிற்று!
The book timelines the whole first world war as simple as possible.
Asks all the basic questions of why and how all of it happened and tries to answer them clearly.
The split up of the chapters - to start with late 19th century Europe and pass through the major countries Britain, France, Germany, Austria Hungary, Russia, Italy, about what the countries were like right before the war, their economy, their political agenda , their internal & external conflicts AND then to move ahead to the circumstances that actually triggered the war AND the beginning of the war and how it progressed and cascaded within months into an all-Europe war and soon into a World War AND then to the major war fronts, battles, types of war, casualties AND the progress during the course of the war, battles fought, battles lost, battles won, areas captured, areas lost, the weapons and tactics used, the decisions taken, the soldiers, the people, the machinery everything AND finally to the circumstances that lead to the end of the war, the self declared winners, the forced losers, the economical impact, civilian impact and many many inputs on how the war ended and what things were like when it finally did - had been cleverly done.
It doesn't make you a WW1 expert - I think nothing does at this point - but gives you enough content to have a basic understanding of the late 19th century and early 20th century Europe and its conflicts that eventually ended up in WW1
The First World War, a cataclysmic event that shaped the course of the 20th century, is a topic of such vast proportions that it often defies comprehensive understanding. However, "Mudhalam Ulaga Por" rises to the challenge, providing a bird's eye view of the war, the events that precipitated it, and the profound changes it wrought on the world stage.
The narrative, while comprehensive in its scope, does at times betray the author's socialist/communist leanings. While such biases are not uncommon in authors, the frequency of their manifestation in this work does tend to become tiresome. It is as though the author is attempting to fit the events of the war into a preconceived ideological framework, a practice that can often lead to a skewed interpretation of events.
However, despite this minor quibble, "Mudhalam Ulaga Por" serves as an excellent introduction to the First World War. It provides a comprehensive overview of the war, its causes, and its aftermath, making it an invaluable resource for anyone seeking to understand this defining event of the 20th century.
In conclusion, "Mudhalam Ulaga Por" provides a comprehensive overview of the First World War. Despite the author's occasional ideological bias, the book stands as a testament to the author's skill and dedication to the pursuit of historical truth.
Really good book to understand why first world war was started. Lots of information shared in this book and India's stand to support Britain is well mentioned.
I read the beginning pages thrice to get into this book (period).. Seriously awesomely marudhan... Unga historical implementation rombave nalarku... But neraya matter irukradhala easy ah marandurudu:( again read panalam... Good intro to 1st world war...!